03-30-2006, 06:10 AM
பிறேம் நீங்களும் இங்கு சிலரும் ஒரே பார்வையில் இந்த செய்திகளை பார்க்கிறீர்கள். இவர்களை போல தான் டக்கிளஸ் ஆனந்த சங்கரி போன்றவ்கள் ஒரு காலத்தில் இருந்தார்கள் அவர்களை உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை தமிழ் தேசியத்தை சொல்லி கொண்டு துரோகி டக்ளஸ் துரொகி ஆனந்த சங்கரி என்று சொல்லிய ஊடகங்களையே சாரும். இல்லையேனில் ஒரு மூலையில் எங்கோ பெட்டிப்பாம்பாய் அடங்கி கிடந்திருப்பார்கள். நாய்கள் குரைக்க தான் செய்யும் அதற்காய் நாம் திருப்பி குரைப்பதில் பயனில்லை. அதை குரைக்காமல் நிறுத்த, அல்லது தன் பாட்டிலே அது குரைப்பதை நிறுத்த நாங்கள் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும். மக்களை விழிப்புணர்வு படுத்துவது தவறல்ல. மக்களை விழிப்புணர்வு படுத்துவதங்க்கு முன், அவர்களை இச் செயற்பாடுகளில் இருந்து ஒதுக்கி விட்டால் அல்லது, ஒழித்து விட்டால் மக்களுக்கு விழிப்புூட்ட வேண்டிய அவசியம் இல்லை. இங்கே போடப்பட்ட செய்தியை பார்க்கும் அவர்களுக்குள் ஒரு உத்வேகம் வருமே ஒழிய பயம் வரப்போவதில்லை. இதை நீங்கள் புரிய மறுக்கின்றீர்கள். தமிழீழ போராளிகளோ, தலைவரோ, துரோகிகளை பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் அவர்களின் நடவடிக்கைகளுக்கு பின் தான் தெரியும் அவர்கள் மௌனத்தின் மறு மொழி. அது போல தான் நாமும் செய்ய வேண்டும். அதை விடுத்து சும்மா கத்துவதில் எந்த பிரயோசனமும் இல்லை. அத்தோடு தமிழ் மக்கள் முட்டாள்களாக இருந்த காலம் மலையேறிப் போய்விட்டது என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். அடிக்க அடிக்க அடிவாங்கி காலமல்ல இது அடித்தாலும் திருப்பி அடிப்போம் என்று சொல்லும் காலத்தில் துரோகிகள் பற்றி மக்கள் விழிப்புணர்வின்றி இருக்கின்றனர் என்று நினைத்தால்... அது என் தவறல்ல.
குறிப்பு: ஒரு துரோகியை உருவாக்க மொழி தெரியாத, அன்னியனால் முடியுமெனில், ஒரு தன்மானத்தமிழனாக ,தேசியத்தின் பால் ஈர்க்க ஏன் தமிழர்டகளால் முடியவில்லை என்பதை பற்றியும் சிறிது சிந்தியுங்கள்.
குறிப்பு: ஒரு துரோகியை உருவாக்க மொழி தெரியாத, அன்னியனால் முடியுமெனில், ஒரு தன்மானத்தமிழனாக ,தேசியத்தின் பால் ஈர்க்க ஏன் தமிழர்டகளால் முடியவில்லை என்பதை பற்றியும் சிறிது சிந்தியுங்கள்.
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

