02-12-2006, 06:10 AM
<b>ஜெனீவாவிலும் '20 க்கு 40' கணக்கிடுவாரோ நிமல் சிறிபால டி சில்வா?: கலக்கத்தில் ஜே.வி.பி.!! </b>
சிறிலங்கா அரசியலில் '20-க்கு 40' என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிற அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை ஜெனீவா பேச்சுக்கான குழுவாக அரசாங்கம் நியமித்திருப்பதால் ஜே.வி.பி. கலக்கமடைந்திருப்பதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற சிறிலங்கா நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் சுதந்திரக் கட்சியுடன் ஜே.வி.பி. கூட்டணி அமைத்தது.
சுதந்திரக் கட்சி அணியில் போட்டியிட ஜே.வி.பி. 25 ஆசனங்களைத்தான் கேட்டிருந்தது. ஜே.வி.பி.யுடன் ஆசனப் பகிர்வு பேச்சுக்களை நடத்திக் கொண்டிருந்த நிமல் சிறிபலா டி சில்வா, திருகோணமலை, அம்பாறை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தகுதியான சுதந்திரக் கட்சி வேட்பாளர்கள் இல்லை என்பதால் 19 ஆசனங்களைக் கூடுதலாக ஜே.வி.பி.க்கு அளித்திருக்கிறார்.
ஜே.வி.பி. கேட்டது என்னவோ 20. நிமல் சிறிபால கொடுத்தது என்ன 40. ஆகையால் நிமல் சிறிபால டி சில்வாவை ஜே.வி.பி.யினர் சிங்களத்தில் '20-க்கு 40' என்று புனை பெயரிட்டு அழைத்து வந்தனர்.
தற்போது அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களின் அடிப்படையில் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்கவுக்கு அடுத்திருக்கும் மூத்த அமைச்சர் என்கிற வகையில் நிமல் சிறிபால டி சில்வா ஜெனீவா பேச்சுக்கான அரசாங்கத்தின் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் கூட்டணியைப் போலவே விடுதலைப் புலிகளுடன் நடத்துகிற பேச்சுக்களிலும் '20-க்கு 40' என்ற கணக்கில் விட்டுக்கொடுப்புகளை நிமல் சிறிபால டி சில்வா செய்துவிடுவாரோ என்ற அச்சம் ஜே.வி.பி.யிடம் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தைகளுக்கான குழுவிற்கு அறிவு போதிக்கும் பயிலரங்குக் கூட்டம் கொழும்பில் நடத்தப்பட்ட போது நிமல் சிறிபால டி சில்வாவின் செயற்பாடுகள் ஜே.வி.பி.யினரை மேலும் கலக்கமடையச் செய்திருப்பதாகவும் தெரிகிறது.
அமெரிக்கா வழங்கிய 'அறிவு'ப் பயிலரங்கில் எதுவித அக்கறையுமின்றி நிமல் சிறிபால டி சில்வா மந்தமான நிலையில் இருந்ததைக் கண்ட சிலர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளனர். மகிந்தவும் நிமல் சிறிபால டி சில்வாவின் பெயரைக் குறிப்பிடாமலேயே, தூக்கத்தைக் கலைத்துவிட்டு அனைவரும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கக் குழுவினர் ஜெனீவா சென்று பேச்சு நடத்தி முடித்துவிட்டு வரும் வரையில் 'நெருப்பை' மடியில் கட்டிக் கொண்டு இருப்பதைத் தவிர எங்கள் கட்சிக்கு வேறு வழியில்லை என்கின்றனர் ஜே.வி.பி.யினர்.
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
சிறிலங்கா அரசியலில் '20-க்கு 40' என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிற அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை ஜெனீவா பேச்சுக்கான குழுவாக அரசாங்கம் நியமித்திருப்பதால் ஜே.வி.பி. கலக்கமடைந்திருப்பதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற சிறிலங்கா நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் சுதந்திரக் கட்சியுடன் ஜே.வி.பி. கூட்டணி அமைத்தது.
சுதந்திரக் கட்சி அணியில் போட்டியிட ஜே.வி.பி. 25 ஆசனங்களைத்தான் கேட்டிருந்தது. ஜே.வி.பி.யுடன் ஆசனப் பகிர்வு பேச்சுக்களை நடத்திக் கொண்டிருந்த நிமல் சிறிபலா டி சில்வா, திருகோணமலை, அம்பாறை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தகுதியான சுதந்திரக் கட்சி வேட்பாளர்கள் இல்லை என்பதால் 19 ஆசனங்களைக் கூடுதலாக ஜே.வி.பி.க்கு அளித்திருக்கிறார்.
ஜே.வி.பி. கேட்டது என்னவோ 20. நிமல் சிறிபால கொடுத்தது என்ன 40. ஆகையால் நிமல் சிறிபால டி சில்வாவை ஜே.வி.பி.யினர் சிங்களத்தில் '20-க்கு 40' என்று புனை பெயரிட்டு அழைத்து வந்தனர்.
தற்போது அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களின் அடிப்படையில் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்கவுக்கு அடுத்திருக்கும் மூத்த அமைச்சர் என்கிற வகையில் நிமல் சிறிபால டி சில்வா ஜெனீவா பேச்சுக்கான அரசாங்கத்தின் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் கூட்டணியைப் போலவே விடுதலைப் புலிகளுடன் நடத்துகிற பேச்சுக்களிலும் '20-க்கு 40' என்ற கணக்கில் விட்டுக்கொடுப்புகளை நிமல் சிறிபால டி சில்வா செய்துவிடுவாரோ என்ற அச்சம் ஜே.வி.பி.யிடம் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தைகளுக்கான குழுவிற்கு அறிவு போதிக்கும் பயிலரங்குக் கூட்டம் கொழும்பில் நடத்தப்பட்ட போது நிமல் சிறிபால டி சில்வாவின் செயற்பாடுகள் ஜே.வி.பி.யினரை மேலும் கலக்கமடையச் செய்திருப்பதாகவும் தெரிகிறது.
அமெரிக்கா வழங்கிய 'அறிவு'ப் பயிலரங்கில் எதுவித அக்கறையுமின்றி நிமல் சிறிபால டி சில்வா மந்தமான நிலையில் இருந்ததைக் கண்ட சிலர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளனர். மகிந்தவும் நிமல் சிறிபால டி சில்வாவின் பெயரைக் குறிப்பிடாமலேயே, தூக்கத்தைக் கலைத்துவிட்டு அனைவரும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கக் குழுவினர் ஜெனீவா சென்று பேச்சு நடத்தி முடித்துவிட்டு வரும் வரையில் 'நெருப்பை' மடியில் கட்டிக் கொண்டு இருப்பதைத் தவிர எங்கள் கட்சிக்கு வேறு வழியில்லை என்கின்றனர் ஜே.வி.பி.யினர்.
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
"

