![]() |
|
சன் டிவியை ஏன் எதிக்கிறேன்? .. சேரன் அதிரடி! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: சன் டிவியை ஏன் எதிக்கிறேன்? .. சேரன் அதிரடி! (/showthread.php?tid=659) |
சன் டிவியை ஏன் எதிக்கிறேன்? .. சேரன் அதிரடி! - ஜெயதேவன் - 03-01-2006 சேரனை யாராலும் புறக்கணிக்க முடியாது. மீண்டும் 'மாயக்கண்ணாடி'யில் முகம் காட்ட வருகிறார். அதற்காக எடுத்துக்கொள்கிற நிதானம், ஈடுபாடு எல்லாமே அழகான திட்டமிடல். குமுதத்திற்காக சந்திப்பு என்றதும், 'ஆஹா' என்று சம்மதித்தார். அதென்ன மாயக்கண்ணாடி? மனிதனின் வாழ்க்கைக்குள் தேங்கிக் கிடக்கிற பல விஷயங்களுக்கு பதில் சொல்லக் கூடிய சினிமா. இந்த வாழ்க்கை நம்மை திணறடிக்கும். இன்னும் கொஞ்சம் சந்தோஷம் நீடிக்கக் கூடாதான்னு ஏங்க வைக்கும். வாழ்க்கையையும் அதில் ஒரு காதலையும் சொல்லியிருக்கேன். காதல் காட்டுகிற ஜீபூம்பாக்கள் அதிகம். அதுமாதிரி காதலையும், கூடவே அசலான வாழ்க்கையையும் கொண்டு வந்து முன்நிறுத்துவதுதான் மாயக் கண்ணாடி. இளையராஜா கதையை கேட்டு விட்டு, நிஜமாகவே இந்தப் படத்திற்கு நிறைய நான் உழைக்க வேண்டியிருக்கும் என்று சொன்னார். நவ்யா நாயரை 'ஆடும் கூத்து' நடிக்கும்போது பார்த்தேன். உணர்வுகளை பிடித்துக் கொண்டு நடிப்பில் பல வித்தைகள் செய்து அதிர வைக்குது. அவங்களையே என் இணையாக தேர்ந்தெடுத்தேன். த. தவமிருந்து சாயல் எங்கேயும் இருக்காது. இது வேறு உணர்வுகள். இது வேறு மாதிரியான படம். ஏன் குடும்பம்னு ஒரே வட்டத்திற்குள்ளே சுற்றிச் சுற்றி வந்துகிட்டு இருக்கீங்க? குடும்பம் இல்லாமல் நாம் யாருமே இல்லையே! குடும்பத்தின் உன்னத உறவுகளை முறிச்சுவிடாமல் இருக்கணும். வாழ்க்கைக்குள் தொலைந்து கிடக்கிற, கண்டுபிடிக்க முடியாத ஆழத்தில் இருக்கிற உணர்வுகளை கொஞ்சமாவது பாசாங்கு இல்லாமல் செய்யணும் என்ற ஆர்வம் தான் இருந்துகிட்டே இருக்கு. இந்த சமூகம் சீர் கெட்டுப் போனால் எனக்கும் பங்கு இருக்கு. அந்தத் தவறை நான் செய்ய முடியாது. ஏன் சன் டி.வி.யை எதிர்த்து நிற்கிறீர்கள்? என்னோட எதிர்ப்பு அவர்களைப் புறம்தள்ளுவதுதான். அவர்களின் சுயலாபத்திற்காக, தொலைக்காட்சி வளர்ச்சிக்காக, நல்ல படங்கள் என்ற பார்வையே இல்லாமல், மக்களை தவறான வழிக்கு இழுத்துக் கொண்டே போகுது சன் டி.வி. என் 'பொற்காலத்தை' விமர்சித்த போது 'பாதிப் பொன், பாதிக்கு மேலே மண்ணு' என்று சொன்னாங்க. அன்றையிலிருந்து சண்டை போட்டுக்கிட்டே இருக்கேன். அவங்களுக்கு பேட்டி, படங்கள் தருவதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன். நான் நேர்மையான படம் பண்ணுகிறேன் என்று அங்கீகரிக்க வேண்டாம். அதைக் குறை சொல்லாமல் இருக்கலாம். அவர்களை எதிர்க்கிற அளவுக்கு நான் வளரவில்லை. நல்ல விஷயங்களை புரிந்துகொள்ளாத_உற்சாகப்படுத்தத் தெரியாத அவங்ககிட்டே தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. என்னோட படத்திற்கு ஐந்தாவது, ஆறாவது இடம் கொடுக்கும்போதே இந்த டி.வி.