02-14-2006, 10:23 AM
<b>காணாமல் போன தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளரை தேடும் பொலிஸாரின் நடவடிக்கை பலனளிக்கவில்லை</b>
வெலிக்கந்தைப் பகுதியில் ஒட்டுக் குழுக்களால் கடத்தப்பட்டு பின்னர் காணாமல் போன தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊழியர்களை கண்டு பிடிப்பதற்காக கடந்த வாரப் பிற்பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகள் பலனளிக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
வெலிக்கந்தை இராணுவ சோதனை நிலையத்திற்கு அருகில் வைத்து கடந்த மாதப் பிற்பகுதியில் கடத்தப்பட்டவர்களில் இதுவரை ஏழு பேர் விடுவிக்கப்படவில்லை.
இவர்களுக்கு என்ன நடந்ததெனவும் தெரியவரவில்லை.
இந்த நிலையிலேயே வெலிக்கந்தைப் பகுதியில் இவர்களைத் தேடி பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் கடந்த வாரப் பிற்பகுதியில் தேடுதலை மேற்கொண்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒட்டுப் படைகளால் கடத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட ஐவரையும் இணைத்துக் கொண்டே காடுகளினுள் இந்தத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவ்வட்டாரங்கள் கூறின.
எனினும் இந்தத் தேடுதலின் போது எவரும் கண்டுபிடிக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம் அண்மையில் கருணா குழுவிலிருந்து தப்பி வந்த சிறுவனொருவன் வெலிக்கந்தை தீவுச்சேனைப் பகுதியில் கருணா குழுவின் முகாம்களிருப்பதாகவும் கடத்தப்பட்ட பலர் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தான். எனினும் இதுவரை அந்தச் சிறுவனை கண்காணிப்புக் குழு சந்திக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது
தினக்குரல்
வெலிக்கந்தைப் பகுதியில் ஒட்டுக் குழுக்களால் கடத்தப்பட்டு பின்னர் காணாமல் போன தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊழியர்களை கண்டு பிடிப்பதற்காக கடந்த வாரப் பிற்பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகள் பலனளிக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
வெலிக்கந்தை இராணுவ சோதனை நிலையத்திற்கு அருகில் வைத்து கடந்த மாதப் பிற்பகுதியில் கடத்தப்பட்டவர்களில் இதுவரை ஏழு பேர் விடுவிக்கப்படவில்லை.
இவர்களுக்கு என்ன நடந்ததெனவும் தெரியவரவில்லை.
இந்த நிலையிலேயே வெலிக்கந்தைப் பகுதியில் இவர்களைத் தேடி பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் கடந்த வாரப் பிற்பகுதியில் தேடுதலை மேற்கொண்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒட்டுப் படைகளால் கடத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட ஐவரையும் இணைத்துக் கொண்டே காடுகளினுள் இந்தத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவ்வட்டாரங்கள் கூறின.
எனினும் இந்தத் தேடுதலின் போது எவரும் கண்டுபிடிக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம் அண்மையில் கருணா குழுவிலிருந்து தப்பி வந்த சிறுவனொருவன் வெலிக்கந்தை தீவுச்சேனைப் பகுதியில் கருணா குழுவின் முகாம்களிருப்பதாகவும் கடத்தப்பட்ட பலர் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தான். எனினும் இதுவரை அந்தச் சிறுவனை கண்காணிப்புக் குழு சந்திக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது
தினக்குரல்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

