Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாரதியும் சோழியானும்!!
#30
sOliyAn Wrote:பாரதியார்: என்னையா.. என்ன.. ஏமம் சாமத்தில் பாரதி பாரதி என்று என்ன சத்தம்?!

(முறுக்கு மீசை துடிக்க, கண்கள் சிவப்பேற நின்றுகொண்டிருந்தான் பாரதி.)

சோழியான்: பாரதியாரே! நீர் எழுதிய பாட்டொன்றை எடுத்துவிடும்.. அந்த மெட்டுக்கு நான் ஒரு பாட்டெழுத ஆசை..

பாரதியார்: யோவ்.. அதுக்கொரு நேரம் காலம் கிடையாதா?

சோழியான்: நேரம் காலம் பார்த்தா எழுதும் ஆர்வம் வரும்.. இப்போது வந்திருக்கு.. பாடுகிறீரா.. அல்லது வேறு யாராவது கவிஞரை அழைக்கவா?

பாரதியார்: சரி.. பாடுகிறேன்.. ஒருமுறைதான் பாடுவேன்..

சோழியான்: சரி.. பாடும்..

பாரதியார்:
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை

(தீராத)

தின்னப் பழம் கொண்டு வருவான் - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
என்னப்பன் என்னையான் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்

(தீராத)

அழகுள்ள மலர் கொண்டு வந்தே - என்னை
அழ அழச் செய்தபின் கண்ணை மூடிக் கொள்
குழலிலே சூட்டுவேன் என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான்

(தீராத)

பின்னலைப் பின்னின்றிழுப்பான் - தலை
பின்னே திரும்புமுன் நேர் சென்று மறைவான்
வண்ணப் புதுச் சேலை தனிலே - புழுதி
வாரிச் சொறிந்தே வருத்திக் குலைப்பான்

(தீராத)

புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது
பொங்கித் ததும்பு நல் கீதம் படைப்பான்
கள்ளால் மயங்குவது போலே - அதனைக்
கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம்

(தீராத)

பாரதியார்: என்ன.. எங்கே.. எழுதிய உன் பாட்டை பாடு பார்ப்போம்..

சோழியான்:
ஹா.. ஹா.. கேளும் கேளும்..

அம்மாநான் சற்பண்ண போறேன் அங்கு
தினந்தினம் புதுப்புது உறவுகள் காண..

(அம்மாநான்...)

மெல்லவே ஓன்லைன் வருவார் - அவர்
சொல்லியும் சொல்லாமல் ஓவ்லைன் செல்வார்
என்னப்பா என்னபேர் என்றால் - அதனை
மறைத்துச் சிதைத்துப் புதுப்பெயர் சொல்வார்.

(அம்மாநான்...)

அசைகின்ற படம் போட்டுக் கொண்டே - அவர்கள்
கதையோடும் உணர்வோடும் மனதிலே நின்று
நாளைக்கு வாவென்று சொல்வார் - சிலர்
வாராமல் விட்டாலும் வேறொருவர் வருவார்.

(அம்மாநான்...)

சிலர்வந்து கதையாலே அறுப்பார் - தலை
வெடித்துச் சினக்குமுன் 'புளொக்'பண்ணி விடுவேன்
ஆங்கில எழுத்துக்கள் தனிலே - சிலர்
அழகாகத் தமிழை நுழைத்தே கதைப்பார்.

(அம்மாநான்...)
அண்ணான்று சிலபேரும் அழைப்பார் - அறிவு
பொங்கித் ததும்பும் பலவிசயம் தருவார்
'சற்'றால் மயங்குவது போலே - அதனைக்
கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்பேன்.

(அம்மாநான்...)

பாரதியார்: பாவி.. மகாபாவி.. என் புனிதமான பாடலை இப்படி கெடுத்திட்டாயே.. இனி உன் கண் முன்னாலேயே நிற்கமாட்டேன்..

(பாரதி துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓடிவிட்டார்.)

யாழ் உறவுகளே! நீங்க எப்படி?! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
(நன்றி: பாரதியார் பாடல் உதவிய சிநேகிதி அவர்களுக்கு.)


அடடா.. பாவமப்பா பாரதியார் சோழியண்ணாவின் கனவிலை வந்து இப்படி மாட்டுப் படணும் என்று விதி, ஒராளை எத்தினை விதிதானப்பா தாக்கும்.. இறந்தாலாவது நிம்மதியா இருக்கலாம் என்று எல்லோ நான் நினைத்தன்.. சோழியண்ணாட்டை பாரதி மாட்டினதை பார்த்தால் அது இன்னும் கஸ்டம் போல... ம்ம் பாடல் சூப்பர் அண்ணா... ஆனால் எனக்கொன்று உதைக்குது உந்த கதையால அறுக்கிறாக்களின்ரை பட்டியலை ஒருக்கா தரமுடியுமோ..

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by Snegethy - 03-11-2006, 02:48 AM
[No subject] - by eelapirean - 03-11-2006, 03:01 AM
[No subject] - by RaMa - 03-11-2006, 03:03 AM
[No subject] - by Selvamuthu - 03-11-2006, 03:17 AM
[No subject] - by sOliyAn - 03-11-2006, 03:27 AM
[No subject] - by வர்ணன் - 03-11-2006, 03:46 AM
[No subject] - by அருவி - 03-11-2006, 04:20 AM
[No subject] - by Saanakyan - 03-11-2006, 06:03 AM
[No subject] - by தூயவன் - 03-11-2006, 06:07 AM
[No subject] - by KULAKADDAN - 03-11-2006, 06:00 PM
[No subject] - by tamilini - 03-11-2006, 08:23 PM
[No subject] - by Rasikai - 03-11-2006, 11:34 PM
[No subject] - by Nitharsan - 03-12-2006, 05:40 AM
[No subject] - by kuruvikal - 03-13-2006, 04:29 PM
[No subject] - by வெண்ணிலா - 03-13-2006, 04:49 PM
[No subject] - by Niththila - 03-13-2006, 04:51 PM
[No subject] - by kuruvikal - 03-14-2006, 02:32 PM
[No subject] - by Senthamarai - 03-14-2006, 03:01 PM
[No subject] - by SUNDHAL - 03-14-2006, 03:55 PM
[No subject] - by Nithya - 03-15-2006, 09:58 AM
[No subject] - by அருவி - 03-15-2006, 10:04 AM
[No subject] - by Nithya - 03-15-2006, 10:08 AM
[No subject] - by sagevan - 03-15-2006, 01:36 PM
[No subject] - by Paranee - 03-15-2006, 02:28 PM
[No subject] - by sOliyAn - 03-15-2006, 02:51 PM
[No subject] - by தாரணி - 03-15-2006, 06:07 PM
[No subject] - by Niththila - 03-15-2006, 09:10 PM
[No subject] - by Paranee - 03-16-2006, 02:24 PM
Re: பாரதியும் சோழியானும்!! - by kavithan - 03-16-2006, 06:29 PM
[No subject] - by kavithan - 03-16-2006, 06:31 PM
[No subject] - by கறுப்பி - 03-16-2006, 06:31 PM
[No subject] - by அனிதா - 03-16-2006, 07:21 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)