02-12-2006, 01:27 AM
வணக்கம்!! நீண்ட இடைவெளிக்குப்பின்னம் மீண்டும் தொடர்கிறேன் ....
என்னுடன் வேலை செய்யும் நண்பரொருவர், "சாய்பாபாவின் பிறந்த தினத்திற்காக" தனது வீட்டில் பஜனை நடைபெற இருப்பதாக, என்னை குடும்பத்துடன் அழைத்திருந்தார். எனக்கு இவற்றில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், எனது குடும்பத்தில் சிலர் "பாபா பிளக் சிப் .." பாடுபவர்களாக இருந்தபடியால், அங்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன்.
வீடு முழுக்க விலையுயர்ந்த மலர்களால் சாயிபாபாவின் படங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவற்றின் நடுவே விலையுயர்ந்த ஆடம்பரக் கதிரை!! கதிரையைச் சுற்றியும் ஆடம்பர அலங்காரங்கள்!! ஆகா.. இக்கதிரையில் சாய்பாபா இருந்திருக்க வேண்டுமென ஊகித்துக் கொண்டேன்! ஆனால் புட்டபத்தியில் பாபா உட்கார்ந்த கதிரைதான் இங்கு விமானமூலம் கொண்டு வந்திருக்கிறார்களோ தெரியவில்லை???
அங்கு வந்திருந்த பக்தர்கள் வட இந்தியர்களும், எம்மிலுள்ள சில வசதியானவர்களும்!! எதோ நானும் அங்கு சென்று விட்டேன்!!!
மிக அமைதியாக பஜனை தொடங்கியது! மிக அமைதியாகவும் பக்தி மயமாகவுமிருந்தது! வந்திருந்த பலர் மாறி மாறிப் பாடினார்கள். ஆனால் பஜனை முடிந்த பின் தான் ரோதனைகள் ஆரம்பமாகியது. பஜனையின் பின் ஆராதனைகள் அட்டகாசமாக முடிந்தபின், பாரிய ஆடம்பர கேக் கொண்டுவரப்பட்டது. "கப்பி பேத்டே ரு பாபா" என்ற பாடலுடன் கேக் வெட்டிப் பரிமாறப்பட்டது. பின் ஆடம்பரமாக பலவகை உணவு வகைகளுடன் இராப்போசனம் வந்திருந்தவர்களுக்குப் பரிமாறப்பட்டது.
சாய்பாவின் பஜனை மன்னிக்கவும் ஆடம்பர பேத்டே நடத்து முடிந்த பின் எனது நண்பரைக் கேட்டேன் "என்ன இதற்கு கனக்க முடிந்திக்கும் போலுள்ளது?" .. "ஆண்டவனுக்கு செய்வதில் பின்னிற்கக்கூடாது" பதில் வந்தது.
ஆண்டவா ....
* நீதான் இம்மண்ணுலகில் சாய்பாபாவாக அவதரித்திருந்தாலும், இவ்வளவு ஆடம்பரங்களையா எதிர் பார்க்கின்றாய்???
* இது போன்ற விழாக்களுக்கு மன்னிக்கவும் ஆடம்பர பேத்டே பாட்டிகளுக்கு செலவழித்து அநியாயம் செய்யும்படி சொன்னாயா???
* இல்லை, இம்மேற்கத்தேய கேக் வெட்டும் கலாச்சாரந்தான், உன் காலாச்சாரம் என்று ஏற்றுக் கொண்டாயா???
"ஏழ்மையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்" என்று யாரோ சொல்லிச் சென்றான். இந்த ஆடம்பரங்களுக்குச் செலவழிக்கும், இது மாதிரியான அநாவசிய செலவீனங்களுக்குச் செலவழிக்கும் பணங்களை ஆயிரம் எம்தாயக ஏழைகளுக்குச் செலவழிக்க முடியாதா???
சிங்கள இராணுவ அடக்குமுறைகள், கொலை வெறியாட்டங்கள், ..., சுனாமிகள் என்று அல்லலுறும் எம்மக்களுக்கு உதவுவதே, ஆயிரமாயிரம் புண்ணியங்களைத் தேடித்தருமென்பது மட்டுமன்றி ஆண்டனின் அருள் கடாச்சத்தையும் எம்பால் திருப்புமென்பதையும், எப்போதுதான் இந்த ஆடம்பர பக்தர்கள் உணருவார்கள்???????????????????
