02-10-2006, 05:30 AM
<b>சிறிலங்கா அரசாங்கக் குழுத் தலைவருடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு </b>
ஜெனீவா பேச்சுக்களில் கலந்து கொள்ளும் சிறிலங்கா அரசாங்கக் குழுவின் தலைவரான சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் ஜெஃப்ரி லான்ஸ்ரெட் நேற்று வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த கால சிறிலங்கா அரசாங்கங்கள் நடத்திய பேச்சுக்களின் அடிப்படையில் அரசாங்கத்தின் எதிர்காலக் கொள்கையை வகுப்பதில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கவனமெடுத்து வருவதாக அமெரிக்க தூதுவரிடம் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அரசாங்கக் குழுவினருக்கான பயிலரங்குகள் தொடர்பாகவும் அவை வெற்றிகரமாக நடந்துள்ளன என்றும் அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவிக்கப்பட்டது.
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உள்ளார்ந்த ஈடுபாட்டோடு அமைதி முயற்சிகளில் ஈடுபடுவதற்கு அமெரிக்க அரசாங்கம் பாராட்டுத் தெரிவிப்பதாக அமெரிக்கத் தூதுவர் ஜெஃப்ரி லான்ஸ்ரெட் கூறினார்.
சோதனையான காலங்களில் கூட அரசாங்கம் பொறுமையாக இருந்தமை பாராட்டுக்குரியது என்றும் அவர் கூறினார் என்று அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
ஜெனீவா பேச்சுக்களில் கலந்து கொள்ளும் சிறிலங்கா அரசாங்கக் குழுவின் தலைவரான சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் ஜெஃப்ரி லான்ஸ்ரெட் நேற்று வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த கால சிறிலங்கா அரசாங்கங்கள் நடத்திய பேச்சுக்களின் அடிப்படையில் அரசாங்கத்தின் எதிர்காலக் கொள்கையை வகுப்பதில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கவனமெடுத்து வருவதாக அமெரிக்க தூதுவரிடம் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அரசாங்கக் குழுவினருக்கான பயிலரங்குகள் தொடர்பாகவும் அவை வெற்றிகரமாக நடந்துள்ளன என்றும் அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவிக்கப்பட்டது.
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உள்ளார்ந்த ஈடுபாட்டோடு அமைதி முயற்சிகளில் ஈடுபடுவதற்கு அமெரிக்க அரசாங்கம் பாராட்டுத் தெரிவிப்பதாக அமெரிக்கத் தூதுவர் ஜெஃப்ரி லான்ஸ்ரெட் கூறினார்.
சோதனையான காலங்களில் கூட அரசாங்கம் பொறுமையாக இருந்தமை பாராட்டுக்குரியது என்றும் அவர் கூறினார் என்று அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
"

