03-02-2006, 09:41 PM
இங்கே எனது கருத்தையும் வைக்கலாமென்று நினைக்கின்றேன். சேரன் ஒரு தரமான இயக்குனர் தான். அவர் பல தரமான படங்களையும் தந்திருக்கின்றார். ஆனால் அந்த தரமான படங்களை நாம் எல்லாரும் வசூலில் சாதனை புரிய வைத்திருக்கின்றோமா?? ஒரு தொலைக்காட்சி டாப் 10 என ஒரு நிகழ்ச்சி நடத்தும் போது எந்தப் படம் கூடிய வசூலைக் குவிக்கின்றதோ அதன் அடிப்பமையிலேயே பிரிக்கின்றனர். நீங்கள் பலர் சொல்வதைப் போல் பார்த்தால் சேரன் அல்லவா சுப்பர் ஸ்டார் ஆகியிருக்க வேண்டும். இவ்வளவு ஆதங்கம் படுபவர்கள் ஏன் அவரை சுப்பர்ஸ்டார் ஆக்கவில்லை. அந்நியன் சந்திரமுகி சிவகாசியை விட தவமாய் தவமிருந்து படமல்லவா வசூலில் சாதனை படைத்திருக்க வேண்டும். ஏன் அது நடக்கவில்லை தவறு யாரில்?? சிந்திப்போமா?? <b>எம்மில் பலர் ஒரு திரைப்படத்தைப் பார்க்கப் போகும் போது இரண்டரை மணி நேரத்தில் கவலைகள் எல்லாவற்றையும் மறந்து ஜாலியாக ஒரு படத்தைப் பார்த்து வருவதையே விரும்புகின்றோம் என்பதே உண்மை.</b>
<i><b> </b>
</i>
</i>

