04-07-2006, 05:33 AM
திருகோணமலை தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் வன்னியசிங்கம் விக்னேஸ்வரன் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திருமலை இலங்கை வங்கியின் பிரதான கிளைக்குள் அவர் நுழைந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
திருகோணமலை துறைமுக காவல்நிலையம் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு இடையில் உள்ள துறைமுக உள்வீதியில் இந்த வங்கி அமைந்துள்ளது. இது சிறிலங்கா இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாகும்.
இரண்டு இராணுவ சோதனைச் சாவடிகளுக்கு இடையிலும் திருமலை துறைமுகத்துக்கு எதிரே உள்ள கடற்படை முகாமுக்கு அருகாமையிலும் இந்தப் படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது.
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் இடத்திற்கு தேசியப் பட்டியலுடாக விக்கினேஸ்வரனை நாடாளுமன்ற உறுப்பினராக இன்று அறிவிக்க இருந்த நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
விக்கினேஸ்வரன் படுகொலையைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்தில் திடீரெனத் திணிக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றக் கோரும் போராட்டங்களை கடந்த ஆண்டு விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை முனைப்புடன் முன்னெடுத்து நடத்தியது.
அனைத்து தமிழ்த் தேசிய எழுச்சி நிகழ்வுகளிலும் பங்கேற்று தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கான குரலை உரத்து முழக்கமிட்டவர் விக்கினேஸ்வரன்.
-புதினம்
விக்னேஸ்வரனுக்கு கண்ணீர் அஞ்சலி
திருமலை இலங்கை வங்கியின் பிரதான கிளைக்குள் அவர் நுழைந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
திருகோணமலை துறைமுக காவல்நிலையம் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு இடையில் உள்ள துறைமுக உள்வீதியில் இந்த வங்கி அமைந்துள்ளது. இது சிறிலங்கா இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாகும்.
இரண்டு இராணுவ சோதனைச் சாவடிகளுக்கு இடையிலும் திருமலை துறைமுகத்துக்கு எதிரே உள்ள கடற்படை முகாமுக்கு அருகாமையிலும் இந்தப் படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது.
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் இடத்திற்கு தேசியப் பட்டியலுடாக விக்கினேஸ்வரனை நாடாளுமன்ற உறுப்பினராக இன்று அறிவிக்க இருந்த நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
விக்கினேஸ்வரன் படுகொலையைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்தில் திடீரெனத் திணிக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றக் கோரும் போராட்டங்களை கடந்த ஆண்டு விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை முனைப்புடன் முன்னெடுத்து நடத்தியது.
அனைத்து தமிழ்த் தேசிய எழுச்சி நிகழ்வுகளிலும் பங்கேற்று தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கான குரலை உரத்து முழக்கமிட்டவர் விக்கினேஸ்வரன்.
-புதினம்
விக்னேஸ்வரனுக்கு கண்ணீர் அஞ்சலி
,
,
,