யின் ஓரவஞ்சகம் ஜனங்களுக்கு தெரிந்து போகிறது இல்லையா? முதலிடம்னு ஏதோ ஒரு படத்தைப்போட்டு ஜனங்களுக்கு திசை திருப்புவது மிகப்பெரிய துரோகமாக படலையா? உங்களை மாதிரி நல்ல டைரக்டர்கள் நடிக்க வந்துவிட்டால், இருக்கிற நடிகர்களுக்கு ஸ்டார்ட், கட் சொல்கிற டைரக்டர்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு இருக்கு இல்லையா? 'தவமாய் தவமிருந்து' படத்தில் கூடப் படிச்ச பெண்ணை கெடுத்திட்டு, நகரத்திற்கு ஓடுகிற கேரக்டர். எந்த ஹீரோ செய்ய முன்வருவாங்க சொல்லுங்க! இமேஜ் இருக்கே, ரசிகர்கள் கிட்டே முகம் காட்ட முடியாதே. நடிகர்கள் மனசு வைத்தால், யதார்த்தமான படங்கள் வரும். எனக்கு ஹீரோவாகி நாற்காலியைப் பிடிக்கணும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. மக்களை முட்டாள் ஆக்காத சினிமா வரணும். எல்லோரும் மஞ்சள் பையை தூக்கிக்கிட்டு ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகணும்னு வந்துவிடுகிறார்கள். அவங்க கஷ்டப்பட்டு வந்த கதை யாருக்கும் தெரியாது. சினிமாவில் ஹீரோ என்கிற மாயை ஏராளமானவர்களின் வாழ்க்கையை கெடுத்திருக்கு. நல்ல இயக்குநராக இருக்கும்போது நடிகர்களுக்கு மெனக்கெட்டீங்க. சுமாரான நடிகரான உங்களை வைச்சே நீங்க டைரக்ட் பண்றது நியாயமாகப் படுதா? மிகச் சிறந்த நடிகர்கள் உங்க டைரக்ஷனில் வரும்போது உங்க கதை சிறப்பாக வரும் இல்லையா? நீங்கதான் என்னை சுமாரான நடிகர்னு சொல்றீங்க. மக்கள் என்னை மதிக்கிறார்கள். மிகச் சிறந்த நடிகர்கள் யாரும் என்னை இயக்குநராகவே மதிக்கிறதில்லை. நானும் நிறையப் பேரிடம் கதை சொல்லியிருக்கேன். என் கதை அவங்களுக்கு பிடிச்சதில்லை. இனிமேல் மிகச் சிறந்த நடிகர்கள்தான் எதையும் செய்ய முடியும் என்பது கிடையாது. ராஜ்கிரணை நீங்கள் சாதாரண நடிகராக மதிப்பிடக் கூடாது. சிவாஜி, கமலுக்குப் பிறகு மிக அழகாக, சின்னச் சின்ன உணர்வுகளை யதார்த்தமாக, போலித்தனம் இல்லாமல், மிகை நடிப்பு இல்லாமல் வெளிப்படுத்துகிறார் ராஜ்கிரண். சொல்லப் போனால் விக்ரமை விட ராஜ்கிரண் சிறந்த நடிகர். விக்ரம் ஒரு மாயை. இந்த வருடம் அந்நியன், தவமாய் தவமிருந்து இரண்டும் தேசிய விருதுக்குப் போனால் தவமாய் தவமிருந்து படத்திற்குத்தான் விருது கிடைக்கும். மூன்று கெட்டப்பில் வருவது ஈஸி. ஆனால் மூன்று பருவங்களில் ராஜ்கிரண் மாதிரி உயிரோட்டமாக வருவதுதான் பெரிய சாதனை. வைகோ தேர்தலில் தனியாக நிற்கணும்னு பேசியிருக்கீங்க? வைகோ ஊழல் இன்னும் அண்டாத ஆத்மா. அவர்கிட்டே மக்களை ஏமாற்றுகிற திட்டம் எதுவும் இல்லை. அவரோட மேன்மை புரியாமல் அவர் ஏதோ ஒரு இடத்தில் போய் ஒட்டிக்கிறார். ஏன் ஒட்டுறீங்க. தனியாக நடை போடுங்கன்னு சொன்னேன். தப்பா! விஜயகாந்த் அரசியலுக்கு வருவதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா? முதலில் மக்கள்கிட்டே பழகணும். இறங்கி யாருக்கு என்ன பிரச்னை என்று தெரிஞ்சிக்கணும். எல்லாத்தையும் தெரிஞ்சுதான் காமராஜர், ராஜாஜி, அண்ணா, ஏன் இப்ப கலைஞர் வரைக்கும் வந்தாங்க. விஜயகாந்த் வர நினைப்பது தவறு அல்ல. விஜயகாந்த் நல்ல குணமா, நல்ல மனுஷனாக இருக்கிறது மட்டும் அரசியல்வாதியாக இருக்க போதாது. அந்த அனுபவம் உங்கள் கைக்கு வர ஐந்து வருஷம் சினிமாவை தூக்கி எறிந்துவிட்டு, மக்களோடு இறங்குங்க. அப்புறம்வாங்க, உங்களுக்கு வெற்றிதான். _ நா.