02-10-2006, 04:55 AM
<b>யுத்தநிறுத்த ஒப்பந்த விதிகள்
அமுலாக்கம் குறித்து மட்டுமே
பேச்சு என்கின்றனர் புலிகள் </b>
""ஜெனீவாவில் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடு தலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் பேச்சு களின்போது தற்போதைய யுத்தநிறுத்த உடன்பாட்டு விதிகளை செம்மையாக நடைமுறைப்படுத்துவது பற்றி மட்டுமே பேசப்படும். அதற்கு அப்பால் எந்த விடயமும் பேசப்பட மாட்டாது. ஜெனீவாப் பேச்சுக்கான நிகழ்ச்சி நிரல் அதுதான்.''
- இப்படி திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றனர் விடுதலைப் புலிகள்.
ஜெனீவாப் பேச்சுக்கான நிகழ்ச்சி நிரலை பகிரங்கப்படுத்துமாறு இலங்கை அரசை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கோரியிருப்பது குறித்து கருத்துக் கேட்ட போதே புலிகளின் தலைமையுடன் தொடர் புடைய வட்டாரங்கள், புலிகளின் தலைமையின் நிலைப்பாட்டை இவ்வாறு வெளிப் படுத்தின.
ஜெனீவாப் பேச்சுகளின்போது, "மனித உரிமைகள் நடைமுறைப் படுத்தல்' என்ற அம்சம் பற்றி மேலதிகமாகப் பேசுவது குறித்து சில வட்டாரங்கள் நோர்வே ஊடாக ஒரு யோசனையைப் பிரேரித்த போதிலும், அது வும் நிராகரிக்கப்பட்டுவிட்டாகத் தெரிகிறது.
""இரண்டு நாள் பேச்சிலும் ஆக, யுத்த நிறுத்த அமுலாக்கம் - செம்மையாக நடைமுறைப்படுத்தல் பற்றி மட்டுமே பேசப்படும். அதற்கு அப்பால் பேசப்பட மாட்டாது. யுத்த நிறுத்த ஏற்பாடுகளை உறுதியாக நடை முறைப் படுத்துவது குறித்து இணக்கம் காணப்படு வது மட்டுமல்லாமல், காணப்பட்ட இணக் கம் களத்தில் வேகமாகவும், திறமையாக வும், குழப்பமின்றியும் செயல்படுத்தப்பட வும் வேண்டும். அது செயல்படுத்தப்படுவதில் தான் அமைதி முயற்சிகளின் அடுத்த நகர்வு தங்கியிருக்கின்றது. யுத்த நிறுத்தம் செம்மை யாக செயற்படுத்தப்படாமல் அமைதி முயற்சி கள் தொடரும் என்ற எதிர்பார்ப்புக்கே இடமில்லை.'' - என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
""யுத்தநிறுத்த உடன்பாட்டு விதிகளை செம்மையாக நடைமுறைப்படுத்துவது குறித்து மட்டுமே ஜெனீவாப் பேச்சில் ஆரா யப்படும்'' - என்ற தகவலை நேற்று கிளிநொச்சியில் வைத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வ னும் வலியுறுத்திக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
<i><b>தகவல் மூலம் -உதயன்</b></i>
அமுலாக்கம் குறித்து மட்டுமே
பேச்சு என்கின்றனர் புலிகள் </b>
""ஜெனீவாவில் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடு தலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் பேச்சு களின்போது தற்போதைய யுத்தநிறுத்த உடன்பாட்டு விதிகளை செம்மையாக நடைமுறைப்படுத்துவது பற்றி மட்டுமே பேசப்படும். அதற்கு அப்பால் எந்த விடயமும் பேசப்பட மாட்டாது. ஜெனீவாப் பேச்சுக்கான நிகழ்ச்சி நிரல் அதுதான்.''
- இப்படி திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றனர் விடுதலைப் புலிகள்.
ஜெனீவாப் பேச்சுக்கான நிகழ்ச்சி நிரலை பகிரங்கப்படுத்துமாறு இலங்கை அரசை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கோரியிருப்பது குறித்து கருத்துக் கேட்ட போதே புலிகளின் தலைமையுடன் தொடர் புடைய வட்டாரங்கள், புலிகளின் தலைமையின் நிலைப்பாட்டை இவ்வாறு வெளிப் படுத்தின.
ஜெனீவாப் பேச்சுகளின்போது, "மனித உரிமைகள் நடைமுறைப் படுத்தல்' என்ற அம்சம் பற்றி மேலதிகமாகப் பேசுவது குறித்து சில வட்டாரங்கள் நோர்வே ஊடாக ஒரு யோசனையைப் பிரேரித்த போதிலும், அது வும் நிராகரிக்கப்பட்டுவிட்டாகத் தெரிகிறது.
""இரண்டு நாள் பேச்சிலும் ஆக, யுத்த நிறுத்த அமுலாக்கம் - செம்மையாக நடைமுறைப்படுத்தல் பற்றி மட்டுமே பேசப்படும். அதற்கு அப்பால் பேசப்பட மாட்டாது. யுத்த நிறுத்த ஏற்பாடுகளை உறுதியாக நடை முறைப் படுத்துவது குறித்து இணக்கம் காணப்படு வது மட்டுமல்லாமல், காணப்பட்ட இணக் கம் களத்தில் வேகமாகவும், திறமையாக வும், குழப்பமின்றியும் செயல்படுத்தப்பட வும் வேண்டும். அது செயல்படுத்தப்படுவதில் தான் அமைதி முயற்சிகளின் அடுத்த நகர்வு தங்கியிருக்கின்றது. யுத்த நிறுத்தம் செம்மை யாக செயற்படுத்தப்படாமல் அமைதி முயற்சி கள் தொடரும் என்ற எதிர்பார்ப்புக்கே இடமில்லை.'' - என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
""யுத்தநிறுத்த உடன்பாட்டு விதிகளை செம்மையாக நடைமுறைப்படுத்துவது குறித்து மட்டுமே ஜெனீவாப் பேச்சில் ஆரா யப்படும்'' - என்ற தகவலை நேற்று கிளிநொச்சியில் வைத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வ னும் வலியுறுத்திக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
<i><b>தகவல் மூலம் -உதயன்</b></i>
"
"
"

