02-25-2006, 08:37 PM
வீரம் விளைந்ததடா தமிழ் ஈழமண் மீதினிலே - வரி
வேங்கை எழுந்ததடா வல் வெட்டித் துறையினிலே
ஆரத்தில் ஆல விடத்தினைக் கட்டிய
ஆண்மைக் குமரனடா - பெரும்
ஆபத்தையே பனியாக மதித்திடும்
ஆதித்ய சோதியடா
சீலத்தில் வாய்மையில் போர்ப்படை கட்டிய
சிந்தனையாளனடா - எங்கள்
செந்தமிழன் பிரபாகரன் என்கின்ற
செல்வக் குமரனடா
இந்தியச் சூதினை எட்டியுதைத்திட்ட
எங்கள் தலைவனடா - தமிழ்
விந்தியந் தொட்டுக் குமரி வரையெனும்
விதியை மறுத்தவன் டா
செந்தமிழ் ஈழ மணித்திரு நாட்டைச்
செதுக்கிய சிற்பியடா - ரத்தம்
சிந்திச் சிந்தித் தமிழ் மானத்தைக் காத்திடச்
சீறிடும் வேங்கையடா.
குட்டக் குனிந்த தமிழன் நிமிர்ந்து
குதறிட வைத்தவன் டா - அட
எட்டுத்திசையிலும் ஈடிணையற்ற-எம்
ஈழத்தலைமகன் டா
துட்டகெமுனு தொடக்கிவைத்திட்ட
துயரை ஒழித்தவன் டா - நாம்
பட்டது போதுமென்றார்த்து எதிரியில்
பாய்ந்த புலியவன் டா
ஆயிரமாயிரம் வேங்கைகள் சேர்த்து
அணிநடை செய்தவன் டா - உயிர்
மாய்வதெம் மண்ணினுக்காய் என வாழும்
மறவர் தலைவனடா
பேய்களுலாவிடு காடதுவாக்கிய
பேரின வாதிகளின்-தலை
சாய எம் மண்ணினில் வீர பராக்ரம
சாகசம் செய்பவன் டா
எத்தனை கோடி துயர் வந்தபோதும்
இடிந்து விடாதவன் டா - தன்னை
மொய்த்த பகைதனை ஈயெனவோர் பெரு
மூச்சிற் கலைப்பவன் டா
இத்தரை மீதிற் கரந்தடி வித்தையில்
ஈடிணையற்றவன் டா - எங்கள்
சொத்தென தாயக ஈழமண் தன்னிற்
சுதந்திரம் கேட்பவன் டா
சேய்கள் பல்லாயிரம் சேர்ந்தனர் - சூழ் பெருந்
தீமையழியுமடா - அவர்
வாய்மையில் வீர வழிமுறையில்-தமிழ்
மாண்பு சிறந்ததடா
ஆயதங்கையில் அறவழி நெஞ்சிலென்(று)
ஆர்க்கும் புலிகளினால் - துயர்
போயின போயின என்று தமிழ் மகள்
துள்ளி நிமிர்வாளடா
யுகசாரதியின் கவிதைகளிலிருந்து
வேங்கை எழுந்ததடா வல் வெட்டித் துறையினிலே
ஆரத்தில் ஆல விடத்தினைக் கட்டிய
ஆண்மைக் குமரனடா - பெரும்
ஆபத்தையே பனியாக மதித்திடும்
ஆதித்ய சோதியடா
சீலத்தில் வாய்மையில் போர்ப்படை கட்டிய
சிந்தனையாளனடா - எங்கள்
செந்தமிழன் பிரபாகரன் என்கின்ற
செல்வக் குமரனடா
இந்தியச் சூதினை எட்டியுதைத்திட்ட
எங்கள் தலைவனடா - தமிழ்
விந்தியந் தொட்டுக் குமரி வரையெனும்
விதியை மறுத்தவன் டா
செந்தமிழ் ஈழ மணித்திரு நாட்டைச்
செதுக்கிய சிற்பியடா - ரத்தம்
சிந்திச் சிந்தித் தமிழ் மானத்தைக் காத்திடச்
சீறிடும் வேங்கையடா.
குட்டக் குனிந்த தமிழன் நிமிர்ந்து
குதறிட வைத்தவன் டா - அட
எட்டுத்திசையிலும் ஈடிணையற்ற-எம்
ஈழத்தலைமகன் டா
துட்டகெமுனு தொடக்கிவைத்திட்ட
துயரை ஒழித்தவன் டா - நாம்
பட்டது போதுமென்றார்த்து எதிரியில்
பாய்ந்த புலியவன் டா
ஆயிரமாயிரம் வேங்கைகள் சேர்த்து
அணிநடை செய்தவன் டா - உயிர்
மாய்வதெம் மண்ணினுக்காய் என வாழும்
மறவர் தலைவனடா
பேய்களுலாவிடு காடதுவாக்கிய
பேரின வாதிகளின்-தலை
சாய எம் மண்ணினில் வீர பராக்ரம
சாகசம் செய்பவன் டா
எத்தனை கோடி துயர் வந்தபோதும்
இடிந்து விடாதவன் டா - தன்னை
மொய்த்த பகைதனை ஈயெனவோர் பெரு
மூச்சிற் கலைப்பவன் டா
இத்தரை மீதிற் கரந்தடி வித்தையில்
ஈடிணையற்றவன் டா - எங்கள்
சொத்தென தாயக ஈழமண் தன்னிற்
சுதந்திரம் கேட்பவன் டா
சேய்கள் பல்லாயிரம் சேர்ந்தனர் - சூழ் பெருந்
தீமையழியுமடா - அவர்
வாய்மையில் வீர வழிமுறையில்-தமிழ்
மாண்பு சிறந்ததடா
ஆயதங்கையில் அறவழி நெஞ்சிலென்(று)
ஆர்க்கும் புலிகளினால் - துயர்
போயின போயின என்று தமிழ் மகள்
துள்ளி நிமிர்வாளடா
யுகசாரதியின் கவிதைகளிலிருந்து
S. K. RAJAH