கதிர்வேல http://www.kumudam.com/kumudam/mainpage.php - Sujeenthan - 03-01-2006 கிசு கிசுக்களை விட்டு விட்டு இந்த மாதிரி நல்ல பேட்டியை இணைத்தமைக்கு நன்றி. - வர்ணன் - 03-02-2006 சினிமாதனம் இல்லாத ஒரு சினிமா காரரின் பேட்டி-! நச்சுன்னு இருக்கு! இணைப்புக்கு நன்றி ஜெயதேவன் -! 8) - கந்தப்பு - 03-02-2006 சன் டிவியில் சரத்குமாரின் படங்கள் ஒடாவிடினும் முதல் 10 படங்கள் வரிசையில் முன்னுக்கு இருக்கும். ஜெயா டிவியில் சரத்குமாரின் படங்கள் நன்றாக ஒடினாலும், முதல் 10 படங்கள் வரிசையில் பின்னுக்கு இருக்கும். - rajathiraja - 03-02-2006 உங்கள் எல்லாருக்கும் சேரனின் தனி பட்ட வாழ்க்கை அல்லது அவரின் குணம் பற்றி தெரியுமா?? அவர் ஒரு விளம்பர பிரியர். அவர் பேச்சுக்கு எல்லாம் மரியாதை கொடுத்து நேரத்தை வீணாக்க வேண்டாம் ±¾¡ÅÐ þÕì¸Äõ. - irumpumaNi - 03-02-2006 <!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin-->உங்கள் எல்லாருக்கும் சேரனின் தனி பட்ட வாழ்க்கை அல்லது அவரின் குணம் பற்றி தெரியுமா?? அவர் ஒரு விளம்பர பிரியர். அவர் பேச்சுக்கு எல்லாம் மரியாதை கொடுத்து நேரத்தை வீணாக்க வேண்டாம்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <span style='font-size:25pt;line-height:100%'>±¾¡ÅÐ þÕì¸Äõ. ¬É¡ø ÌÎõÀô Àí¸¡É À¼õ ±Î츢ýÈ ´ÕÅ÷ þýÈ º¢É¢Á¡Å¢Öõ þÕ츢ýȨ¾ ±ñ½¢ À¡Õõ..........</span> - Luckyluke - 03-02-2006 அவரை அகிரோ-குரோசேவோ லெவலுக்கு ஒப்பிட்டு அவர் பேசுவது தான் எரிச்சல் தரும்.... மற்றவன் எல்லாம் முட்டாள், தான் மட்டும் புத்திசாலி என்ற எண்ணம் கொண்ட முட்டாள் அவர்.... Re: ±¾¡ÅÐ þÕì¸Äõ. - rajathiraja - 03-02-2006 [quote="irumpumaNi <span style='font-size:25pt;line-height:100%'>±¾¡ÅÐ þÕì¸Äõ. ¬É¡ø ÌÎõÀô Àí¸¡É À¼õ ±Î츢ýÈ ´ÕÅ÷ þýÈ º¢É¢Á¡Å¢Öõ þÕ츢ýȨ¾ ±ñ½¢ À¡Õõ..........</span> கோபிக்க வேண்டாம், அவரின் கதைகள் எல்லாம் வேறு ஒருத்தர் இடம் இருந்து சுட பட்டவை. அது மட்டுமில்லாமல் அவரின் தவமாய் தவ்மிருந்து படம் பார்த்தேன். அதில் ஒரு பாடல் ரொம்ப கேவலமாக ஆபாசமாக இருக்கும். அதெல்லாம் குடும்பதோடு உட்கார்ந்து பார்க்க முடியுமா?? - Danklas - 03-02-2006 இந்தா ராஜாதிராஜா,,,சேரனிண்ட படங்கள் மற்றையவர்கள் இயக்கும் படத்திலும் பார்க்க பெட்டர்,,, சேரனின் படங்கள் ஏதோ ஒரு விதத்தில் ரசிகர்களின் மனதை கவரது, அவரது படங்களில் பொற்காலம் படத்தை பார்த்தீருக்கிறீரா? (நீர் எங்க பார்ப்பீர், நீர் சக்கிலாவிண்ட பிட்டுபடத்தை தனியா இருந்து பார்த்திருப்பீர்), அதில எங்க ஐயா ஆபாசம்? தவமாய் தவமிருந்தில ஒரே ஒரு பாடல்காட்சி ஆபாசம் எண்டுறீரே, மன்மதனில, போய்ஸ்சில எத்தனை ஆபாசகாட்சிகள் வந்தது, அந்த படத்தை இந்தியன்ஸ் தமில்ஸ் வெற்றி