03-11-2006, 04:32 PM
[size=18]வாழ்க்கையின் வெறுமை
என் இளமைப்புத்தகத்தின்
இரவுப்பக்கங்கள்
வெறுமையாய் கிடக்கின்றன
இன்னும் எழுதப்படாத
ஓர் கவிதையை எண்ணி....
எனது வானம்...
இருள் மூடிக்கிடக்கிறது
இதுவரை காணாத
அந்தப் பௌர்ணமிக்காக...
மெல்ல மெல்ல
காலத்திருடனிடம்
களவு போகின்றன-என்
நந்தவனப் பூக்களின் நறுமணமும்-நான்
சேர்த்துவைத்த கனவுகளின்
ஒளிநிறமும்....
நிசப்தம் விழுங்கிய
நீண்ட இரவொன்றில்...
நிமிர்ந்து பார்க்கிறேன்
மழை இருள்மூடிய
காரிருள் வானில்
பளிச்செனத் தெரிந்தது
தனிமை மூடிய-எனது
வாழ்க்கையின் வெறுமை.
-ஈழநேசன்-
கள உறவான ஈழநேசனின் கவிதையை
களைகள் களைந்து அவர் கேட்டுக்கொண்டதன்படி இங்கே
களமேற்றியிருக்கிறேன்.
என் இளமைப்புத்தகத்தின்
இரவுப்பக்கங்கள்
வெறுமையாய் கிடக்கின்றன
இன்னும் எழுதப்படாத
ஓர் கவிதையை எண்ணி....
எனது வானம்...
இருள் மூடிக்கிடக்கிறது
இதுவரை காணாத
அந்தப் பௌர்ணமிக்காக...
மெல்ல மெல்ல
காலத்திருடனிடம்
களவு போகின்றன-என்
நந்தவனப் பூக்களின் நறுமணமும்-நான்
சேர்த்துவைத்த கனவுகளின்
ஒளிநிறமும்....
நிசப்தம் விழுங்கிய
நீண்ட இரவொன்றில்...
நிமிர்ந்து பார்க்கிறேன்
மழை இருள்மூடிய
காரிருள் வானில்
பளிச்செனத் தெரிந்தது
தனிமை மூடிய-எனது
வாழ்க்கையின் வெறுமை.
-ஈழநேசன்-
கள உறவான ஈழநேசனின் கவிதையை
களைகள் களைந்து அவர் கேட்டுக்கொண்டதன்படி இங்கே
களமேற்றியிருக்கிறேன்.

