Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மறவர் கனவுகளை இறவாது செய்வோம்
#1
<span style='font-size:25pt;line-height:100%'>இன்னுயிர்தன்னை
நெய்யெனச்சொரிந்து
இலட்சியத்தீச்சுடர் காத்தவரே-உங்கள்
புகழுடல் உறங்கும் பூமியில்-வெற்றி
மலர்களைத்தூவிநாம் வணங்கிடுவோம்.

விதையெனமண்ணில் வீழ்ந்தவரே-உங்கள்
விதைகுழிகளில் வேர்பாய்ச்சி
வான்வெளி எங்கும் கிளைபரப்பி
விழுதெறிந்து வளர்வோம்
இனியென்றும் வீழ மாட்டோம்

காலக்கிண்ணமதில்-இனியும்
கனவுகளையா குடிப்போம்
இல்லை...இல்லை...
தலைவனின் தடங்களில்-விடுதலை
தேரிற்கு வடம் பிடிப்போம்.

நாமாண்ட மண்ணும்
எமையாண்ட தமிழும்
இனியொன்றும் மாழாது-எம்
உறவுகளைக்கொன்றபகை
இனியென்றும் வாழாது.

இது.....,
தமிழ்த்தென்றலின் வீடு
புலிப்புயல்கள் உலவும்காடு
பகையே....நீ...,
புறமுதுகுகாட்டி ஓடு
இலையேல்....,-இதுவே
உனக்குச்சுடுகாடு.

தானைத்தலைவனின்
விழிகளின் ஒளிதனில்
சுதந்திரப்பாதை ஜொலிக்கும்-அதில்
வேங்கைகள் தடம் பதிக்கும்
அடிமைத்தடைகளெலாம் தெறிக்கும்.

நாளைய விடியலில்
நமக்கெனச்சூரியன் உதிக்கும்
மாண்டவர் கனவுகள் பலிக்கும்
சுதந்திர ஒளியினில்
நமது தேசம் குளிக்கும்.

அப்போது...,
இன்னுயிர்தன்னை
நெய்யெனச்சொரிந்து
இலட்சியத்தீச்சுடர் காத்தவரே-உங்கள்
புகழுடல் உறங்கும் பூமியில்-வெற்றி
மலர்களைத்தூவி நாம் வணங்கிடுவோம்.
</span>
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.
Reply


Messages In This Thread
மறவர் கனவுகளை இறவாது செய்வோம் - by eezhanation - 03-26-2006, 08:46 AM
[No subject] - by Sujeenthan - 03-26-2006, 06:06 PM
[No subject] - by eezhanation - 03-27-2006, 08:04 AM
[No subject] - by Rasikai - 03-27-2006, 06:22 PM
[No subject] - by வர்ணன் - 03-27-2006, 10:39 PM
[No subject] - by eezhanation - 03-28-2006, 08:10 AM
[No subject] - by தூயவன் - 03-28-2006, 12:48 PM
[No subject] - by RaMa - 03-29-2006, 06:26 AM
[No subject] - by eezhanation - 03-29-2006, 10:12 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)