03-02-2006, 12:59 AM
<b>இறுதியாக - உறுதியாக - எமது கருத்து</b>
:: இணையமானது இளையோர்க்கு பல நன்மைகளை அளிக்கிற ஒரு ஊடகம். அதன் "ஊடாக" நிகழ்த்தப்படக்கூடிய சில தீமைகளைக் காரணம் காட்டி நன்மையடைவதை தடுத்தல் மாபெரும் தவறாகும்.
:: தீயவற்றை தவிர்த்துவிட்டு நல்லவற்றை எடுங்கள் - அன்னப் பறவை போன்று. உங்கள் வாழ்வு சிறக்கவேண்டுமென்றால் உங்களுக்கு எது தேவையானது என்பதை நீங்கள் தானே தீர்மானிக்க வேண்டும்.
:: இணையத்தை விட சக்தி வாய்ந்த இன்னொரு தொழில்நுட்பம் வரும்வரையில்.
இணைய ஊடகம் உலகத்தை ஆளும்.
:: பொருளாதாரம் -மருத்துவம் - இலக்கியம் - பன்னாட்டுத்தொடர்பு - கலை - தொழில்நுட்பம் - பத்திரிகைத்துறை - அரசியல் - ஆன்மீகம் - புவியியல் - உயிரியல் - தாவரவியல் - விண்ணியல் விநோதங்கள் - இசை - கற்கைநெறி - கற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் - திரைத்துறை - வரலாறு - இயற்கை பற்றிய ஆய்வு போன்ற பல்வேறு துறைகளிலும் இளைஞர்களுக்கு இணையம் நன்மையளிக்கிற ஊடகமாக திகழ்வதை எவ்வளவுதான் நீங்கள் மறைத்தாலும், மறுத்தாலும் அதுதான் உண்மை.
:: முள்ளு குத்துமென பயந்தால் அழகு ரோஜாவை பறித்து காதலிக்கு கொடுக்க முடியுமா?
பாம்பு கொத்துமென பயந்தால் வயலில் இறங்க முடியுமா? முள்ளுக் குத்துமென்று பயந்தால் முத்தெடுக்க முடியுமா? நன்மைகளை அடையும் போது சில தீமைகளையும், தடைகளையும் எதிர்நோக்கவேண்டியிருக்கும். அதற்காக நன்மைகளை அடையாமல் ஒதுக்கி வைக்க முனையலாமா? பாதுகாப்பை ஏற்படுத்திக்கொண்டு நன்மைகளைப் பெறவேண்டும்.
:: ஊடகம் என்பது ஒரு சடப்பொருள். அது ஒரு முனையிலிருந்து இன்னோர் முனைக்கு செய்திகளை, தகவல்களை கடத்துவதற்கு பயன்படுகிறது. எனவே இந்த முனையிலும், அந்த முனையிலும் இருப்பவர்களே நன்மைகளையும் தீமைகளையும் தீர்மானிக்கிறார்கள் - இணையம் அல்ல. எனவே எய்பவர்கள் இருக்க அம்பை நோவதேன் தோழர்களே?
:: இணையத்தின் கட்டுப்பாடானது பெறுனர் கையில் தான் உள்ளது - எனவே தானடைகிற நன்மைகளைத் தீர்மானிக்கும் சக்தியும் பெறுனர் கையில் தான் உள்ளது.
:: மொத்தத்தில் திறமையுள்ளவர்க்கும், நன்மையடைய விரும்புவோர்க்கும் இணையம் ஏணிப்படியாகவே உள்ளது.
