02-16-2006, 01:11 PM
வணக்கம்
குருவிகள் முதலில் புலம்பெயர் இளையோர் என்பவர் யார்? முதியோர் என்பவர் யார்? என்பதற்கு மானுடவியல், உடற்கூற்றியல், உளவியல் எனப் பகுத்து ஆதாரங்களேடு விரிவாக விளக்குகிறார். அடுத்து "இன்ர நெட், இன்றா நெட்" என்றால் என்னவென்றும் தெளிவாக விளக்குகிறார். ஆரம்பமே நன்றாக இருக்கின்றது.
"Hard Disc" போல மூளையை உடைய மனித சமுதாயத்தில் ஒருசிலர் மட்டும் உயரிய மனித விழுமியங்களைக் காப்பாற்றுவது போதாது என்கிறார். சகல வசதிகளும் பெற்றுள்ள இந்த மனிதன் என்னும் விலங்கு தனது மனக்கட்டுப்பாடின்மையால் ஒழுக்கமின்றி வாழத் தலைப்படுகிறான், இதற்கு இணையம் துணைபோகின்றது, புலம்பெயர் இளையேரின் சகலவிதமான படைப்புக்கள் வெளிவரவும், பகுப்பாய்வுக்கு உட்படாத தவறான சிந்தனைகள் உள்வாங்கப்படுவதற்கும், இன, சமூக விரேத நிலைகளைத் தோற்றுவிப்பதற்கும், கட்டுப்பாடற்ற கருத்துப்பரிமாறல்கள் நடைபெறவும் இணையம் காரணியாகின்றது என்கிறார்.
ஒருவருள் எழும் கருத்துக்களை அறிவியல், சமூகவியல் ரீதியாக இணையத்தில் ஆராய யாருமே இல்லாததால் காதலர் தினத்தன்றுகூட காதல் என்ற ஓர் அற்புதமான உணர்வுநிலையை இணையத்தில் வழியே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் பல இஞைர்களை, தவறான வழியில் நடக்க ஊக்கிவிக்கின்றது என்று ஆதங்கப்படுகிறார். ஏற்றுக்கொள்ளலாமா?
இணையத்தின் ஊடாக சுடப்பட்ட கணனி மென்பொருள் விற்பனை, கணனி நோயைப் பரப்பும் கிருமிகளின் ஊடுருவல் என்பன பல தீங்குகளை விளவிக்கின்றது. மாணவர்களின் சுயதேடலை முடக்கி, மற்றவரின் முயற்சியில் பட்டம்பெற முயலும் மனப்பாங்கை ஊக்குவிக்கின்றது என்று தன் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார். "நேற்றுப் பெய்த மழைக்கு முளைத்த காளான்கள்" போல இப்போது இணையத்தில் முளைத்துள்ள பல பல்கலைக்கழங்கள் சமூக விருத்திக்கு உதவாமால் தமது பொருள் விருத்தியிலேதான் ஊக்கமெடுக்கின்றார்கள் என்கிறார். உண்மையா?
இன்று நன்மை என்று கருதுவதெல்லாம் நாளை தீமையாகவும் மாறலாம் அல்லவா? அதற்கு உதாரணமாக ரஸ்யாவிலே நிகழ்ந்த லெனின் புரட்சியை உதாரணம் காட்டுகிறார். அமெரிக்க அரசாங்கம் இன்று இணையம் என்ற ஊடகத்தை அறிமுகப்படுத்தி, இளையோர்களை சுகபோகத்திற்கு அடிமையாக்கி, தனது அரசியல் பொருளாதார இலக்குகளை இலகுவாக எதுவித புரட்சிகளுமின்றி அடைந்துகொண்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் ஓரினச் சேர்க்கை போன்ற தேவையற்றவைகளை வாழ்வில் நலிந்தவர்களிடையே பரப்பி அவர்களைக் குழப்பியும் விடுகிறார்கள். மேற்குலகுகளில் இருந்து வருபவைகளெல்லாம் அமிர்தமென்று எமது இளையோர்கள் நம்புகிறார்கள், அதனால் சீரழிகிறார்கள். தெரிந்துகொண்டே இவற்றை வெளிவிடும் நிறுவனங்கள் இடையிடையே தீமை வருகின்றது என்று கூறி அவற்றை நிறுத்தப்போவதாக ஏமாற்று நாடகமும் ஆடுகிறார்கள் என்கிறார்.
உலகத்தையே தனது கைக்குள் வைத்திருப்பதற்காக அமெரிக்க அரசு செய்த, செய்கின்ற இணையவழிச் சீரழிவுகளை அழகாக விளக்கமாகத் தந்திருக்கிறார் குருவிகள். இணையம் ஒருபோதும் புலம்பெயர்ந்து வாழும் எமது இளையோர்களுக்கு நன்மை அளிக்காது என்றும், அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கைகளுக்கு நாம் அடிமையாகக்கூடாது என்பதுபோல் தனது வாதத்தை மிகவும் ஆணித்தரமாக வைத்துள்ளார்.
இவரின் தமிழ் ஆற்றல் நன்றாகவே இருக்கின்றது. அலசி ஆராயும் திறனும் பாராட்டப்படவேண்டிய ஒன்றாகவே இருக்கின்றது. வாழ்த்துக்கள்!
இரு அணியினரதும் வாதங்கள் முன்வைக்கப்பட்டுவிட்டன. இனி ஒருங்கிணைப்பாளர் இரசிகை அறிவித்ததன்படி தீமை அணித்தலைவர் முதலிலும், நன்மை அணித்தலைவர் இறுதியாகவும் உங்கள் முடிவுரைகளை வைக்கவும்.
