04-07-2006, 05:25 AM
திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் திரு.வ. விக்னேஸ்வரன் அவர்கள் இன்று காலை 9.20 மணியளவில் திருகோணமலை பிரதான வீதியில் உள்ள மக்கள் வங்கி கிளைக்கு அருகில் வைத்து சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
(மேலதிக விபரம் இணைப்பு)
வழமைபோல தனது அலுவலக கடமைக்கு சென்று கொண்டிருந்த போது உந்துருளியில் வந்தவர்கள் இவர் மீது சரமாரியாக துப்பாக்கி சூடுகளை நடத்தியுள்ளனர்.
தலையில் மூன்று துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் இவர் பணிபுரிந்த வங்கியான திருகோணமலை இலங்கை வங்கியின் நுழை வாயிலிலேயே இவர் உயிரிழந்தார்.
தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் செல்வதற்கு ஒரே ஒரு வழிதான் இருந்துள்ளது. அந்த வீதியில் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 100 மீட்டர் தொலை சிறீலங்கா காவல்துறை வீதித்தடையுடனான சோதனைச் சாவடி ஒன்று உள்ளது. இந்தச் சோதனைச் சாவடியிலிருந்து 50 மீட்டர்கள் தொலைவில் சிறீலங்கா கடற்படையின் சோதனைச் சாவடியும், அடுத்த 50 மீட்டர் து}ரத்தில் துறைமுக காவல்துறையினரின் சோதனைச் சாவடியும் உள்ளது. இம் மூன்று சோதனைச் சாவடிகள் ஊடகவும் கொலையாளிகள் இலகுவாகத் தப்பிச் சென்றதி லிருந்து இக்கொலையில் சிறீலங்கா படைகளின் முழுமையான ஒத்துழைப்புடன் புலனாய்வுப் பிரிவினரே நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படுகிறது.
51 அகவையுடைய திரு. விக்னேஸ்வரன் அவர்கள், யாழ். நயினாதீவை பிறப்பிடமாகக் கெண்டவர். கலைப்பட்டதாரியான இவர் திருமண பந்தத்தின் மூலம் திருமலையில் குடியேறினார். தற்போது அன்புவழி புரத்தில் வசித்து வந்த இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்களிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறைகளிற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த விக்னேஸ்வரன் அவர்கள் திருமலை தமிழ் மக்களின் மத்தியில் தமிழ் தேசியத்திற்காக உழைத்து வந்தவர்.
கடந்த டிசப்பரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் இடத்திற்கு திரு.விக்னேஸ்வரன் அவர்களே நியமிக்கப்பட இருந்த நிலையில், இன்று சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
செய்திகள்: சங்கிதி
(மேலதிக விபரம் இணைப்பு)
வழமைபோல தனது அலுவலக கடமைக்கு சென்று கொண்டிருந்த போது உந்துருளியில் வந்தவர்கள் இவர் மீது சரமாரியாக துப்பாக்கி சூடுகளை நடத்தியுள்ளனர்.
தலையில் மூன்று துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் இவர் பணிபுரிந்த வங்கியான திருகோணமலை இலங்கை வங்கியின் நுழை வாயிலிலேயே இவர் உயிரிழந்தார்.
தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் செல்வதற்கு ஒரே ஒரு வழிதான் இருந்துள்ளது. அந்த வீதியில் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 100 மீட்டர் தொலை சிறீலங்கா காவல்துறை வீதித்தடையுடனான சோதனைச் சாவடி ஒன்று உள்ளது. இந்தச் சோதனைச் சாவடியிலிருந்து 50 மீட்டர்கள் தொலைவில் சிறீலங்கா கடற்படையின் சோதனைச் சாவடியும், அடுத்த 50 மீட்டர் து}ரத்தில் துறைமுக காவல்துறையினரின் சோதனைச் சாவடியும் உள்ளது. இம் மூன்று சோதனைச் சாவடிகள் ஊடகவும் கொலையாளிகள் இலகுவாகத் தப்பிச் சென்றதி லிருந்து இக்கொலையில் சிறீலங்கா படைகளின் முழுமையான ஒத்துழைப்புடன் புலனாய்வுப் பிரிவினரே நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படுகிறது.
51 அகவையுடைய திரு. விக்னேஸ்வரன் அவர்கள், யாழ். நயினாதீவை பிறப்பிடமாகக் கெண்டவர். கலைப்பட்டதாரியான இவர் திருமண பந்தத்தின் மூலம் திருமலையில் குடியேறினார். தற்போது அன்புவழி புரத்தில் வசித்து வந்த இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்களிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறைகளிற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த விக்னேஸ்வரன் அவர்கள் திருமலை தமிழ் மக்களின் மத்தியில் தமிழ் தேசியத்திற்காக உழைத்து வந்தவர்.
கடந்த டிசப்பரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் இடத்திற்கு திரு.விக்னேஸ்வரன் அவர்களே நியமிக்கப்பட இருந்த நிலையில், இன்று சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
செய்திகள்: சங்கிதி
[size=14] ' '