தோழர்களே! எந்த ஒரு புது விடயத்துக்குள் நுழையும்போதும், அல்லது புதுவிடயத்தைச் செய்யத் தொடங்கும் போதும் சில தவறுகள் - பிழைகள் - தடைகள் நேர்வது இயல்பு. எதிரணி நண்பர்கள் சுட்டிக்காட்டியதும் இப்படி தொடக்ககாலத்தில் நிகழ்ந்த தவறுகளைத்தான். உதாரணமாக உலக விடுதலைப் போராட்டங்களையே எடுத்துக்கொள்ளுங்கள் - விடுதலை அமைப்புக்களை எடுத்துக்கொள்ளுங்கள் - உயர் கண்டுபிடிப்புக்களை எடுத்துக்கொள்ளுங்கள். தொடக்காலத்தில் நிகழ்ந்த தவறுகளையும் பிழைகளையும் சுட்டிக்காட்டி அவர்களை - அவர்களின் மூலம் நிகழ்கிற நன்மைகளை மறைத்தல் தகுமா? அதேபோல் தான் இணையமும். தவறுகளிலிருந்து கற்றுத்தெளிந்து - வாழ்வியல் அனுபவங்களூடாக நாம் நம்மை வளப்படுத்திக்கொள்கிறோம். அதேபோல் தான் இணையத்திலும்.
இங்கே இன்னொரு விடயத்தையும் குறிப்பிட நாம் விரும்புகிறோம். எதிரணியினர் தலைப்புக்கு பொருத்தமில்லாமல், தலைப்பை சிக்கலாக்குவதற்காக சில வாதங்களை வைத்தார்கள். அவற்றுக்கெல்லாம் - அவசியமற்றபோதும் - எமதணியினர் பொறுமையாக பதிலளித்தார்கள். உதாரணமாக தேவையில்லாமல் தொழில்நுட்பத்துக்கு தெளிவில்லாத சிக்கலான விளக்கங்களை கொடுக்க முனைந்தார்கள் எதிரணியினர். அண்மையில் புலம்பெயர்ந்த இளைஞர்கள், இங்கு பிறந்து வளர்ந்த தமிழ் இளைஞர்கள் என்று பிரிவுபடுத்தி வீணான - சிக்கலான - ஆதாரமற்ற - அவசியமற்ற வாதங்களையெல்லாம் எதிரணியினர் முன்வைத்தார்கள். அதேபோல் இளைஞர்கள் அடைகிற நன்மைகள் பற்றி விவாதிக்க வந்த இடத்தில், புலம்பெயர்ந்த இளைஞர்களால் தமிழ்ச் சமூகம் நன்மையடைகிறதா இல்லையா என்கிற வாதத்தை எதிரணித் தலைவர் தொடக்கி வைத்தார். அடுத்து அமெரிக்காவையும், இரஸ்யாவையும், இந்தியாவையும் இழுத்துவந்து அவரடித்தாரா இவரடித்தாரோ என்று ஆராரோ பாடினார்கள். மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட ஒற்றைக்காலில் நின்றார்கள். ஆகமொத்தத்தில் தலைப்பைத் திசைதிருப்பி தங்களை அவர்கள் குழப்பிக்கொண்ட போதும், எமதணி தெளிவாக தனது வாதங்களை முன்வைத்தது.
<b>இறுதியாக:</b> இதோ அப்பால் தமிழ் இணையத்தளத்தில் இணையப்பாவனை தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு உங்கள் பார்வைக்கு:
<img src='http://www.yarl.com/forum/files/vote_net_194.jpg' border='0' alt='user posted image'>
அதனடிப்படையில் புலம்பெயர்ந்து வாழ்கிற தமிழ் இளையோர் தம்மளவிலும் சரி, சமூக மட்டத்திலும் சரி இணையம் வழி பெருமளவு நன்மைகளையே அடைகிறார்கள். அவர்கள் தெளிவாகவும் - சமூகம் பாதுகாப்பாகவும் இருக்கும் வரையில் இணையம் நன்மையளிக்கும் ஊடகமாகத் தொடரும் என்பதை எமது அணி சார்பில் மறுபடியும் உறுதிபடக் கூறி விடைபெறுகிறேன்.
