03-04-2006, 04:32 AM
ஆகா யாழ்தேவியில் அறிமுகமான ஒரு சகோதர உறவை இன்னமும் தேடிக்கொண்டு இருக்கின்றேன்.
இந்தியான் ஆமியுடன் தமிழ் குழுக்கள் சேர்ந்து இயங்கிய காலம் அது. நானும் எனது அம்மம்மாவும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்தோம். அப்போது பக்கத்து இருக்கையில் 3 அண்ணாக்கள் பயந்து பயந்து வந்து கொண்டிருந்தார்கள். தமிழ் குழுக்களுக்கு பயந்து கொழும்பில் தங்கியிருந்தார்கள். கையில் கொண்டு வந்த பணங்கள் எல்லாம் முடிந்தவுடன் அதற்கு மேலும் அவர்களின் வீட்டு பொருளாதரம் அங்கு இருக்க முடியமால் பண்ணியது. ஆகவே ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது வவுனியாவில் வைத்து பல ஆண்களை பிடிப்பது தமிழ்குழுக்களுக்கு கை வந்த கலை. ஆகவே அதில் ஓரு அண்ணா தன்னை ஆமி பிடித்தால் என்னை தன் அண்ணா என்றும் இருவரும் மட்டுமே வருகின்றோம் என்றும் சொல்லச்சொன்னார். அன்று எனக்கு மிகுந்த கவனிப்பும். சோடா வடை என்று நல்ல கவனித்தார்கள். வவுனியாவும் வந்தது. வழமை போல் நமது பெட்டிக்குள் வந்தவன் அந்த அண்ணாவை எழும்பி தன்னுடன் வரும்படி கூறினான். உடனே அந்த அண்ணா என்னை பார்க்க நானும் அவரின் கையை பிடித்துக்கொண்டு எழுந்தேன். உடனே அவன் என்னவோ அவருக்கு சொல்லிவிட்டு போய்விட்டான். அவருக்கு நல்ல சந்தோசம். என்னால் தான் தான் தப்பினேன் என்று.
சிறுவயது என்றாபடியால் அவரின் விபரங்கள் தெரியலை. ஆனால் சாவகச்சேரி அவரின் பிறப்பிடம் என்று மட்டும் தான் தெரியும்.
பழைய நினைவுகளை மீட்டுத்தந்த கானாபிரபாவிற்கு எனது நன்றிகள்.
இந்தியான் ஆமியுடன் தமிழ் குழுக்கள் சேர்ந்து இயங்கிய காலம் அது. நானும் எனது அம்மம்மாவும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்தோம். அப்போது பக்கத்து இருக்கையில் 3 அண்ணாக்கள் பயந்து பயந்து வந்து கொண்டிருந்தார்கள். தமிழ் குழுக்களுக்கு பயந்து கொழும்பில் தங்கியிருந்தார்கள். கையில் கொண்டு வந்த பணங்கள் எல்லாம் முடிந்தவுடன் அதற்கு மேலும் அவர்களின் வீட்டு பொருளாதரம் அங்கு இருக்க முடியமால் பண்ணியது. ஆகவே ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது வவுனியாவில் வைத்து பல ஆண்களை பிடிப்பது தமிழ்குழுக்களுக்கு கை வந்த கலை. ஆகவே அதில் ஓரு அண்ணா தன்னை ஆமி பிடித்தால் என்னை தன் அண்ணா என்றும் இருவரும் மட்டுமே வருகின்றோம் என்றும் சொல்லச்சொன்னார். அன்று எனக்கு மிகுந்த கவனிப்பும். சோடா வடை என்று நல்ல கவனித்தார்கள். வவுனியாவும் வந்தது. வழமை போல் நமது பெட்டிக்குள் வந்தவன் அந்த அண்ணாவை எழும்பி தன்னுடன் வரும்படி கூறினான். உடனே அந்த அண்ணா என்னை பார்க்க நானும் அவரின் கையை பிடித்துக்கொண்டு எழுந்தேன். உடனே அவன் என்னவோ அவருக்கு சொல்லிவிட்டு போய்விட்டான். அவருக்கு நல்ல சந்தோசம். என்னால் தான் தான் தப்பினேன் என்று.
சிறுவயது என்றாபடியால் அவரின் விபரங்கள் தெரியலை. ஆனால் சாவகச்சேரி அவரின் பிறப்பிடம் என்று மட்டும் தான் தெரியும்.
பழைய நினைவுகளை மீட்டுத்தந்த கானாபிரபாவிற்கு எனது நன்றிகள்.

