Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெனீவா பேச்சுவார்த்தையின் போது உண்மையில் நடந்தது என்ன?
#1
<span style='color:brown'><b>ஜெனீவா பேச்சுவார்த்தையின் போது உண்மையில் நடந்தது என்ன?</b>


<img src='http://img75.imageshack.us/img75/2702/jenivatalks80wz.jpg' border='0' alt='user posted image'>


<b>அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையை எந்த வித மாற்றங்களையும் செய்யாமல் அமுல்படுத்துவதற்கு இணங்கியதை தொடர்ந்து ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் முதல் சுற்றை விடுதலைப் புலிகள் வென்றனர்.

நோர்வே அனுசரணையாளர்களால் தயாரிக்கப்பட்ட கூட்டறிக்கையில் சேர்க்கப்பட்ட ஒரு சொல் குறித்து மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் வாதாடிய பின்னர் இறுதியில் அரசாங்கம் விட்டுக் கொடுத்ததுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் சட்ட பூர்வ தன்மையையும் ஏற்றுக் கொண்டது. இதன் மூலம் வன்னிக்கு இன்னுமொரு வெற்றியை கையளித்தது.

அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசைக்கு பெருமளவு பிரதிநிதிகள், ஆலேசகர்கள், விசுவாசமான ஊடகவியலாளர்கள், மேலும் அரசாங்க ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டவர்களுடன் கலந்து கொண்ட போதிலும் இறுதி வரை (பட்டன்) புலிகளின் பிடியிலேயே இருந்தது.</b>



<b>[size=24]தந்திரோபாயம்</span></b>


<b>அரசாங்கத்தின் தந்திரோபாயம் வெளிப்படையானது பழையது -அரசாங்கம் பலதரப்பட்ட அணுகு முறையை கையாண்டது. மாநாட்டு அறையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் அதேவேளை, கடும் போக்கு குழுக்கள் மூலமும் அவதானமாக திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் ஊடகங்கள் ஊடாக பக்கச் சார்பான செய்திகள் மூலமும் அழுத்தங்களைக் கொடுக்க முனைந்தது.

எனினும், விடுதலைப் புலிகள் நன்கு பழுத்த அனுபவமுள்ளவர்கள். இதன் காரணமாக கடும் போக்காளர்களின் குழப்பமான முயற்சிகள் வெற்றி பெறவில்லை ஆகக் குறைந்த அளவில் முதல் சுற்றிலாவது.



<span style='color:darkblue'>கூட்டறிக்கை



[b]இரண்டாம் நாள் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் நோர்வே அனுசரணையாளர்கள் கூட்டறிக்கையை தயாரிக்க தொடங்கினர். இதனை பின்னர் இரு தரப்பிடமும் அவர்களது சம்மதத்திற்காக கையளித்தனர்.

அரசாங்க தரப்பு பிரதிநிதிகள் உடனடியாக நேரடி தொலைத் தொடர்பு வசதிகள் ஊடாக அலரிமாளிகையை தொடர்பு கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர். கூட்டறிக்கையின் ஆரம்ப பந்திகள் மிக சாதாரணமானவையாகத் தோன்றின.

இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் ஜெனீவாவில் 22-23 பெப்ரவரி 2006 யுத்த நிறுத்த உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டனர்.

எனினும், இதன் விளைவுகள் மிகவும் பாரதூரமானவையாக இருந்தன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கடும் அதிருப்தியடைந்தார். தனது அங்கீகாரத்தை வழங்க மறுத்தார். உடன்படிக்கை என்ற சொல் குறித்தே மகிந்த குழப்பமடைந்தார்.

2002 உடன்படிக்கையை குறிப்பிடும் உடன்படிக்கை எனும் சொல்லை ஏற்றுக் கொண்டால் அவர் இயல்பாகவே யுத்த நிறுத்த உடன்படிக்கையின் நியாயத்தன்மையை ஏற்றுக் கொண்டதாகிவிடும் என்பதே ஜனாதிபதியினதும் ஜே.வி.பி.யினதும் சிந்தனை.

மேலும், அந்த அறிக்கையின் மூன்றாவது பந்தியே ஜனாதிபதியால் அதிகம் ஏற்றுக் கொள்ள முடியாததாகக் காணப்பட்டது. மூன்றாவது பந்தியில் அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ள உறுதி பூண்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது யுத்த நிறுத்த உடன்படிக்கை வெறுமனே அரசியலமைப்புக்கு எதிரானது மேலும் தேசிய இறைமையை விட்டுக் கொடுக்கின்றது என்ற அவரின் வாதத்திற்கும் முடிவு கட்டுகின்றது.

