02-18-2006, 06:25 AM
Sukumaran Wrote:நான் பதிந்தது கீழே உள்ளதண்ணா.. முழுவதையும் வாசித்தால்தானே எனது கருத்தின் தன்மை புரியும்..
Sukumaran Wrote:ஹலலூயாவில் ஆரம்பித்து ஓம்சாயி அம்மா ஆங்சனேயா எல்லாம் சொல்லி முடித்துவிட்டீர்கள்போலும்.. அல்லா கு அக்பர் எப்படி சொல்வதென்ற திண்ணடாட்டம்.. இடையில பாவமன்னிப்பு அதற்கு தாங்களாக மதம்மாறுவதாக ஜேடனை வேறு..
ம்.. ஒருவரின் கஸ்டத்தில் மற்றவர் குளிர்காய்ந்தது தொன்றுதொட்டு இருந்துவருகின்றது.. எட்டப்பன்காலத்திலிருந்து இதுதான் இந்தியாவில் நடந்தது.. அவர்களால் மதமாற்றத்தில் வெற்றிகொள்ள முடியவில்லை.. இலங்கையில் மதமாற்றம் போத்துக்கேயர் காலத்திலிலேயே தொடங்கியது.. அதனால்தான் இலங்கையில் புரட்டஸ்தாந்தரைவிட கத்தோலிக்கர்கள் அதிகம்.. தமது மத்ததை பரப்பும் நோக்கத்துடன் ஆசைகாட்டி மோசம் செய்துவிட்டார்கள்.. சிலர்; ஆசைகாட்டிய அவர்களின் மோசடிக்குப்பலியாகி காட்டிக்கொடுத்துவிட்டார்கள்..
ஆரம்ப தமிழர் கோரிக்கைக்கும் தற்போதய கோரிக்கைக்கும் எவ்வளவோ மாற்றங்கள்.. தற்போது கோரிக்கையைப்பற்றி முடிவெடுப்பது அவர்கள்.. மதமாற்றம் மொழிமாற்றம் அவர்களது மறைமுக குறிக்கோள்.. உள்ளிருந்து செய்ய முடியாதவற்றை வெளியிலிருந்து செய்வதற்கு பேச்சுவார்த்தை.. சமாதானம்.. சுயநிர்ணயம்.. உரிமை என்ற எத்தனையோ வார்த்தை ஜாலங்கள்.. தமது மதத்தை ஒருசாராருள் உட்புகுத்தி அதன்மூலம் வெளியிலிருந்து தமது உள்நோக்கத்தை நாசூக்காக செய்வது தற்போதும் தொடர்கின்றது.. இங்கு பதில் எழுதுபவர்களின் எழுத்திலேயே பலரும் தற்போது மும்மரமாக சேவகம்புரிவது தெரிகின்றது.. இடையிடையே தமிழின் பெருமை.. தங்கத்தமிழ்கூட வந்து போகின்றது.. அத்தனையையும் தீர்மானிப்பது அமெரிக்க ஜரோப்பிய ஸ்கன்டிநேவியர்கள் கைகளில்.. அத்தனைக்கு காரணம் என்னவென்று நான்சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை.. மாற வழிஎன்ன? அடிமையான தமிழ் சமுதாயம் விழிப்புற வழிஎன்ன?
முழுவதையும் வாசித்து நீர் என்ன சொல்கிறீர்கள் என்று தெளிவு பெற்றுள்ளேன். உங்களைப்போல நல்ல சிந்தனையாளர்கள் தமிழர்கள் மத்தியில் குறைவு. யாழ் களத்தில் நல்லதொரு சிந்தனையாளர் இணைந்ததையிட்டு நாம் பெருமையாக கருதுகிறோம். உங்கள் பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்.
நன்றி.
நன்றி.

