02-27-2006, 01:25 PM
நான் சிறுவனாக இருந்தகாலத்தில் எனது அப்பம்மா,அம்மம்மா போன்றவர்கள் தங்களது பழையகாலத்துச்சம்பவங்கள் சொல்வதுண்டு. முதன் முதலாக யாழ்தேவி இணுவிலுக்கு வரும்போது இணுவில் மக்கள் எல்லோரும் போய் யாழ்தேவியைப்பார்த்தது என்றும் அப்பம்மா சொல்லுவா. வெள்ளைக்காரர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்த கதைகள், முதன்முதலாக இணுவிலுக்கு மின்சாரம் 3 மணித்தியாலம் இணுவில் கந்தசுவாமி கோவிலடியில் வழங்கும்போது மக்கள் இரவில் பாய்,தலையாணிகளோடு போய் கோவிலில் இருந்த கதைகளும் சொல்வார்கள். 2ம் உலகப்போர் காலத்தில் ஜப்பான் குண்டுபோடப்போறார்கள் எனப்பயந்த கதைகளும் சொல்வார்கள்.
79,80களில் குப்பிளானுக்கு முதன்முதலாக தொலைக்காட்சி வந்தபோது பாணனின் மண்டபத்தில் குப்பிளான் மக்களோடு அண்ணன் ஒருகோவில் பார்த்ததும் யாபகம் வருகிறது.
தலைப்போடு சம்பந்தம் இல்லாமல் எதோ யாபகத்தில் வந்தவற்றையும் எழுதிவிட்டேன்
79,80களில் குப்பிளானுக்கு முதன்முதலாக தொலைக்காட்சி வந்தபோது பாணனின் மண்டபத்தில் குப்பிளான் மக்களோடு அண்ணன் ஒருகோவில் பார்த்ததும் யாபகம் வருகிறது.
தலைப்போடு சம்பந்தம் இல்லாமல் எதோ யாபகத்தில் வந்தவற்றையும் எழுதிவிட்டேன்
,
,
,

