03-10-2006, 09:31 AM
வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ். மத்திய கல் லூரிக்கும் இடையிலான நூறாவது துடுப் பாட்டப் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட் டுக்களையும் இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றது.
யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமான இந்த ஆட் டத்தில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியின் தலைவர் என்.நவகீதன், யாழ். மத்திய கல்லூரி அணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி கேட்டுக் கொண்டார்.
களம் இறங்கிய யாழ். மத்திய கல்லூரி அணி மதிய இடைவேளையின் பின் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 219 ஓட் டங்களைப் பெற்றது. இடையில் மழைபெய்த தால் ஆட்டம் 15 நிமிடம் இடைநிறுத்தப் பட்டது.
ஏபிரகாம்பிரசாத், பி.தயான், ஜி.மகீபன் ஆகியோர் முறையே 22, 26, 36 ஓட் டங்களையும் டிலான் ஆட்டம் இழக்காமல் 54 ஓட்டங்களையும் தமது அணிக்காகப் பெற் றுக்கொடுத்தனர்.
ரி.நிரூபன் 61 ஓட்டங்களைக் கொடுத்து ஐந்து விக்கெட்டுக்களையும் பி.கஜரூபன் 37 ஓட்டங்களைக் கொடுத்து இரண்டு விக்கெட் டுக்களையும் ஜி.சஞ்ஜீவன் 36 ஓட்டங்களைக் கொடுத்தும் பி.சுகிந்தன் 28 ஓட்டங்களைக் கொடுத்தும் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணி விக்கெட் இழப் பின்றி 10 ஓட்டங்கள் பெற்ற நிலையில் முத லாம் நாள் ஆட்ட முடிவிற்கு வந்தது. ரி.கிரி ஷாந் 3 ஓட்டங்களுடனும் பி.நேசவர்மன் 5 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். ஆட் டம் இன்று முற்பகல் 10 மணிக்குத் தொடரும்.
காலையில் ஓரளவு ரசிகர்கள் காணப் பட்ட போதும், பிற்பகலில் பெரியளவில் ரசி கர்களைக் காணமுடியவில்லை.
உதயன்
யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமான இந்த ஆட் டத்தில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியின் தலைவர் என்.நவகீதன், யாழ். மத்திய கல்லூரி அணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி கேட்டுக் கொண்டார்.
களம் இறங்கிய யாழ். மத்திய கல்லூரி அணி மதிய இடைவேளையின் பின் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 219 ஓட் டங்களைப் பெற்றது. இடையில் மழைபெய்த தால் ஆட்டம் 15 நிமிடம் இடைநிறுத்தப் பட்டது.
ஏபிரகாம்பிரசாத், பி.தயான், ஜி.மகீபன் ஆகியோர் முறையே 22, 26, 36 ஓட் டங்களையும் டிலான் ஆட்டம் இழக்காமல் 54 ஓட்டங்களையும் தமது அணிக்காகப் பெற் றுக்கொடுத்தனர்.
ரி.நிரூபன் 61 ஓட்டங்களைக் கொடுத்து ஐந்து விக்கெட்டுக்களையும் பி.கஜரூபன் 37 ஓட்டங்களைக் கொடுத்து இரண்டு விக்கெட் டுக்களையும் ஜி.சஞ்ஜீவன் 36 ஓட்டங்களைக் கொடுத்தும் பி.சுகிந்தன் 28 ஓட்டங்களைக் கொடுத்தும் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணி விக்கெட் இழப் பின்றி 10 ஓட்டங்கள் பெற்ற நிலையில் முத லாம் நாள் ஆட்ட முடிவிற்கு வந்தது. ரி.கிரி ஷாந் 3 ஓட்டங்களுடனும் பி.நேசவர்மன் 5 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். ஆட் டம் இன்று முற்பகல் 10 மணிக்குத் தொடரும்.
காலையில் ஓரளவு ரசிகர்கள் காணப் பட்ட போதும், பிற்பகலில் பெரியளவில் ரசி கர்களைக் காணமுடியவில்லை.
உதயன்
" "

