02-23-2006, 08:09 AM
நேற்று ஜெனிவாவில் ஜேவிபி, ஜாதிககெல உறுமய கட்சியின் ஆதரவாளர்களும், தமிழ்குழுக்களின் ஆதரவாளர்களும் இணைந்து தமிழீழ தேசியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர். வெகு குறைவானவர்கள் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தில் கைகலப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ரிபிசி பணிப்பாளர் ராமராஜ் உட்பட சில தமிழர்கள் சுவிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி இந்த ஊர்வலத்தை ஒழுங்கு செய்வதில் முக்கிய பங்காற்றிய சிலருடன் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையின் முக்கிய உறுப்பினர்கள் தங்களை படம் பிடிக்க முற்பட்டதாகவும், அதனாலேயே தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். அப்பொழுது தாங்கள் இருவரை பிடித்து வைத்திருந்ததாகவும், ஓடிப் போன மற்றையவர்கள் பொலிஸாரை அழைத்து வந்து ராமராஜ்தான் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியதால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர். அத்துடன் ராமராஜ் இன்று காலை விடுவிக்கப்படுவார் எனவும் கூறினார்கள்.
இவர்களின் கூற்றின்படி ஊர்வலத்தை படம் பிடித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதும், ரிபிசி பணிப்பாளர் ராமராஜ் கைது செய்யப்பட்டதும் உண்மை என்று தெரிகிறது. சென்ற முறை இவர்கள் நடத்திய ஊர்வலத்தின் போதும் தேசியத்திற்கு ஆதரவான இரண்டு சிறுவர்கள் படம் பிடிக்க முற்பட்டதாக கூறி இவர்களால் துன்புறுத்தப்பட்டிருந்தனர். ஊர்வலம் போவதன் நோக்கமே, தங்களையும் தங்களின் கோரிக்கைகளையும் உலகுக்கு அறிய செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். அதனாலேயே மக்கள் கூடுகின்ற வீதிகளால் ஊர்வலம் போகின்றனர். ஒரு வெளிப்படையான ஊர்வலத்தை படம் பிடிக்கும் ஜனநாயக உரிமை அனைவருக்கும் உண்டு. தங்களை படம் பிடித்து விடுவார்கள் என்று அஞ்சுபவர்கள் வீதியில் இறங்கி போராடக் கூடாது. ஆனால் யுத்தம் வேண்டாம் என்று ஊர்வலம் போகின்ற இவர்கள் தங்களை படம் பிடிப்பவர்கள் மீது மேற்கொள்ளும் அராஜகங்களில் இருந்தே, இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என அறிந்து கொள்ளலாம். இவ்வாறானவர்கள் தங்களை ஜனநாயகத்திற்காக குரல் கொடுப்பதாக சொல்லிக் கொள்வது மிகவும் நகைப்பிற்கிடமான ஒன்று.
அதே வேளை ராமராஜ் மீதான கைதும் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. இது ஒரு உள்வீட்டு வேலை என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஊர்வலத்தில் பல ஈபிடிபி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். ஈபிடிபிக்கும் ரிபிசிக்கும் ஆகாது என்பது உலகு அறிந்த விடயம். டக்ளஸ் தேவானந்தாவை ரிபிசி தொடர்ந்து விமர்சித்து வருவதால், ஆத்திரத்தில் இருந்த ஈபிடிபியினர் பொலிஸாரிடம் ராமாராஜை காட்டிக் கொடுத்தனர் எனச் சொல்லப்படும் செய்தியையும் புறம் தள்ளுவதற்கில்லை.
http://www.webeelam.com/seithikal.html
இவர்களின் கூற்றின்படி ஊர்வலத்தை படம் பிடித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதும், ரிபிசி பணிப்பாளர் ராமராஜ் கைது செய்யப்பட்டதும் உண்மை என்று தெரிகிறது. சென்ற முறை இவர்கள் நடத்திய ஊர்வலத்தின் போதும் தேசியத்திற்கு ஆதரவான இரண்டு சிறுவர்கள் படம் பிடிக்க முற்பட்டதாக கூறி இவர்களால் துன்புறுத்தப்பட்டிருந்தனர். ஊர்வலம் போவதன் நோக்கமே, தங்களையும் தங்களின் கோரிக்கைகளையும் உலகுக்கு அறிய செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். அதனாலேயே மக்கள் கூடுகின்ற வீதிகளால் ஊர்வலம் போகின்றனர். ஒரு வெளிப்படையான ஊர்வலத்தை படம் பிடிக்கும் ஜனநாயக உரிமை அனைவருக்கும் உண்டு. தங்களை படம் பிடித்து விடுவார்கள் என்று அஞ்சுபவர்கள் வீதியில் இறங்கி போராடக் கூடாது. ஆனால் யுத்தம் வேண்டாம் என்று ஊர்வலம் போகின்ற இவர்கள் தங்களை படம் பிடிப்பவர்கள் மீது மேற்கொள்ளும் அராஜகங்களில் இருந்தே, இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என அறிந்து கொள்ளலாம். இவ்வாறானவர்கள் தங்களை ஜனநாயகத்திற்காக குரல் கொடுப்பதாக சொல்லிக் கொள்வது மிகவும் நகைப்பிற்கிடமான ஒன்று.
அதே வேளை ராமராஜ் மீதான கைதும் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. இது ஒரு உள்வீட்டு வேலை என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஊர்வலத்தில் பல ஈபிடிபி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். ஈபிடிபிக்கும் ரிபிசிக்கும் ஆகாது என்பது உலகு அறிந்த விடயம். டக்ளஸ் தேவானந்தாவை ரிபிசி தொடர்ந்து விமர்சித்து வருவதால், ஆத்திரத்தில் இருந்த ஈபிடிபியினர் பொலிஸாரிடம் ராமாராஜை காட்டிக் கொடுத்தனர் எனச் சொல்லப்படும் செய்தியையும் புறம் தள்ளுவதற்கில்லை.
http://www.webeelam.com/seithikal.html
vasan

