Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு
#1
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு


இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு அதிபர் சந்திரிகா குமாரதுங்கா சனிக்கிழமை இரவு உத்தரவிட்டார். ஏப்ரல் 2-ம் தேதி தேர்தல் நடைபெறும்.

நாடாளுமன்றத்துக்கு இன்னும் 4 ஆண்டுகள் ஆயுள் உள்ள நிலையில் கலைக்கப்பட்டுள்ளதால் விரைவில் தேர்தல் நடைபெறும். அதிபர் என்ற முறையில் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைக்க சந்திரிகா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. தேர்தல் நடைபெறும் வரை அவரது அரசு காபந்து அரசாக செயல்படும். முக்கியமான முடிவுகளை எடுக்க முடியாது. நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் இருந்தனர்.

2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து அவர் பிரதமரானார். அதிபராக சந்திரிகா பொறுப்பேற்றார். இருவருக்கும் இடையே அதிகாரப் போட்டி நீடித்து வந்தது.

விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சு நடத்துவது தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வந்தது. இந்நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க சந்திரிகா உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் எப்போது நடைபெறும் என்று தெரியவில்லை. தேர்தலை நடத்துவதுஇ சுதந்திரமான அதிகாரம் கொண்ட அதிகாரிகள் அடங்கிய அமைப்பின் பொறுப்பாகும்.

நன்றி : தினமணி

................
Reply


Messages In This Thread
இலங்கை நாடாளுமன்றம் க - by arun - 02-07-2004, 08:47 PM
[No subject] - by yarl - 02-07-2004, 09:02 PM
[No subject] - by kuruvikal - 02-08-2004, 10:23 AM
[No subject] - by Paranee - 02-08-2004, 01:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)