![]() |
|
மறவர் கனவுகளை இறவாது செய்வோம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: மறவர் கனவுகளை இறவாது செய்வோம் (/showthread.php?tid=434) |
மறவர் கனவுகளை இறவாது செய்வோம் - eezhanation - 03-26-2006 <span style='font-size:25pt;line-height:100%'>இன்னுயிர்தன்னை நெய்யெனச்சொரிந்து இலட்சியத்தீச்சுடர் காத்தவரே-உங்கள் புகழுடல் உறங்கும் பூமியில்-வெற்றி மலர்களைத்தூவிநாம் வணங்கிடுவோம். விதையெனமண்ணில் வீழ்ந்தவரே-உங்கள் விதைகுழிகளில் வேர்பாய்ச்சி வான்வெளி எங்கும் கிளைபரப்பி விழுதெறிந்து வளர்வோம் இனியென்றும் வீழ மாட்டோம் காலக்கிண்ணமதில்-இனியும் கனவுகளையா குடிப்போம் இல்லை...இல்லை... தலைவனின் தடங்களில்-விடுதலை தேரிற்கு வடம் பிடிப்போம். நாமாண்ட மண்ணும் எமையாண்ட தமிழும் இனியொன்றும் மாழாது-எம் உறவுகளைக்கொன்றபகை இனியென்றும் வாழாது. இது....., தமிழ்த்தென்றலின் வீடு புலிப்புயல்கள் உலவும்காடு பகையே....நீ..., புறமுதுகுகாட்டி ஓடு இலையேல்....,-இதுவே உனக்குச்சுடுகாடு. தானைத்தலைவனின் விழிகளின் ஒளிதனில் சுதந்திரப்பாதை ஜொலிக்கும்-அதில் வேங்கைகள் தடம் பதிக்கும் அடிமைத்தடைகளெலாம் தெறிக்கும். நாளைய விடியலில் நமக்கெனச்சூரியன் உதிக்கும் மாண்டவர் கனவுகள் பலிக்கும் சுதந்திர ஒளியினில் நமது தேசம் குளிக்கும். அப்போது..., இன்னுயிர்தன்னை நெய்யெனச்சொரிந்து இலட்சியத்தீச்சுடர் காத்தவரே-உங்கள் புகழுடல் உறங்கும் பூமியில்-வெற்றி மலர்களைத்தூவி நாம் வணங்கிடுவோம். </span> Re: மறவர் கனவுகளை இறவாது செய்வோம் - Mathuran - 03-26-2006 [quote=eezhanation][size=18]இன்னுயிர்தன்னை நாமாண்ட மண்ணும் எமையாண்ட தமிழும் இனியொன்றும் மாழாது-எம் உறவுகளைக்கொன்றபகை இனியென்றும் வாழாது. உங்கள் கவித உணர்வோட்டத்தை மேலும் கூட்டி செல்கின்றது. என்னால் கவி நடைபற்றி பேசிட தெரியாது ஆனால் உட் கரு மிகவும் ஆழமானது. தொடரட்டும் உங்கள் கவிப்பயணம். - Sujeenthan - 03-26-2006 நல்ல கவிதை. இது போன்ற கவிதைகளை அடிக்கடி எதிர்பார்க்கின்றோம். இந்த வரிகள் மிகவும் நன்றாக உள்ளது. Quote:இது....., - eezhanation - 03-27-2006 உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. சுஜீந்தன்,மதூரன். உங்கள் பாராட்டுக்கள் கிடைக்கும் வரை தொடர்ந்து எழுதுவேன். - Rasikai - 03-27-2006 ஈழநேசன் உங்கள் உணர்வுபூர்வமான கவிதை அருமை. தொடர்ந்து எழுதுங்க:ள்: - வர்ணன் - 03-27-2006 நல்லதொரு கவிதை ஈழநேசன் - நீண்டதொரு அர்த்தமற்ற அமைதியால் படிப்படியாக -எம்முள் சிலருக்கு படிப்படியாக மறந்து போகின்ற - அல்லது மறக்கவைக்க நடந்துகொண்டிருக்கின்ற சூழ்ச்சிகளிலிருந்து-தெளிவுற - இதுபோன்ற கவிதைகளை தொடர்ந்து தாருங்கள்! 8) - eezhanation - 03-28-2006 நன்றி...ரசிகை.,மற்றும், வர்ணன். உங்களின் பாராட்டுக்கள் உற்சாகமளிப்பனவாய் இருக்கின்றன. தொடர்ந்தும் எழுதுவேன். - தூயவன் - 03-28-2006 வசனங்களை அணிநடையாக எழுதியிருப்பது சிறப்பாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் சோதரா!! - RaMa - 03-29-2006 இது..... தமிழ்த்தென்றலின் வீடு புலிப்புயல்கள் உலவும்காடு பகையே....நீ...இ புறமுதுகுகாட்டி ஓடு இலையேல்....இ-இதுவே உனக்குச்சுடுகாடு. அழகான வரிகள் வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். - eezhanation - 03-29-2006 மிக்க நன்றி, தூயவன்...யார் என்ன ஆக்கம் எழுதினாலும் உடனே ஆஜராகி பாராட்டி விடுகிறீர்கள், ரமா, இந்தப்பெருந்தன்மை எல்லோருக்கும் வந்துவிடாது. மிக்க நன்றி. |