02-04-2004, 02:49 PM
'இலங்கையுடன் பாதுகாப்பு உடன்படிýக்கையை கைச்சாத்திடுவதில் இந்திய அரசு உறுதி"
இலங்கையுடன் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றை பெற்றுக் கொள்வதில் புதுடிýல்லி உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும் அவ்வாறான பாதுகாப்பு ஒப்பந்தமொன்றை நாட்டிýன் தலைவி மற்றும் பாதுகாப்பமைச்சர் என்ற அடிýப்படையில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் செய்து கொள்வதில் இந்தியாவுக்கு இருவேறு கருத்துக்கள் இல்லையென்றும் ஜனாதிபதியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான லடீ;மன் கதிர்காமர் நேற்று செவ்வாய்க்கிழமை தினக்குரலுக்குத் தெரிவித்தார்.
இந்தியாவிற்கான ஒருவாரகால விஜயமொன்றை மேற்கொண்டு புதுடிýல்லியில் வெளிவிவகார அமைச்சர் யஸ்வந்த் சிங்ஹா, பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ், இந்தியப் பிரதமரின் பாதுகாப்புத்துறை சம்பந்தமான ஆலோசகர் பிரஜேஸ் மிர்;ரா ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்த லடீ;மன் கதிர்காமர் கொழும்பு திரும்பிய பின்னர் நேற்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவைச் சந்தித்து இந்த பேச்சுக்கள் பற்றி விளக்கிக் கூýறியிருக்கிறார்.
இந்தியாவிற்கான விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்கள் குறித்து தொடர்ந்து கருத்து வெளியிட்ட லடீ;மன் கதிர்காமர், இலங்கையின் அரசியல் நிலைவரம் குறித்து இந்தியா ஆழ்ந்த அக்கறையுடன் இருப்பதாகவும், உள்நாட்டு அரசியல் நெருக்கடிý சுமுகமான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்பதே இந்தியாவின் அபிப்பிராயமாக இருக்கிறதென்பது இந்த சந்திப்புக்களில் புலப்பட்டதாகவும் கூýறினார்.
இந்திய - இலங்கை பாதுகாப்பு உடன்படிýக்கை மேற்கொள்ளப்படுவது தாமதமாகும் என்றும், இந்தியாவில் நடைபெறவுள்ள தேர்தல்கள் மற்றும் இலங்கையின் அரசியல் நெருக்கடிý இதற்கு காரணமாக உள்ளதென்றும் கூýறப்படுவது உண்மை தானா என்று கேட்டபோது பதிலளித்த கதிர்காமர் மேற்படிý விடயங்கள் இந்த தாமதத்திற்கான சிறிய காரணங்களாகுமென கூýறினார்.
இந்திய- இலங்கை பாதுகாப்பு உடன்படிýக்கையென்பது இரு நாட்டு அரசியல் தலைமைத்துவங்களுக்கிடையே செய்து கொள்ளும் ஒப்பந்தம் அல்லவெனக் குறிப்பிட்ட அவர், இது இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தம் என்பதால், இதுபற்றி மேலும் பல பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டிýய தேவை உள்ளதாகவும், இதன் காரணமாகவே ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதற்கான கால எல்லையினை நிர்ணயிக்க முடிýயாதுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் பிரதமர் தரப்புடன் தான் செய்துகொள்ள வேண்டுமென்று புதுடிýல்லிக்கு மறைமுக அழுத்தங்கள் வழங்கப்பட்டிýருப்பது பற்றிக் கேட்ட போது பதில் கூýறிய கதிர்காமர் இதுபற்றி தமக்கு தெரியாதென்றும் ஆனால் திருமதி குமாரதுங்கவுடன் இந்த ஒப்பந்தத்தினை செய்து கொள்வதற்கு புதுடிýல்லி தயாராக உள்ளதென்றும் கூýறினார்.
நன்றி: தினக்குரல்
இலங்கையுடன் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றை பெற்றுக் கொள்வதில் புதுடிýல்லி உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும் அவ்வாறான பாதுகாப்பு ஒப்பந்தமொன்றை நாட்டிýன் தலைவி மற்றும் பாதுகாப்பமைச்சர் என்ற அடிýப்படையில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் செய்து கொள்வதில் இந்தியாவுக்கு இருவேறு கருத்துக்கள் இல்லையென்றும் ஜனாதிபதியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான லடீ;மன் கதிர்காமர் நேற்று செவ்வாய்க்கிழமை தினக்குரலுக்குத் தெரிவித்தார்.
இந்தியாவிற்கான ஒருவாரகால விஜயமொன்றை மேற்கொண்டு புதுடிýல்லியில் வெளிவிவகார அமைச்சர் யஸ்வந்த் சிங்ஹா, பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ், இந்தியப் பிரதமரின் பாதுகாப்புத்துறை சம்பந்தமான ஆலோசகர் பிரஜேஸ் மிர்;ரா ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்த லடீ;மன் கதிர்காமர் கொழும்பு திரும்பிய பின்னர் நேற்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவைச் சந்தித்து இந்த பேச்சுக்கள் பற்றி விளக்கிக் கூýறியிருக்கிறார்.
இந்தியாவிற்கான விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்கள் குறித்து தொடர்ந்து கருத்து வெளியிட்ட லடீ;மன் கதிர்காமர், இலங்கையின் அரசியல் நிலைவரம் குறித்து இந்தியா ஆழ்ந்த அக்கறையுடன் இருப்பதாகவும், உள்நாட்டு அரசியல் நெருக்கடிý சுமுகமான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்பதே இந்தியாவின் அபிப்பிராயமாக இருக்கிறதென்பது இந்த சந்திப்புக்களில் புலப்பட்டதாகவும் கூýறினார்.
இந்திய - இலங்கை பாதுகாப்பு உடன்படிýக்கை மேற்கொள்ளப்படுவது தாமதமாகும் என்றும், இந்தியாவில் நடைபெறவுள்ள தேர்தல்கள் மற்றும் இலங்கையின் அரசியல் நெருக்கடிý இதற்கு காரணமாக உள்ளதென்றும் கூýறப்படுவது உண்மை தானா என்று கேட்டபோது பதிலளித்த கதிர்காமர் மேற்படிý விடயங்கள் இந்த தாமதத்திற்கான சிறிய காரணங்களாகுமென கூýறினார்.
இந்திய- இலங்கை பாதுகாப்பு உடன்படிýக்கையென்பது இரு நாட்டு அரசியல் தலைமைத்துவங்களுக்கிடையே செய்து கொள்ளும் ஒப்பந்தம் அல்லவெனக் குறிப்பிட்ட அவர், இது இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தம் என்பதால், இதுபற்றி மேலும் பல பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டிýய தேவை உள்ளதாகவும், இதன் காரணமாகவே ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதற்கான கால எல்லையினை நிர்ணயிக்க முடிýயாதுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் பிரதமர் தரப்புடன் தான் செய்துகொள்ள வேண்டுமென்று புதுடிýல்லிக்கு மறைமுக அழுத்தங்கள் வழங்கப்பட்டிýருப்பது பற்றிக் கேட்ட போது பதில் கூýறிய கதிர்காமர் இதுபற்றி தமக்கு தெரியாதென்றும் ஆனால் திருமதி குமாரதுங்கவுடன் இந்த ஒப்பந்தத்தினை செய்து கொள்வதற்கு புதுடிýல்லி தயாராக உள்ளதென்றும் கூýறினார்.
நன்றி: தினக்குரல்