ராஜபக்ஷ யுத்த நிறுத்தம் என்ற சொல்லை உடன்படிக்கையுடன் சேர்க்காமல் பயன்படுத்த விரும்பினார். உடன்படிக்கை என்பது குறிப்பிட்ட ஒரு ஆவணத்தை குறிப்பிடும் என்பது அவரது கருத்து. உடன்படிக்கை என்ற சொல் கூட்டறிக்கையில் இடம் பிடிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட ஒரு சொல் கொழும்பில் ராஜபக்ஷவிற்கும் ஜெனீவாவில் அவரது பிரதிநிதிகளுக்கும் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த அதேவேளை வியாழக்கிழமை பேச்சுவார்த்தை மேசையிலும் இது குறித்து ஆராயப்பட்டது.

அரச தரப்பு பிரதிநிதிகள் குழுவின் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா இரண்டு காரணத்திற்காக யுத்த நிறுத்த உடன்படிக்கையில் மாற்றங்களை கொண்டு வர விரும்புவதாக குறிப்பிட்டார், முதலாவது அது அரசியலமைப்பிற்கு எதிரானது அடுத்தது அதனை அப்போது தகுதி வாய்ந்த அதிகாரியாக விளங்கிய முன்னாள் ஜனாதிபதி கைச்சாத்திடவில்லை.

நோர்வே இந்த சமயத்தில் தலையிட்டு உடன்படிக்கை சட்டபூர்வமானது எனவும், அவ்வேளை அரசாங்கத்தின் தலைவராக இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது உத்தியோகபூர்வ அந்தஸ்தின் அடிப்படையில் கைச்சாத்திட்டார் எனவும் தெரிவித்தது. எவ்வாறாயினும் 2004 ஏப்பிரலில் மீண்டும் பதவிக்கு வந்த புதிய அரசாங்கம் இதனை இரத்து செய்ததையும் சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டினார். இது அரசாங்கம் அதனை அங்கீகரித்ததற்கு சமனானது என அரச பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

ராஜபக்ஷ உடன்படிக்கையை இரத்து செய்யாத பட்சத்தில் அவர் அதன் நியாய தன்மையை ஏற்றுக் கொண்டதாக அமையும் என்பதே தெளிவான பாதிப்பு தற்போது கூட்டறிக்கையை ஏற்றுக் கொண்டதன் மூலம் அவர் அதனை செய்துள்ளார்.

எனினும், மூன்று மணித்தியாலங்களாக இது குறித்து ஆராய்ந்த பின்னர் ராஜபக்ஷ விட்டுக் கொடுத்தார். அவரது பிரதிநிதிகளுக்கு கூட்டறிக்கையை ஏற்றுக் கொள்ள அனுமதியளித்தார்.

விடுதலைப் புலிகளும் நோர்வேயும் விட்டுக் கொடுக்க மறுத்ததை தொடர்ந்தே ராஜபக்ஷ இதனை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். விடுதலைப் புலிகள் அறிக்கையில் உடன்படிக்கை என்ற சொல் இடம்பெறாவிட்டால் தாங்கள் அதனை ஏற்றுக் கொள்ள போவதில்லையெனவும் மேலும் பேசுவதற்கு இணங்கப் போவதில்லை எனவும் தெரிவித்தனர்.

பாலசிங்கம் ஒரு அடியில் அரசாங்கத்தை விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சி நிரலை ஏற்கச் செய்துள்ளார்.

அரசாங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளுக்காக தம்மை தீவிரமாகவும் கவனமாகவும் தயார்படுத்தியிருந்த போதிலும் அன்ரன் பாலசிங்கம் அவர்களை தோற்கடித்துள்ளார். உயர்மட்ட ஹவாட் பேச்சுவார்த்தை திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதுடன் சர்வதேச நிபுணர்கள் பேச்சுவார்த்தைகளை எவ்வாறு கையாள்வர் மற்றும் மோதல் தவிர்ப்பு குறித்து விரிவுரைகளையும் நடத்தியுள்ளனர்.

மேலும் அரச தரப்பு பிரதிநிதிகள் சமாதானம் தொடர்பாக சர்வதேச சுற்றுப் பயணங்களையும் மேற்கொண்டுள்ளனர்.

எனினும், கூட்டறிக்கை, இருதரப்பும் யுத்த நிறுத்த உடன்படிக்கை குறித்தும் முஸ்லிம், சிங்கள, தமிழ் மக்களின் கரிசனைகள் குறித்தும் ஆராய்ந்ததாக தெரிவிக்கின்றது.

அதில் அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் யுத்த நிறுத்த உடன்படிக்கையை கடைப்பிடிக்கவும் மேலும் யுத்த நிறுத்த கண்காணிப்பாளர்களின் தீர்ப்பை ஏற்கவும் இணங்கியது குறித்த பந்தியும் உள்ளது. விடுதலைப் புலிகள் இலங்கை பொலிஸார் மற்றும் இராணுவத்தை தாக்குவதை நிறுத்தவும் இணங்கியுள்ளனர்.