என்னுடன் வேலை செய்யும் நண்பரொருவர், "சாய்பாபாவின் பிறந்த தினத்திற்காக" தனது வீட்டில் பஜனை நடைபெற இருப்பதாக, என்னை குடும்பத்துடன் அழைத்திருந்தார். எனக்கு இவற்றில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், எனது குடும்பத்தில் சிலர் "பாபா பிளக் சிப் .." பாடுபவர்களாக இருந்தபடியால், அங்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன்.
வீடு முழுக்க விலையுயர்ந்த மலர்களால் சாயிபாபாவின் படங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவற்றின் நடுவே விலையுயர்ந்த ஆடம்பரக் கதிரை!! கதிரையைச் சுற்றியும் ஆடம்பர அலங்காரங்கள்!! ஆகா.. இக்கதிரையில் சாய்பாபா இருந்திருக்க வேண்டுமென ஊகித்துக் கொண்டேன்! ஆனால் புட்டபத்தியில் பாபா உட்கார்ந்த கதிரைதான் இங்கு விமானமூலம் கொண்டு வந்திருக்கிறார்களோ தெரியவில்லை???
அங்கு வந்திருந்த பக்தர்கள் வட இந்தியர்களும், எம்மிலுள்ள சில வசதியானவர்களும்!! எதோ நானும் அங்கு சென்று விட்டேன்!!!
மிக அமைதியாக பஜனை தொடங்கியது! மிக அமைதியாகவும் பக்தி மயமாகவுமிருந்தது! வந்திருந்த பலர் மாறி மாறிப் பாடினார்கள். ஆனால் பஜனை முடிந்த பின் தான் ரோதனைகள் ஆரம்பமாகியது. பஜனையின் பின் ஆராதனைகள் அட்டகாசமாக முடிந்தபின், பாரிய ஆடம்பர கேக் கொண்டுவரப்பட்டது. "கப்பி பேத்டே ரு பாபா" என்ற பாடலுடன் கேக் வெட்டிப் பரிமாறப்பட்டது. பின் ஆடம்பரமாக பலவகை உணவு வகைகளுடன் இராப்போசனம் வந்திருந்தவர்களுக்குப் பரிமாறப்பட்டது.
சாய்பாவின் பஜனை மன்னிக்கவும் ஆடம்பர பேத்டே நடத்து முடிந்த பின் எனது நண்பரைக் கேட்டேன் "என்ன இதற்கு கனக்க முடிந்திக்கும் போலுள்ளது?" .. "ஆண்டவனுக்கு செய்வதில் பின்னிற்கக்கூடாது" பதில் வந்தது.
ஆண்டவா ....
* நீதான் இம்மண்ணுலகில் சாய்பாபாவாக அவதரித்திருந்தாலும், இவ்வளவு ஆடம்பரங்களையா எதிர் பார்க்கின்றாய்???
* இது போன்ற விழாக்களுக்கு மன்னிக்கவும் ஆடம்பர பேத்டே பாட்டிகளுக்கு செலவழித்து அநியாயம் செய்யும்படி சொன்னாயா???
* இல்லை, இம்மேற்கத்தேய கேக் வெட்டும் கலாச்சாரந்தான், உன் காலாச்சாரம் என்று ஏற்றுக் கொண்டாயா???
"ஏழ்மையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்" என்று யாரோ சொல்லிச் சென்றான். இந்த ஆடம்பரங்களுக்குச் செலவழிக்கும், இது மாதிரியான அநாவசிய செலவீனங்களுக்குச் செலவழிக்கும் பணங்களை ஆயிரம் எம்தாயக ஏழைகளுக்குச் செலவழிக்க முடியாதா???
சிங்கள இராணுவ அடக்குமுறைகள், கொலை வெறியாட்டங்கள், ..., சுனாமிகள் என்று அல்லலுறும் எம்மக்களுக்கு உதவுவதே, ஆயிரமாயிரம் புண்ணியங்களைத் தேடித்தருமென்பது மட்டுமன்றி ஆண்டனின் அருள் கடாச்சத்தையும் எம்பால் திருப்புமென்பதையும், எப்போதுதான் இந்த ஆடம்பர பக்தர்கள் உணருவார்கள்???????????????????
" "