<b>நன்றி</b>
<span style='font-size:16pt;line-height:100%'>பி.கு.: தாமதத்துக்கு வருந்துகிறேன்.</span>
:: இணையமானது இளையோர்க்கு பல நன்மைகளை அளிக்கிற ஒரு ஊடகம். அதன் "ஊடாக" நிகழ்த்தப்படக்கூடிய சில தீமைகளைக் காரணம் காட்டி நன்மையடைவதை தடுத்தல் மாபெரும் தவறாகும்.
:: தீயவற்றை தவிர்த்துவிட்டு நல்லவற்றை எடுங்கள் - அன்னப் பறவை போன்று. உங்கள் வாழ்வு சிறக்கவேண்டுமென்றால் உங்களுக்கு எது தேவையானது என்பதை நீங்கள் தானே தீர்மானிக்க வேண்டும்.
:: இணையத்தை விட சக்தி வாய்ந்த இன்னொரு தொழில்நுட்பம் வரும்வரையில்.
இணைய ஊடகம் உலகத்தை ஆளும்.
:: பொருளாதாரம் -மருத்துவம் - இலக்கியம் - பன்னாட்டுத்தொடர்பு - கலை - தொழில்நுட்பம் - பத்திரிகைத்துறை - அரசியல் - ஆன்மீகம் - புவியியல் - உயிரியல் - தாவரவியல் - விண்ணியல் விநோதங்கள் - இசை - கற்கைநெறி - கற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் - திரைத்துறை - வரலாறு - இயற்கை பற்றிய ஆய்வு போன்ற பல்வேறு துறைகளிலும் இளைஞர்களுக்கு இணையம் நன்மையளிக்கிற ஊடகமாக திகழ்வதை எவ்வளவுதான் நீங்கள் மறைத்தாலும், மறுத்தாலும் அதுதான் உண்மை.
:: முள்ளு குத்துமென பயந்தால் அழகு ரோஜாவை பறித்து காதலிக்கு கொடுக்க முடியுமா?
பாம்பு கொத்துமென பயந்தால் வயலில் இறங்க முடியுமா? முள்ளுக் குத்துமென்று பயந்தால் முத்தெடுக்க முடியுமா? நன்மைகளை அடையும் போது சில தீமைகளையும், தடைகளையும் எதிர்நோக்கவேண்டியிருக்கும். அதற்காக நன்மைகளை அடையாமல் ஒதுக்கி வைக்க முனையலாமா? பாதுகாப்பை ஏற்படுத்திக்கொண்டு நன்மைகளைப் பெறவேண்டும்.
:: ஊடகம் என்பது ஒரு சடப்பொருள். அது ஒரு முனையிலிருந்து இன்னோர் முனைக்கு செய்திகளை, தகவல்களை கடத்துவதற்கு பயன்படுகிறது. எனவே இந்த முனையிலும், அந்த முனையிலும் இருப்பவர்களே நன்மைகளையும் தீமைகளையும் தீர்மானிக்கிறார்கள் - இணையம் அல்ல. எனவே எய்பவர்கள் இருக்க அம்பை நோவதேன் தோழர்களே?
:: இணையத்தின் கட்டுப்பாடானது பெறுனர் கையில் தான் உள்ளது - எனவே தானடைகிற நன்மைகளைத் தீர்மானிக்கும் சக்தியும் பெறுனர் கையில் தான் உள்ளது.
:: மொத்தத்தில் திறமையுள்ளவர்க்கும், நன்மையடைய விரும்புவோர்க்கும் இணையம் ஏணிப்படியாகவே உள்ளது.
