02-27-2006, 06:22 AM
அருமையான பதிவு கானாபிரபா.
கானாப்பிரபா இப்பதிவுக்கு பிறகு வீடு என்ற புதியபதிவினை ஆரம்பித்துள்ளதால், இவரின் யாழ்தேவிபற்றிய பதிவினை http://kanapraba.blogspot.com/2006/02/blog-post.html பார்க்கவும்
முன்பு யாழ்தேவியில் பிராயணம் செய்தபோது நடந்த பல சம்பவங்கள் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. 91ம் ஆண்டு ஆங்கிலப்புதுவருடத்தில் வவுனியாவில் இருந்து யாழ்தேவி தனது பிரயாணத்தினை ஆரம்பித்தது. அதற்கு முதல் மதாவச்சியில் 2ம் ஈழப்போர் காரணமாக மதவாச்சியில் இருந்து தான் யாழ்தேவி பயணிக்கும்.
நான் பயணம் செய்த புகையிரதப்பெட்டியில் பல தமிழர்களும், சில சிங்களவர்களும் பயணித்தார்கள். அவர்களில் சிலர் பலாலி இராணுவத்தினர் விடுமுறைக்காக பயணித்தார்கள். அவர்கள் அறைகுறைத்தமிழில் இதனை உரத்துச்சொன்னார்கள். அவர்கள் எல்லோரும் மதுபானம் அருந்தியவர்களாக நிதனாம் தவறிக்காணப்பட்டார்கள். சில தமிழ் ஆண்களிடம் தமிழ் பெண்கள் பற்றி விசாரித்தார்கள். சிலருக்கு அடித்தார்கள். ஆனால் எல்லாத்தமிழர்க்கும் அடிக்கவில்லை. எனக்கும் விழவில்லை. சில தமிழ்ப்பெண்களின் தலையில் குட்டினார்கள். வேறு சிலதமிழ்பெண்களிடம் கிட்டச்செல்லும்போது சில சிங்களவர்கள் அவர்களைத்தடுத்தார்கள்.
பிறகு கணக்க சோடாப்போத்தல்கள் வாங்கினார்கள். சிங்களவர்களுக்கு கொடுத்தார்கள். சிலதமிழர்களை சிங்களவர் எனனினைத்து அவர்களுக்கும் குடிக்கக்கொடுத்தார்கள். சிங்களவர்களுக்கு மட்டும்தான் குடுப்போம் என்று கத்தியவண்ணம் சோடாபோத்தல்கள் வாங்கிக் கொடுத்தார்கள்.
மகோ, பொல்காவலைச்சந்திக்கிட்டவரும்போது அவர்களுக்கு வெறி எல்லாம் முறிந்து நிதானத்து பிறகுவந்தபோது தான் எங்களுக்கு நிம்மதிப்பெருமூச்சு வந்தது.
கானாப்பிரபா இப்பதிவுக்கு பிறகு வீடு என்ற புதியபதிவினை ஆரம்பித்துள்ளதால், இவரின் யாழ்தேவிபற்றிய பதிவினை http://kanapraba.blogspot.com/2006/02/blog-post.html பார்க்கவும்
முன்பு யாழ்தேவியில் பிராயணம் செய்தபோது நடந்த பல சம்பவங்கள் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. 91ம் ஆண்டு ஆங்கிலப்புதுவருடத்தில் வவுனியாவில் இருந்து யாழ்தேவி தனது பிரயாணத்தினை ஆரம்பித்தது. அதற்கு முதல் மதாவச்சியில் 2ம் ஈழப்போர் காரணமாக மதவாச்சியில் இருந்து தான் யாழ்தேவி பயணிக்கும்.
நான் பயணம் செய்த புகையிரதப்பெட்டியில் பல தமிழர்களும், சில சிங்களவர்களும் பயணித்தார்கள். அவர்களில் சிலர் பலாலி இராணுவத்தினர் விடுமுறைக்காக பயணித்தார்கள். அவர்கள் அறைகுறைத்தமிழில் இதனை உரத்துச்சொன்னார்கள். அவர்கள் எல்லோரும் மதுபானம் அருந்தியவர்களாக நிதனாம் தவறிக்காணப்பட்டார்கள். சில தமிழ் ஆண்களிடம் தமிழ் பெண்கள் பற்றி விசாரித்தார்கள். சிலருக்கு அடித்தார்கள். ஆனால் எல்லாத்தமிழர்க்கும் அடிக்கவில்லை. எனக்கும் விழவில்லை. சில தமிழ்ப்பெண்களின் தலையில் குட்டினார்கள். வேறு சிலதமிழ்பெண்களிடம் கிட்டச்செல்லும்போது சில சிங்களவர்கள் அவர்களைத்தடுத்தார்கள்.
பிறகு கணக்க சோடாப்போத்தல்கள் வாங்கினார்கள். சிங்களவர்களுக்கு கொடுத்தார்கள். சிலதமிழர்களை சிங்களவர் எனனினைத்து அவர்களுக்கும் குடிக்கக்கொடுத்தார்கள். சிங்களவர்களுக்கு மட்டும்தான் குடுப்போம் என்று கத்தியவண்ணம் சோடாபோத்தல்கள் வாங்கிக் கொடுத்தார்கள்.
மகோ, பொல்காவலைச்சந்திக்கிட்டவரும்போது அவர்களுக்கு வெறி எல்லாம் முறிந்து நிதானத்து பிறகுவந்தபோது தான் எங்களுக்கு நிம்மதிப்பெருமூச்சு வந்தது.
,
,
,