இந்த அறிக்கை சிறுவர்களை படையணியில் சேர்ப்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போது இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும் என்றும் கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். பல விடயங்கள் பற்றி தெரிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</b>


<b>[size=24]ஆயுதக் குழுக்கள்



[b]சுவாரஸ்யமான விதத்தில் இலங்கை அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பு படையினரை தவிர வேறு எந்த ஆயுத குழுவும் ஆயுதங்களுடன் நடமாடுவதையோ அல்லது இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ அனுமதிக்காது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அரசாங்கம் துணைப் படையினர் குறித்து யுத்த நிறுத்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றிற்கு இணங்கியுள்ளது.

யுத்த நிறுத்த உடன்படிக்கையில் ஆயுதக் குழுக்கள் குறித்து தெரிவிக்கும் 1.8 இல் தமிழ் ஆயுதக் குழுக்கள் முப்பது நாட்களுக்கு முன் இலங்கை அரசாங்கத்தால் ஆயுத களைவிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விடுதலைப் புலிகள் அரசாங்கத்தை ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை களையச் செய்யும் முக்கிய நோக்கத்தை எய்தியுள்ளனர்.

யுத்த நிறுத்த உடன்படிக்கையில் குறிப்பிடப்படும் பாதுகாப்பு படையினரை தவிர வேறு ஆயுத குழுக்கள் எனும் சொற்றொடரை அரசாங்கம் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவே சேர்த்திருந்தது. எனினும் இதுவும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

எனினும், வியாழக்கிழமை கூட்டறிக்கை பல மணி நேர கடும் உழைப்பிற்கு பின்னரே சாத்தியமானது என்றால் புதன்கிழமை ஆரம்ப உரைகள் பேச்சுவார்த்தைகள் ஆரம்பத்திலேயே முறிவடையும் சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தன.

புதன்கிழமை விடுதலைப் புலிகள் தமது பிரதான சமாதான பேச்சாளர் அன்டன் பாலசிங்கத்தின் உரையை உடனடியாக ஊடகங்களுக்கு வெளியிட்டதன் மூலம் அரசாங்கத்தையும் அதனை செய்ய வைத்து, பேச்சுவார்த்தை குறித்த அதன் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தினர்.

ஆகவே பேச்சுவார்த்தைகளின் ஆரம்பத்திலேயே நகர முடியாமல் செய்யப்பட்டு விட்ட அரச தரப்பு, பொதுமக்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்தியதுடன் பேசப்பட்ட அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் விடுதலைப் புலிகளுக்கு விட்டுக் கொடுத்தது.

மேலும் பலவீனமானதாகவும் பேச்சுவார்த்தை மேசைகளில் மாத்திரமல்லாமல் சர்வதேச சமூகத்தின் முன்னாலும் திறமையற்றதாகத் தோற்றமளித்தது.

அரசாங்க தரப்பு பிரதிநிதிகள் குழுவின் தலைவர் நிமால் சிறி பால டி சில்வா அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிற்கும் இடையே கைச்சாத்தான யுத்த நிறுத்த உடன்படிக்கை எமது அரசியலமைப்பிற்கு முரணானது. அதன் மூலம் ஏற்படும் பாரதூரமான குறைபாடுகளை நிவர்த்தி செய்ய விரும்புகின்றோம் என குறிப்பிட்டார்.

சில்வா விடுதலைப் புலிகள் 3519 யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறல்களில் ஈடுபட்டதாக குறிப்பிட்டார். பாலசிங்கம் இதனை உடனடியாக நிராகரித்ததுடன் இந்த எண்ணிக்கை மிகவும் பெரிதுபடுத்தப்பட்டது. இதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என குறிப்பிட்டார்.</b>



<b>([size=18]அன்டனின் அறிக்கை



[b]இதற்கு நேர்மாறாக அன்ரன் பாலசிங்கம் தனது 12 பக்க அறிக்கையில் யுத்த நிறுத்த உடன்படிக்கையை வலுப்படுத்துவதே சமாதான இயல்பு நிலையை ஸ்திரப்படுத்துவதற்கு இரு தரப்பிற்கும் உள்ள வழி எனக் குறிப்பிட்டார்.

நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளில் மிகவும் ஆக்க பூர்வமான விடயம் யுத்த நிறுத்த உடன்படிக்கை என குறிப்பிட்டார். யுத்த நிறுத்த உடன்படிக்கை முழுமையான யுத்தம் மூழ்வதை தவிர்த்துள்ளது. மேலும் இரு தரப்பும் அமைதியான இயல்பான சூழலில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒரு தரப்பிற்கு சாதகமான விதத்தில் அவசரமாக தயாரிக்கப்படவில்லை. சகல விடயங்களும் துள்ளியமாக ஆராயப்பட்டுள்ளது. நோர்வே அனுசரணையாளர்களின் திறமையான உதவியுடன் என்பதை நினைவு படுத்தினார்.