தோழர்களே! எந்த ஒரு புது விடயத்துக்குள் நுழையும்போதும், அல்லது புதுவிடயத்தைச் செய்யத் தொடங்கும் போதும் சில தவறுகள் - பிழைகள் - தடைகள் நேர்வது இயல்பு. எதிரணி நண்பர்கள் சுட்டிக்காட்டியதும் இப்படி தொடக்ககாலத்தில் நிகழ்ந்த தவறுகளைத்தான். உதாரணமாக உலக விடுதலைப் போராட்டங்களையே எடுத்துக்கொள்ளுங்கள் - விடுதலை அமைப்புக்களை எடுத்துக்கொள்ளுங்கள் - உயர் கண்டுபிடிப்புக்களை எடுத்துக்கொள்ளுங்கள். தொடக்காலத்தில் நிகழ்ந்த தவறுகளையும் பிழைகளையும் சுட்டிக்காட்டி அவர்களை - அவர்களின் மூலம் நிகழ்கிற நன்மைகளை மறைத்தல் தகுமா? அதேபோல் தான் இணையமும். தவறுகளிலிருந்து கற்றுத்தெளிந்து - வாழ்வியல் அனுபவங்களூடாக நாம் நம்மை வளப்படுத்திக்கொள்கிறோம். அதேபோல் தான் இணையத்திலும்.
இங்கே இன்னொரு விடயத்தையும் குறிப்பிட நாம் விரும்புகிறோம். எதிரணியினர் தலைப்புக்கு பொருத்தமில்லாமல், தலைப்பை சிக்கலாக்குவதற்காக சில வாதங்களை வைத்தார்கள். அவற்றுக்கெல்லாம் - அவசியமற்றபோதும் - எமதணியினர் பொறுமையாக பதிலளித்தார்கள். உதாரணமாக தேவையில்லாமல் தொழில்நுட்பத்துக்கு தெளிவில்லாத சிக்கலான விளக்கங்களை கொடுக்க முனைந்தார்கள் எதிரணியினர். அண்மையில் புலம்பெயர்ந்த இளைஞர்கள், இங்கு பிறந்து வளர்ந்த தமிழ் இளைஞர்கள் என்று பிரிவுபடுத்தி வீணான - சிக்கலான - ஆதாரமற்ற - அவசியமற்ற வாதங்களையெல்லாம் எதிரணியினர் முன்வைத்தார்கள். அதேபோல் இளைஞர்கள் அடைகிற நன்மைகள் பற்றி விவாதிக்க வந்த இடத்தில், புலம்பெயர்ந்த இளைஞர்களால் தமிழ்ச் சமூகம் நன்மையடைகிறதா இல்லையா என்கிற வாதத்தை எதிரணித் தலைவர் தொடக்கி வைத்தார். அடுத்து அமெரிக்காவையும், இரஸ்யாவையும், இந்தியாவையும் இழுத்துவந்து அவரடித்தாரா இவரடித்தாரோ என்று ஆராரோ பாடினார்கள். மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட ஒற்றைக்காலில் நின்றார்கள். ஆகமொத்தத்தில் தலைப்பைத் திசைதிருப்பி தங்களை அவர்கள் குழப்பிக்கொண்ட போதும், எமதணி தெளிவாக தனது வாதங்களை முன்வைத்தது.
<b>இறுதியாக:</b> இதோ அப்பால் தமிழ் இணையத்தளத்தில் இணையப்பாவனை தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு உங்கள் பார்வைக்கு:
<img src='http://www.yarl.com/forum/files/vote_net_194.jpg' border='0' alt='user posted image'>
அதனடிப்படையில் புலம்பெயர்ந்து வாழ்கிற தமிழ் இளையோர் தம்மளவிலும் சரி, சமூக மட்டத்திலும் சரி இணையம் வழி பெருமளவு நன்மைகளையே அடைகிறார்கள். அவர்கள் தெளிவாகவும் - சமூகம் பாதுகாப்பாகவும் இருக்கும் வரையில் இணையம் நன்மையளிக்கும் ஊடகமாகத் தொடரும் என்பதை எமது அணி சார்பில் மறுபடியும் உறுதிபடக் கூறி விடைபெறுகிறேன்.
<b>நன்றி</b>
<span style='font-size:16pt;line-height:100%'>பி.கு.: தாமதத்துக்கு வருந்துகிறேன்.</span>

