Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வாழ்க்கையின் வெறுமை
#1
[size=18]வாழ்க்கையின் வெறுமை

என் இளமைப்புத்தகத்தின்
இரவுப்பக்கங்கள்
வெறுமையாய் கிடக்கின்றன
இன்னும் எழுதப்படாத
ஓர் கவிதையை எண்ணி....

எனது வானம்...
இருள் மூடிக்கிடக்கிறது
இதுவரை காணாத
அந்தப் பௌர்ணமிக்காக...

மெல்ல மெல்ல
காலத்திருடனிடம்
களவு போகின்றன-என்
நந்தவனப் பூக்களின் நறுமணமும்-நான்
சேர்த்துவைத்த கனவுகளின்
ஒளிநிறமும்....

நிசப்தம் விழுங்கிய
நீண்ட இரவொன்றில்...
நிமிர்ந்து பார்க்கிறேன்
மழை இருள்மூடிய
காரிருள் வானில்
பளிச்செனத் தெரிந்தது
தனிமை மூடிய-எனது
வாழ்க்கையின் வெறுமை.

-ஈழநேசன்-

கள உறவான ஈழநேசனின் கவிதையை
களைகள் களைந்து அவர் கேட்டுக்கொண்டதன்படி இங்கே
களமேற்றியிருக்கிறேன்.
Reply


Messages In This Thread
வாழ்க்கையின் வெறுமை - by Selvamuthu - 03-11-2006, 04:32 PM
[No subject] - by KULAKADDAN - 03-11-2006, 06:02 PM
[No subject] - by Rasikai - 03-11-2006, 11:45 PM
[No subject] - by eezhanation - 03-12-2006, 07:47 AM
[No subject] - by eezhanation - 03-12-2006, 08:00 AM
[No subject] - by Selvamuthu - 03-12-2006, 11:34 AM
[No subject] - by iniyaval - 03-14-2006, 02:10 AM
[No subject] - by eezhanation - 03-14-2006, 06:37 AM
[No subject] - by eezhanation - 03-14-2006, 06:46 AM
[No subject] - by ப்ரியசகி - 03-14-2006, 05:03 PM
[No subject] - by eezhanation - 03-15-2006, 08:03 AM
[No subject] - by Rasikai - 03-15-2006, 06:45 PM
[No subject] - by shanmuhi - 03-15-2006, 10:09 PM
[No subject] - by RaMa - 03-16-2006, 06:50 AM
[No subject] - by Snegethy - 03-16-2006, 06:59 AM
[No subject] - by eezhanation - 03-18-2006, 07:00 AM
[No subject] - by eezhanation - 03-18-2006, 07:16 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)