03-26-2006, 09:09 AM
நம்மட சனத்திட்டயே போறதவிட பிள்ள ரமா செல்லுற மாதிரி நாம வாழுற நாட்டைச்சேர்ந்த அல்லது வேறு உதவி நிறுவனங்களிட்ட போய் நம்மட பிரச்சினையயும் சொல்லி உதவி கேக்கிறதுதான் புத்திசாலித்தனம். நம்மட சனத்தக் குறை சொல்லக்கூடாது. புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் உணர்வு மங்காம வாழுதுகள். அதுகள் கொட்டிக்குடுக்கிற படியாத்தானே நம்மட போரட்டத்தையும் கொண்டு இழுக்கக் கூடியமாதிரி இருக்குது. திரும்பவும் அதுகளிட்டயே போய் அதத்தா இதத்தா எண்டா அதுகளும் வாழுறத்துக்கு எங்க போறது. இந்த உதவி நிறுவனங்கள் இருக்கெல்லோ அவையள் அரசாங்கத்திட்டயும் இருந்து குறிப்பிட்ட அளவு நிதியளத் திரட்டீனம். அப்ப நாம கட்டுற வரில இருந்துதானே வாங்கப் போறம். அதவிட இன்னொண்டும் இருக்கு. அது என்னண்டா இப்பிடி பன்னாட்டு நிறுவனங்களையும் நம்ம பக்கம் வந்து பார் எண்டு இழுக்கேக்க நம்மட பிரச்சினையள நாமளும் நம்மால முடிஞ்ச அளவு வெளில காட்டலாமில்ல. அப்ப இந்த அரசுகளும் ஒருக்கா எட்டிப்பாக்க காரணம் இருக்கும். இது ஒரு அணிலின்ர முயற்சிதான் எண்டாலும் அதயும் செய்து பாக்கலாமே. இப்ப உலகம் நம்மள நோக்கிப் பார்வைய திருப்பினாலும் அத அழுத்தமா பதிய வைக்க ஒரு சின்ன முயற்சியாவும் இருக்குமில்ல. நம்மட சனமும் எத்தினைக்குத்தான் குடுக்கிறது. என்னெண்டாலும் நாம நம்மட சனம் செய்யணும் எண்டு பாத்து ஓடுறம். அதுகளும் எத்தின வழிலதான் செய்யுறது.

