02-28-2006, 12:26 AM
சிறுவனாக இருக்கும்போது சிலவருடங்களுக்கு ஒருக்காத்தான் கொழும்புக்கு யாழ்தேவியில் போறதால் எனக்கு கொழும்பு எதோ சொர்க்கம் என்று நினைப்பதுண்டு.(பிறகு நான் கொழும்பு,சென்னை,லண்டன்,கன்பரா,சிட்னி போன்ற இடங்களில் வாழ்ந்தவற்றை ஒப்பீட்டுப்பார்க்க, நான் பிறந்த குப்பிளான் மண் தான் இப்பொழுது சொர்க்கமாகத்தெரிகிறது.) நான் எப்பொழுதும் ஜன்னல் சீட்டில் தான் இருந்து யாழில் இருந்து கொழும்புக்குப்போவேன். கொடிகாமம் நெருங்க அழகிய தென்னந்தோட்டங்கள், பிறகு டெலொ இயக்கத்தின் தாக்குதலினால் அழிக்கப்பட்ட யாழ்தேவியின் பெட்டிகள் விழுந்துகிடந்த காட்சிகள், ஆனையிரவு உப்பளம்,பரந்தன் இரசாயனக்கட்டிடம், வவுனியாக்காடுகளில் எதாவது மரத்தில் குரங்குகள் நிற்கின்றனவா என்று பார்த்தது, அனுராதபுரத்துக்கு கிட்டவர அபயகிரி ,ரூவான்வெலிசயா விகாரைகள் நீண்டனேரங்களுக்கு தூரங்களுக்கும் தெரிந்தகாட்சிகள், குருனாகல் வர எருமைகள், பிறகு மலைகள்,கம்பகா, கொழும்பு வர உயர்ந்த கட்டிடங்கள் எனப்பார்த்து ரசிப்பேன். எனக்கு இன்றசிட்டி ரயிலில் போகப்பிடிக்காது. அது வேகமாகப்போய்விடும் என்பதினால்தான்.
15 வருடங்களுக்குப்பின் சென்றவருடம் யாழ்ப்பாணத்துக்கு வாகானத்தில் பிரயாணம்செய்தேன். வவுனியாவில், எமது மண்ணில் சிங்கள இராணுவத்தினர் நிற்பதினைப்பார்க்கக்கவலையாக இருந்து. ஒமந்தையில் அன்புடன் அழகிய தமிழில் வரவேற்ற எமது தமிழிழக்காவல்துறையினர், கிளி நோச்சியில் உள்ள தூயதமிழில் எழுதப்பட்ட வியாபாரனிலையங்களின் பெயர்ப்பலகைகள், மக்களுக்கு உதவுவதற்காகச் செல்லும் போராளிகள், பாண்டியன் சுவையூற்று உணவு, இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
15 வருடங்களுக்குப்பின் சென்றவருடம் யாழ்ப்பாணத்துக்கு வாகானத்தில் பிரயாணம்செய்தேன். வவுனியாவில், எமது மண்ணில் சிங்கள இராணுவத்தினர் நிற்பதினைப்பார்க்கக்கவலையாக இருந்து. ஒமந்தையில் அன்புடன் அழகிய தமிழில் வரவேற்ற எமது தமிழிழக்காவல்துறையினர், கிளி நோச்சியில் உள்ள தூயதமிழில் எழுதப்பட்ட வியாபாரனிலையங்களின் பெயர்ப்பலகைகள், மக்களுக்கு உதவுவதற்காகச் செல்லும் போராளிகள், பாண்டியன் சுவையூற்று உணவு, இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
,
,
,