பெற வைக்கல்லையோ?? இன்று வெளியாகிற படங்கள் அக்ஷன், காதல் (காதல் எண்ட பெயரில காமம்) கலந்த படங்களைத்தான் பார்க்க வெளிவருது,, செல்வராகவன், சங்கர் போன்றோர் எடுக்கும் படங்களில 40% காமத்தைத்தான் காட்டுறாங்க, கேட்டால் இப்பத்த உம்மைமாதிரி வலஸ் சாறி இளஸ்சுகளுக்கு அதுதான் பிடிக்குது அதுதான் அப்படி எடுக்கிறமெண்டு அவங்க அறிக்கை விடுறாங்க,,(அவங்க சொல்லுறதிலும் தவறு இல்லையே,, அப்படியான படங்கள்தானே வெற்றி பெறுது).. :evil: சன்ரிவி ஒரு பொது ஊடகமாக தனது சேவையை ஒளிபரப்புவதில்லை,, பல வருடங்களுக்கு முன்னர் காமெடி நடிகர் விவேக் மீது கோவத்தில் இருந்த சன்ரிவி அப்போது வெளிவந்த எந்த படத்திலாவது விவேக் வந்தால் அந்த படத்தில் விவேக்கை பற்றி எதுவித கருத்தையும் சொல்லாது இருட்டிப்பு செய்ததுவந்தது,, பின்பு சத்தியராஜ் மீதும் இதே திருவிளையாடல்,, சினிமாகாரங்க கஸ்ரப்பட்டு பணத்தை கொட்டி படம் எடுக்க இவங்க காலுக்கு மேல காலை போட்டுக்கொண்டு அது சரியில்லை இது சரியில்லை எண்டு புலம்புறாங்க,, அதற்கு உம்மைப்போல ஒரு சிலர் ஜால்ரா வேற,, எத்தினை பெரியார் வந்தாலும் நீங்க திருந்த மாட்டீங்க,,, :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :x :evil:<b>சேரன் சன்ரிவியை பற்றி சொன்னது 100% உண்மை,, எந்த வித தவறும் இல்லை,,</b> - AJeevan - 03-02-2006 Luckyluke Wrote:அவரை அகிரோ-குரோசேவோ லெவலுக்கு ஒப்பிட்டு அவர் பேசுவது தான் எரிச்சல் தரும்.... மற்றவன் எல்லாம் முட்டாள், தான் மட்டும் புத்திசாலி என்ற எண்ணம் கொண்ட முட்டாள் அவர்.... <b>"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி பெற்றதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை"</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->[quote=Danklas] <b>சேரன் சன்ரிவியை பற்றி சொன்னது 100% உண்மை,, எந்த வித தவறும் இல்லை,,</b> - வினித் - 03-02-2006 Quote:சேரன் சன்ரிவியை பற்றி சொன்னது 100% உண்மை,, எந்த வித தவறும் இல்லை,, டன் அதை நீங்கள் எப்படி சொல்லலாம்? எதையும் சொல்ல முன் நல்ல யோசிக்கனும் சரியா? :twisted: அதுவும் வினித் இருக்கும் போது இப்படி கருத்து சொல்வது சரியா? நான் தான் சொல்லனும் சேரன் சொன்னது 100% உண்மையே உண்மையத் தவிர வேற ஒன்றும் இல்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Luckyluke - 03-02-2006 என்ன ஒரு ஜிங்... சாக்...கா இருக்கு..... - வினித் - 03-02-2006 Luckyluke Wrote:என்ன ஒரு ஜிங்... சாக்...கா இருக்கு..... ஏன் இன்று உங்கள் சிஞ்சாங் ராஜதிராஜ வரவில்லையா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Birundan - 03-02-2006 வினித் Wrote:Luckyluke Wrote:என்ன ஒரு ஜிங்... சாக்...கா இருக்கு..... நீங்க ஏன் அப்பா அடிபடுறீங்க, சன்ரீவி கலைஞரோட குடும்ப ரீவீப்பா. