02-15-2006, 12:22 PM
அண்மையில் வந்தோர் அனைவருக்கும் வணக்கம், எல்லோருக்கும் வணக்கம் என்பதோடு தமது வாதங்களை ஆரம்பித்தனர். ஆனால் வசம்பு அப்படியில்லாமல் முன்னர் வந்தவர்கள்போல் வணக்கமும், நன்றியும் சொல்லி ஆரம்பித்தார். எல்லாம் நன்றாகவே இருக்கின்றன.
எதிரணியினர் தலைப்பை விடுத்து தாண்டித்தண்டி நடந்தார்கள் என்றார். பொதுவாக தமது நிலை உயரும்போது சமுதாயத்தைப் போற்றுவதில்லை ஆனால் தமது நிலை தாழும்போது அவர்கள் து}ற்றத் தவறுவதுமில்லை என்று அழகாகக் கூறினார். இந்தக் காதலர் தினத்திலே, தோல்வியைத் தழுவிய உலகக் காதலர்களை உள்ளடக்கிய காவியங்களை எதிரணியினருக்கு உதராணம் காட்டினார். அப்படியென்றால் எதிரணியினரும் இங்கே காவியம் படைக்கப்போகிறார்களா?
தனது அணித்தலைவர் இளைஞனின் திறமையை வளர்க்க களம் அமைத்துக்கொடுத்தது இணையம்தானே என்றும், இணையத்திலே சாதனை புரிந்தது அவரது திறமையினாலேதான் என்று எதிரணியினர் கூறுவதை ஒரு வகுப்பிற்கு ஒப்பட்டு விளக்குகிறார். "சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சோராது" என்று கூறிய காலம் எல்லாம் மலையேறிவிட்டது என்று அறுபதைக் கடந்தவர்களுக்கு ஓர் அறையும் விடுகிறார். (களத்தில் அறுபதைக் கடந்த பெரியவர்கள் இருந்தால் அவரை மன்னிக்கவும்).
முகம் காணாத கள உறவுகளின் திறமைகளை அறியவும், இணையவழி மின்னு}ல்கள் சமைக்கவும் இணையம்தானே உதவுகின்றது. இதனை எதிரணித்தலைவரே முன்னின்று செய்தபோதும் இப்போது வேடமிட்டு வித்தை காட்டுகிறார். கள உறவுகளுக்கு அறிவுரை சொல்லவும், அவர்களிடம் அறிவுரை கேட்கவும் இணையமில்லாவிட்டால் என்ன செய்ய முடியும்? என்று கேட்கிறார். இது நியாயமான கேள்விதானா?
"கூகுளில்" புகுந்தால் எதுவும் இலகுவாகும். நேரமும் மிச்சமாகும் என்கிறார். மனக்கட்டுப்பாடு இல்லாதவர்கள்தான் சீரழிகிறார். இதனை விடுத்து இணையம்தான் சீரழிக்கிறது என்பதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எமது வாழ்வை வளமாக்க வேண்டியவைகளை மட்டும் உள்வாங்கவேணடும். இணையத்திலேயுள்ள நல்லனவற்றை நீக்கி, தீயனவற்றை நோக்குபவர்களுடைய பார்வைகளில்தான் கோளாறு என்று ஒரு பிடி பிடிக்கிறார்.
இந்த உலகில் எதையும் செலவின்றிப் பெறமுடியாது. ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றை அடையலாம். அதாவது "இறால் போட்டுத்தான் சுறா பிடிக்க வேண்டும்" என்று கூறி, தெளிவான சிந்தனையுடன் இருங்கள். உங்கள் பலவீனங்களால் நீங்கள் சீரழிவதற்கு மற்றவர்மேல் பழிபோடாதீர்கள் என்று எதிரணியினருக்கு கூறுகிறார்.
இவற்றையெல்லாம் எதிர்த்து வாதிட குருவிகளே பறந்து வாருங்கள். விரைந்து வாருங்கள். இறுதியாக உங்கள் அணித்தலைவர் வரமுன் உங்கள் வந்து வாதத்தை வையுங்கள்.
