06-25-2003, 08:40 AM
பேனா நுனிக்குள் புதைந்து நிற்பவளே
வார்த்தைகளாக வடிய மறுப்பது ஏனோ
ஊரார் முன்னே திட்டித்தீர்த்துவிட்டு
என் முன்னே மட்டும் இன்னிசை பாடுவது ஏனோ
மனதின் உள்ளே மையல்கொண்டு
வெளியே மட்டும் வேசம் காட்டுகின்றாய்
உள்ளே நான் ஓசையில்லாமல் ஓய்வெடுக்க
முகத்தில் மட்டும் வெறுப்பை உமிழ்கின்றாய் ஏன்
உன் குரலோசைக் குயில் கீதத்தில்
வார்த்தைகளை மிழுங்கும்
அந்த நிமிடத்தில்
என் சின்னஞ்சிறிய சீண்டல்களிற்கான
உன் சிம்பொனிச்சிரிப்பில்
என் கவிதைகளை நிராகரித்த உன்
மனதின் பயப்பிராந்தில்
நான் கண்டுகொண்டேனடி. .
உனக்குள் நான் உறங்கிக்கொள்வதை
என்தன் நினைவுகளால்
உடையும் உன் பிஞ்சு இதயத்தை
நானே அறிந்தேனடி. .
புன்னகை சிந்தும் உன்
புூவிதழ்களின் மேலே
உறக்கம் மறந்த உன்
விழிப்பாவையினுள்ளே
புூமி கீறும் உன்
பிஞ்சு விரல்களினுள்ளே
நான் கண்டேனடி . .
என்தன் காதல் ஒளிந்திருப்பதை
வெறுத்த உன் உள்ளம்
என்னை விரும்பி அழைப்பதில்
சிறுத்த உன் இடை அடிக்கடி
சிலிர்த்துக்கொள்வதில்
கருத்த கூந்தல் எப்போதும்
சோர்ந்து வீழ்வதில்
நான் கண்டேனடி .
கசங்கும் என் இதயத்தை. .
நன்றி பரணீ
வைரமுத்துவின் ஒரு கவிதையின் சாயலில் எனது வார்த்தைகள்.
வார்த்தைகளாக வடிய மறுப்பது ஏனோ
ஊரார் முன்னே திட்டித்தீர்த்துவிட்டு
என் முன்னே மட்டும் இன்னிசை பாடுவது ஏனோ
மனதின் உள்ளே மையல்கொண்டு
வெளியே மட்டும் வேசம் காட்டுகின்றாய்
உள்ளே நான் ஓசையில்லாமல் ஓய்வெடுக்க
முகத்தில் மட்டும் வெறுப்பை உமிழ்கின்றாய் ஏன்
உன் குரலோசைக் குயில் கீதத்தில்
வார்த்தைகளை மிழுங்கும்
அந்த நிமிடத்தில்
என் சின்னஞ்சிறிய சீண்டல்களிற்கான
உன் சிம்பொனிச்சிரிப்பில்
என் கவிதைகளை நிராகரித்த உன்
மனதின் பயப்பிராந்தில்
நான் கண்டுகொண்டேனடி. .
உனக்குள் நான் உறங்கிக்கொள்வதை
என்தன் நினைவுகளால்
உடையும் உன் பிஞ்சு இதயத்தை
நானே அறிந்தேனடி. .
புன்னகை சிந்தும் உன்
புூவிதழ்களின் மேலே
உறக்கம் மறந்த உன்
விழிப்பாவையினுள்ளே
புூமி கீறும் உன்
பிஞ்சு விரல்களினுள்ளே
நான் கண்டேனடி . .
என்தன் காதல் ஒளிந்திருப்பதை
வெறுத்த உன் உள்ளம்
என்னை விரும்பி அழைப்பதில்
சிறுத்த உன் இடை அடிக்கடி
சிலிர்த்துக்கொள்வதில்
கருத்த கூந்தல் எப்போதும்
சோர்ந்து வீழ்வதில்
நான் கண்டேனடி .
கசங்கும் என் இதயத்தை. .
நன்றி பரணீ
வைரமுத்துவின் ஒரு கவிதையின் சாயலில் எனது வார்த்தைகள்.
[b] ?