யுத்த நிறுத்த உடன்படிக்கையை சமாதானத்திற்கான வலுவான சாதனம் என அழைத்த அவர் இதனை தளமாகக் கொண்டே சமாதான முயற்சிகள் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றார். </b>


<b>[size=24]சிநேக பூர்வமற்ற உறுதி மொழி</span>


[b]உரையின் ஆரம்பத்துக்கு முன்னர் இடம்பெற்ற கைகுலுக்களின் போதே இந்த சிநேக பூர்வமற்ற உறுதிமொழி தென்பட்டது. இது அடுத்து வருவதற்கு கட்டியம் கூறுவதாக அமைந்தது.

மண்ணிற உடையணிந்தபடி சிரித்தபடி காணப்பட்ட நிமால் சிறிபால டி சில்வாவுடன் அன்டன் பாலசிங்கம் கைகுலுக்கிய விதமும் அதன் போது தென்பட்ட நம்பிக்கையின்மையும் பேச்சுவார்த்தைகளுக்கான சூழ்நிலை எவ்வாறு அமையப் போகின்றது என்பதைப் புலப்படுத்தியது.

மிகவும் ஆரம்ப தருணத்திலேயே இரண்டு தரப்பும் தமது கடும் வேறுபாடுகளைக் கொண்ட ஆரம்ப உரைகள் மூலம் மோதலிற்கு தயார்படுத்தி விட்டன.

ஆகக் குறைந்தளவில் ஒரு தரப்பு தோற்றால் அல்லது விட்டுக் கொடுத்தால் மாத்திரமே பொதுவான நிலைப்பாடு சாத்தியமாக இருந்தது.

விடுதலைப்புலிகள் இன்னுமொரு உளவியல் ரீதியிலான வெற்றியை பெறுவதற்கு எதிர்பார்த்திருந்ததுடன் இறுதியில் அதனை இலகுவாக சாதித்தனர்.

பேச்சுவார்த்தைகள் புதன்கிழமை ஆரம்பமாவதற்கு முன்னர் நோர்வே, பேச்சுவார்த்தைகளுக்கான நிகழ்ச்சி நிரலை தீர்மானிப்பதற்கு இரு தரப்பு பிரதிநிதிகளையும் பல தடவை சந்தித்தது.

எனினும், இதற்கு முன்னதாகவே செவ்வாய்க்கிழமை இரு தரப்பும் பரஸ்பரம் ஏனைய தரப்பினை சந்திப்பதில் ஆர்வம் காட்டின.

ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே. பேரியல் அஷ்ரப், ரோஹித போகொல்லாகம, பாலித ஹோகன ஆகியோர் அன்டன் பாலசிங்கத்தையும் தமிழ்ச் செல்வனையும் சந்தித்தனர்.

எனினும், பின்னர் சில்வாவும் பாலசிங்கத்தை சந்தித்தார். வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட பின்னர் பாலசிங்கம் நாளை போர்களத்தில் சந்திப்போம் எனக் கூற சற்றே குழம்பிப் போன சில்வா இல்லை இல்லை நாங்கள் அதனை சமாதான களமாக்குவோம் என்றார்.

பெப்ரவரி 22 ஆம் திகதி பேச்சுவார்த்தை இடம்பெற்ற பகுதிக்கு முதலில் வந்து சேர்ந்தவர்கள் அரச தரப்பினர்.

முதலில் வந்த சில்வா தவறுதலாக விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்களை நோக்கி சென்றுவிட்டார். கொல்லா கமவும் அஷ்ரப்பும் அவரை பின்தொடர்ந்தனர். எனினும், குழப்பமடைந்தது அவர் மாத்திரமல்ல, பாலசிங்கமும் விடுதலைப் புலிகளின் ஆலோசனை குழுவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமற முயன்றார்.

அரச தரப்பிற்கான மேசையில் நிமால் சிறிபால டி சில்வா, ரோஹித போகொல்லாகம, அஷ்ரப், பெர்னாண்டோ புள்ளே எச்.எல்.டி. சில்வா பாலித ஹோஹொன ஆகியோர் அமர்ந்தனர்.</b>


<b>-நாளை தொடரும்- </b>


நன்றி: தினக்குரல்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
ஜெனீவா பேச்சுவார்த்தையின் போது உண்மையில் நடந்தது என்ன? - by வினித் - 03-02-2006, 11:34 AM
[No subject] - by வினித் - 03-03-2006, 10:01 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)