02-12-2006, 06:07 AM
<b>அரசாங்கக் குழுவில் கடற்படை தளபதி, காவல்துறை மா அதிபர்? </b>
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையேயான ஜெனீவா பேச்சுக்களில் சிறிலங்கா கடற்படை தளபதி மற்றும் காவல்துறை மா அதிபர் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.
சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ, கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க, சமாதான செயலகத்தின் பணிப்பாளர் ஜோன் குணரத்ன, திட்ட அமுலாக்கல் அமைச்சின் செயலாளர் அஜித் நிவாட் கப்ரால், சட்டத்தரணி கோமின் தயாசிறி ஆகியோர் அக்குழுவில் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அதிகாரிகள் குழு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் அதிகாரிகள் தொடர்பான விவரங்கள் எதிர்வரும் சில நாட்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையேயான ஜெனீவா பேச்சுக்களில் சிறிலங்கா கடற்படை தளபதி மற்றும் காவல்துறை மா அதிபர் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.
சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ, கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க, சமாதான செயலகத்தின் பணிப்பாளர் ஜோன் குணரத்ன, திட்ட அமுலாக்கல் அமைச்சின் செயலாளர் அஜித் நிவாட் கப்ரால், சட்டத்தரணி கோமின் தயாசிறி ஆகியோர் அக்குழுவில் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அதிகாரிகள் குழு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் அதிகாரிகள் தொடர்பான விவரங்கள் எதிர்வரும் சில நாட்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
"