நன்றி
குருவிகள் முதலில் புலம்பெயர் இளையோர் என்பவர் யார்? முதியோர் என்பவர் யார்? என்பதற்கு மானுடவியல், உடற்கூற்றியல், உளவியல் எனப் பகுத்து ஆதாரங்களேடு விரிவாக விளக்குகிறார். அடுத்து "இன்ர நெட், இன்றா நெட்" என்றால் என்னவென்றும் தெளிவாக விளக்குகிறார். ஆரம்பமே நன்றாக இருக்கின்றது.
"Hard Disc" போல மூளையை உடைய மனித சமுதாயத்தில் ஒருசிலர் மட்டும் உயரிய மனித விழுமியங்களைக் காப்பாற்றுவது போதாது என்கிறார். சகல வசதிகளும் பெற்றுள்ள இந்த மனிதன் என்னும் விலங்கு தனது மனக்கட்டுப்பாடின்மையால் ஒழுக்கமின்றி வாழத் தலைப்படுகிறான், இதற்கு இணையம் துணைபோகின்றது, புலம்பெயர் இளையேரின் சகலவிதமான படைப்புக்கள் வெளிவரவும், பகுப்பாய்வுக்கு உட்படாத தவறான சிந்தனைகள் உள்வாங்கப்படுவதற்கும், இன, சமூக விரேத நிலைகளைத் தோற்றுவிப்பதற்கும், கட்டுப்பாடற்ற கருத்துப்பரிமாறல்கள் நடைபெறவும் இணையம் காரணியாகின்றது என்கிறார்.
ஒருவருள் எழும் கருத்துக்களை அறிவியல், சமூகவியல் ரீதியாக இணையத்தில் ஆராய யாருமே இல்லாததால் காதலர் தினத்தன்றுகூட காதல் என்ற ஓர் அற்புதமான உணர்வுநிலையை இணையத்தில் வழியே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் பல இஞைர்களை, தவறான வழியில் நடக்க ஊக்கிவிக்கின்றது என்று ஆதங்கப்படுகிறார். ஏற்றுக்கொள்ளலாமா?
இணையத்தின் ஊடாக சுடப்பட்ட கணனி மென்பொருள் விற்பனை, கணனி நோயைப் பரப்பும் கிருமிகளின் ஊடுருவல் என்பன பல தீங்குகளை விளவிக்கின்றது. மாணவர்களின் சுயதேடலை முடக்கி, மற்றவரின் முயற்சியில் பட்டம்பெற முயலும் மனப்பாங்கை ஊக்குவிக்கின்றது என்று தன் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார். "நேற்றுப் பெய்த மழைக்கு முளைத்த காளான்கள்" போல இப்போது இணையத்தில் முளைத்துள்ள பல பல்கலைக்கழங்கள் சமூக விருத்திக்கு உதவாமால் தமது பொருள் விருத்தியிலேதான் ஊக்கமெடுக்கின்றார்கள் என்கிறார். உண்மையா?
இன்று நன்மை என்று கருதுவதெல்லாம் நாளை தீமையாகவும் மாறலாம் அல்லவா? அதற்கு உதாரணமாக ரஸ்யாவிலே நிகழ்ந்த லெனின் புரட்சியை உதாரணம் காட்டுகிறார். அமெரிக்க அரசாங்கம் இன்று இணையம் என்ற ஊடகத்தை அறிமுகப்படுத்தி, இளையோர்களை சுகபோகத்திற்கு அடிமையாக்கி, தனது அரசியல் பொருளாதார இலக்குகளை இலகுவாக எதுவித புரட்சிகளுமின்றி அடைந்துகொண்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் ஓரினச் சேர்க்கை போன்ற தேவையற்றவைகளை வாழ்வில் நலிந்தவர்களிடையே பரப்பி அவர்களைக் குழப்பியும் விடுகிறார்கள். மேற்குலகுகளில் இருந்து வருபவைகளெல்லாம் அமிர்தமென்று எமது இளையோர்கள் நம்புகிறார்கள், அதனால் சீரழிகிறார்கள். தெரிந்துகொண்டே இவற்றை வெளிவிடும் நிறுவனங்கள் இடையிடையே தீமை வருகின்றது என்று கூறி அவற்றை நிறுத்தப்போவதாக ஏமாற்று நாடகமும் ஆடுகிறார்கள் என்கிறார்.
உலகத்தையே தனது கைக்குள் வைத்திருப்பதற்காக அமெரிக்க அரசு செய்த, செய்கின்ற இணையவழிச் சீரழிவுகளை அழகாக விளக்கமாகத் தந்திருக்கிறார் குருவிகள். இணையம் ஒருபோதும் புலம்பெயர்ந்து வாழும் எமது இளையோர்களுக்கு நன்மை அளிக்காது என்றும், அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கைகளுக்கு நாம் அடிமையாகக்கூடாது என்பதுபோல் தனது வாதத்தை மிகவும் ஆணித்தரமாக வைத்துள்ளார்.
இவரின் தமிழ் ஆற்றல் நன்றாகவே இருக்கின்றது. அலசி ஆராயும் திறனும் பாராட்டப்படவேண்டிய ஒன்றாகவே இருக்கின்றது. வாழ்த்துக்கள்!
இரு அணியினரதும் வாதங்கள் முன்வைக்கப்பட்டுவிட்டன. இனி ஒருங்கிணைப்பாளர் இரசிகை அறிவித்ததன்படி தீமை அணித்தலைவர் முதலிலும், நன்மை அணித்தலைவர் இறுதியாகவும் உங்கள் முடிவுரைகளை வைக்கவும்.
நன்றி