நன்றி
குறிப்பு: நேற்று எழுதிவைத்த எமது தொகுப்புரையை யாழ் களத்திற்குள் நுழைய முடியாமல் போனதினால் முன்வைக்க முடியவில்லை.
எதிரணியினர் தலைப்பை விடுத்து தாண்டித்தண்டி நடந்தார்கள் என்றார். பொதுவாக தமது நிலை உயரும்போது சமுதாயத்தைப் போற்றுவதில்லை ஆனால் தமது நிலை தாழும்போது அவர்கள் து}ற்றத் தவறுவதுமில்லை என்று அழகாகக் கூறினார். இந்தக் காதலர் தினத்திலே, தோல்வியைத் தழுவிய உலகக் காதலர்களை உள்ளடக்கிய காவியங்களை எதிரணியினருக்கு உதராணம் காட்டினார். அப்படியென்றால் எதிரணியினரும் இங்கே காவியம் படைக்கப்போகிறார்களா?
தனது அணித்தலைவர் இளைஞனின் திறமையை வளர்க்க களம் அமைத்துக்கொடுத்தது இணையம்தானே என்றும், இணையத்திலே சாதனை புரிந்தது அவரது திறமையினாலேதான் என்று எதிரணியினர் கூறுவதை ஒரு வகுப்பிற்கு ஒப்பட்டு விளக்குகிறார். "சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சோராது" என்று கூறிய காலம் எல்லாம் மலையேறிவிட்டது என்று அறுபதைக் கடந்தவர்களுக்கு ஓர் அறையும் விடுகிறார். (களத்தில் அறுபதைக் கடந்த பெரியவர்கள் இருந்தால் அவரை மன்னிக்கவும்).
முகம் காணாத கள உறவுகளின் திறமைகளை அறியவும், இணையவழி மின்னு}ல்கள் சமைக்கவும் இணையம்தானே உதவுகின்றது. இதனை எதிரணித்தலைவரே முன்னின்று செய்தபோதும் இப்போது வேடமிட்டு வித்தை காட்டுகிறார். கள உறவுகளுக்கு அறிவுரை சொல்லவும், அவர்களிடம் அறிவுரை கேட்கவும் இணையமில்லாவிட்டால் என்ன செய்ய முடியும்? என்று கேட்கிறார். இது நியாயமான கேள்விதானா?
"கூகுளில்" புகுந்தால் எதுவும் இலகுவாகும். நேரமும் மிச்சமாகும் என்கிறார். மனக்கட்டுப்பாடு இல்லாதவர்கள்தான் சீரழிகிறார். இதனை விடுத்து இணையம்தான் சீரழிக்கிறது என்பதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எமது வாழ்வை வளமாக்க வேண்டியவைகளை மட்டும் உள்வாங்கவேணடும். இணையத்திலேயுள்ள நல்லனவற்றை நீக்கி, தீயனவற்றை நோக்குபவர்களுடைய பார்வைகளில்தான் கோளாறு என்று ஒரு பிடி பிடிக்கிறார்.
இந்த உலகில் எதையும் செலவின்றிப் பெறமுடியாது. ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றை அடையலாம். அதாவது "இறால் போட்டுத்தான் சுறா பிடிக்க வேண்டும்" என்று கூறி, தெளிவான சிந்தனையுடன் இருங்கள். உங்கள் பலவீனங்களால் நீங்கள் சீரழிவதற்கு மற்றவர்மேல் பழிபோடாதீர்கள் என்று எதிரணியினருக்கு கூறுகிறார்.
இவற்றையெல்லாம் எதிர்த்து வாதிட குருவிகளே பறந்து வாருங்கள். விரைந்து வாருங்கள். இறுதியாக உங்கள் அணித்தலைவர் வரமுன் உங்கள் வந்து வாதத்தை வையுங்கள்.
நன்றி
குறிப்பு: நேற்று எழுதிவைத்த எமது தொகுப்புரையை யாழ் களத்திற்குள் நுழைய முடியாமல் போனதினால் முன்வைக்க முடியவில்லை.