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Luckyluke - 03-02-2006 சேரன் மாதிரி முட்டாள்கள் உங்கள் கண்களுக்கெல்லாம் பெரிய அறிவுஜீவியாய் படுவது எனக்கு ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை..... - Danklas - 03-02-2006 Luckyluke Wrote:சேரன் மாதிரி முட்டாள்கள் உங்கள் கண்களுக்கெல்லாம் பெரிய அறிவுஜீவியாய் படுவது எனக்கு ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை..... எதுக்கோ தெரியாதாம் கற்பூர வாசனை..... :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- rajathiraja - 03-02-2006 ஆமாம் டன் அண்ணா அனுபவம் பேசுது !! - Danklas - 03-02-2006 rajathiraja Wrote:ஆமாம் டன் அண்ணா அனுபவம் பேசுது !! ஜோவ்வ் என்ன கதைக்கிறீங்க இரண்டு பேரும்? உண்மையை சொல்லுங்க, மன்மதன் படம் எதனால வெற்றி பெற்றது?? அதில எந்த வித ஆபசங்களும் உங்க கண்களுக்கு தெரியல்லையா?? பொற்காலம், ஆட்டோகிராப் படத்தில எந்த கட்டத்தில ஆபசக்காட்சி வந்தது? தவமாய் தவமிருந்து படத்திலே ஒரு ஒரு பாடல் காட்சி உமக்கு பலான படம் மாதிரி தெரிதா?? போய்ஸ், காதல் கொண்டேன், படங்களில என்னத்தை டைரக்டர் சொல்ல வாறார் எண்டதை புரிந்துகொண்டீரா?? இப்ப வருகிற படங்களில ஆபசத்தை விட ஆபாச வார்த்தைகள்தான் அதிகம், ஆட்டோகிராப்பில, அல்லது தவமாய் தவமிருந்து படத்தில வருகிற ஒவ்வொரு வசனத்தையும் பார்த்தீரா? என்னமாதிரி சேரன் அதை செய்திருந்தார் எண்டு? ஏன் சேரன் நினனத்தால் அப்படிப்பட்ட வசனக்காட்சிகளை மாற்றி மன்மதன்ல வந்த "நீ ரொம்ப ரேஸ்ரா இருக்கிறா" எண்ட வார்த்தையை போல் சேரனால் செய்யமுடியாதோ??வந்துட்டாங்கள் விமர்சனம் பன்ன,, :evil: :evil: :evil: - Luckyluke - 03-02-2006 ஆமாம்... மன்மதன், காதல் கொண்டேன் படங்களை எல்லாம் நானும், ராஜாவும் தானே டைரக்ட் செய்தோம்... எங்க கிட்டே கேள்வி கேக்குறாரு? - Danklas - 03-02-2006 Luckyluke Wrote:ஆமாம்... மன்மதன், காதல் கொண்டேன் படங்களை எல்லாம் நானும், ராஜாவும் தானே டைரக்ட் செய்தோம்... எங்க கிட்டே கேள்வி கேக்குறாரு? ஓய்ய் உம்மடை கருத்தைத்தான் சொல்லச்சொன்னான்,, சேரனை விமர்சிக்கிற உமக்கு மற்றவங்களையும், அவங்க இயக்கிற படங்களையும் விமர்சிக்கும் திறன் இருக்கனும்,, இதிலிருந்து தெரிது, நீர் வேனுமெண்டு உம்முடைய சுய நலத்துக்காகத்தான் அவரை அப்படி விமர்சனம் செய்யிறீர் எண்டு,, நான் இங்கே சொல்ல வாறது என்னெவென்றால், தங்கர்பச்சான், பாரதிராஜா ஒரு சிலர்தான் இப்பொழுதும் நன்றாக படம் எடுக்கிறார்கள், அவர்களும் இருந்துட்டுத்தான் படம் எடுக்கினம், சேரன் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு படம் எடுத்துக்கொண்டுவருகிறார், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சங்கர் போன்றோர் மிகவும் ஆபசமாக படமெடுத்துக்கொண்டு இருக்கிறாங்க, அவங்கட படத்தில இரட்டை வசனங்கள் அதிகரித்துக்கொண்டு போகுது, இந்த நேரத்தில சேரன் இயக்கிற படங்கள் வசனங்கள் இறுக்கமாகவும் ஆபாசமில்லாமலும், பேசப்படுகின்றன, அப்படிப்பட்ட ஒருவரை கீழ்த்தனமாக விமர்சனம் செய்தது தவறு என்று கூறுகிறேன்,, அதற்குத்தான் உம்மட்ட விளக்கம் கேட்டேன்,, :evil: :evil: |