04-11-2006, 10:14 AM
நிர்மலன் கூறிய பல விடயங்களில் எனக்கும் உடன் பாடு உண்டு.ஆனால் இந்த படித்தவர்கள்,படியாதவர் என்ற பிரிவினையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது.ஒருவருக்கு முதலில் தேவை நேர்மை, அவர் எந்தளவு படித்தவராக இருந்தாலும் நேர்மை அற்றவர் என்றால் அங்கே பல விதமான மோசடிகள்,ஊழல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.ஆகவே பொறுப்பானவர்கள் திறமயானவராகவும், அறிவுள்ளவராகவும் அனைவரையும் அரவணைத்துப் போவபவராகவும் இருக்க வேண்டும்.ஆனால் புலம் பெயர்ந்தவர்களில் ,படித்தவர்கள் எத்தினை பேர் முழு நேரமாக தேசியத்திற்கு உழைக்கத் தயாராக இருகின்றனர்.எத்தனை பேர் தாம் பார்க்கும் வேலைகளை விட்டுவிட்டு முழு நேர ஊழியராக இருக்க உடன்படுவர்?
புலத்தில் நிர்வாகக் கட்டமைப்பு ஒன்று அவசியம்.திறமையானவர்கள், நேர்மையாக நடப்பவர்கள் உள்வாங்கப் பட வேண்டும்.ஆனால் இவர்களை என்னென்று அடையாளம் காண்பது.யார் இவர்களை நியமிப்பது?ஏற்கனவே இருப்பவர்களை புறந்தள்ளாமல் எவ்வாறு இதனை மேற்கொள்வது.இவ்வாறு புறந்தள்ளப்பட்டவர்கள் ,தமது சுய நலத்தால் தேசியதிற்கு எதிராக வேலை செய்ய மாட்டார்களா?இவர்களை எதிர்ச் சக்திகள் பயன் படுத்த மாட்டாதா?இப்படி பல பிரச்சினைகள் இருகின்றன.
மொத்தத்தில் புலத்தில் நிர்வாக மறுசீரமைப்பு என்பது அவசியமானதாகவே இருக்கிறது.
புலத்தில் நிர்வாகக் கட்டமைப்பு ஒன்று அவசியம்.திறமையானவர்கள், நேர்மையாக நடப்பவர்கள் உள்வாங்கப் பட வேண்டும்.ஆனால் இவர்களை என்னென்று அடையாளம் காண்பது.யார் இவர்களை நியமிப்பது?ஏற்கனவே இருப்பவர்களை புறந்தள்ளாமல் எவ்வாறு இதனை மேற்கொள்வது.இவ்வாறு புறந்தள்ளப்பட்டவர்கள் ,தமது சுய நலத்தால் தேசியதிற்கு எதிராக வேலை செய்ய மாட்டார்களா?இவர்களை எதிர்ச் சக்திகள் பயன் படுத்த மாட்டாதா?இப்படி பல பிரச்சினைகள் இருகின்றன.
மொத்தத்தில் புலத்தில் நிர்வாக மறுசீரமைப்பு என்பது அவசியமானதாகவே இருக்கிறது.

