02-10-2006, 04:49 AM
<b>ஜெனீவா நகரில் அம்பலப்படுத்துவோம்</b>
<b>ஆசிரியர் தலையங்கம்</b>
துணைக்குழு விடயத்தில் அரசு அசமந்தப்போக்குக் காட்டி வரும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு ஏன்இ எதற்காகப் போகவேண்டும் என்ற கேள்வி தமிழ் மக்களிடையே எழுகின்றது. சிங்கள இனவாதம் தமிழினத்தின் உரிமைகளை வழங்கப் போவதில்லை. கடந்த ஐம்பத்து எட்டு வருடங்களாக பேரினவாத அச்சில் தான் அவர்கள் சுழன்று கொண்டிருக்கிறார்கள்.
தமிழினம் நீண்டதொரு விடுதலைப் பயணம். அது களைத்து விடவில்லைஇ சரிந்து விடவில்லை. தமது இலட்சியம் தமிழீழத் தாயகம் என்ற அந்த உறுதி தளரவில்லை. சண்டைக் காலமா? சமாதான சூழலா? பலத்தில் தளர்வில்லை. விடுதலைப் போராட்டம் இன்னும் தேசிய எழுச்சி பெறுகிறதுஇ பலமும் வளர்கிறது. இதனை தென்னிலங்கைப் பேரினவாதம் உணரவில்லை. மகாவீரர்களாகத் தங்களைப் புகழ்ந்து தள்ளிக் கொண்டு வீறாப்பு வார்த்தைகளைக் கொட்டிக்கொண்டு ஒற்றையாட்சி என்ற கோட்பாட்டை இன்னும் கையிலே வைத்துக்கொண்டிருக்கின்றனர். இது சமாதான வழி முறைகளுக்கான பெரும் முட்டுக்கட்டை.
கடந்த நான்கு வருடங்களாக அமுல்படுத்தப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை சிறிலங்கா அரசு முழுமையாக அமுல்ப்படுத்தியிருக்குமானால் ஏதோ அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் சிந்திக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால்இ அவ்வாறு ஏற்படுத்தவில்லை. உடன்படிக்கைக்கு முரண்பாடான செயற்பாடுகளில் அக்கறை செலுத்தி அதனைச் சாகடிப்பதற்கான நடவடிக்கைகளையே மேற்கொண்டனர். ரணில் விக்கிரமசிங்கா சமாதானம் எனக் கூறிக் கொண்டு பிரதமரானதும் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சர்வதேச வலைப் பின்னலில் சிக்க வைத்து சுயலாப அரசியல் இலாபம் தேட முனைந்தார். முயற்சி பயனளிக்கவில்லை. டோக்கியோ மாநாட்டை விடுதலைப் புலிகள் நிராகரித்து ரணிலின் சர்வதேச வலைப் பின்னலை சிதைத்துவிட்டனர்.
சந்திரிகா அம்மையார் தமது ஆட்சியின்போது சமாதானம் எனக் கூறிக்கொண்டு போர்த் திட்டங்களை வகுத்தார். பேச்சுக்கான காய் நகர்த்தலை அவர் கடுகளவேனும் மேற்கொள்ளவில்லை. அவர் ஆட்சி மங்கிப் போக இனவாதிகளின் கூட்டோடு பௌத்த மேலாண்மைவாதியாக முன்னுரிமைப்படுத்திக் கொண்டு வந்த மகிந்தர் இப்போது திணறுகிறார். அவரது ஆட்சி சூட்சுமம் எல்லாம் வீரவன்சஇ சோமவன்ச மற்றும் ஹெலஉறுமய பிக்குகளின் கைகளில்தான் உள்ளது.
கடிவாளமிடப்பட்ட குதிரையாக இவர் இருக்கிறார். இவர்கள் சமாதானத்தை தரப்போறவர்களல்ல. தமிழினத்துக்கு எதிராக போர்ச் சூழலையே இன்னும் இன்னும் அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையே மேற்கொள்கின்றனர். பேச்சுவார்த்தையை எங்கே நடத்துவது என்பதில் ஏற்பட்ட இழுபறித்தனமான நடவடிக்கைக்கு விடுதலைப்புலிகள் பெரும் தன்மையுடன் இணங்கிக் கொண்ட பிற்பாடு. பேச்சுக்கு முன்னரான ஒரு புறச்சூழலை உருவாக்குவதற்குக்கூட சிறிலங்கா அரசு முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. ஒட்டுக்குழுக்களை வைத்துக் கொண்டு அவர்களை ஏவி தமிழ் மக்களைக் கொன்றொழிப்பதில் ஈடுபட்டு வந்த சிறிலங்கா அரசு தற்போது மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தப்பட்ட விடயத்தில் அசமந்தத்தனமான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
ஒட்டுப்படைகள் எங்களிடமில்லை என ஒரு காலத்தில் அரசு கூறியது போன்று இனியும் கூறமுடியாது. ஏனெனில்இ அவ்வாறான குழுக்களை அரசு வைத்திருப்பதும் அவர்களது செயற்பாடுகளும்தான் சமாதான முயற்சிகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பது இப்போது சர்வதேச சமூகமே உணர்ந்து கொண்டு விட்டது. இத்தகையதொரு சூழலில்தான் தற்போது பேச்சுக்கான அறிவிப்பினை நோர்வே வெளியிட்டுள்ளது.
போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு நான்காண்டுகள் நிறைவாகின்ற நாளில் மீண்டும் இருதரப்பும் சந்திக்கப் போகின்றன. வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறலை மேற்கொண்டு வரும் அரச படைப் புலனாய்வுப் பிரிவும் ஒட்டுக்குழுக்களும் உச்சக் கட்டட நடவடிக்கையாக தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களைக் கடத்திச் சென்றுள்ளனர். இன்னும் ஏழு பேரின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகவுள்ளது. இவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகளில் அரசு அசமந்தத்தனம் காட்டி வருகின்றது.
இந்த நிலையில் ஜெனீவாப் பேச்சுவார்த்தை திகதி நிர்ணயமாகி விட்டது. ஜெனீவாப் பேச்சுக்களை சர்வதேச சமூகம் ஆவலோடு உன்னிப்பாக அவதானிக்கப் போகிறது. எனவேஇ சிங்களப் பேரினவாதம் தமிழினத்துக்கு எதிராக மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களை ஜெனீவா நகரில் வைத்து அம்பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக இதை பயன்படுத்துவோம்.
<i><b>நன்றி- ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு- </b></i><b>ஆசிரியர் தலையங்கம்(10/02/06)</b>
<b>ஆசிரியர் தலையங்கம்</b>
துணைக்குழு விடயத்தில் அரசு அசமந்தப்போக்குக் காட்டி வரும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு ஏன்இ எதற்காகப் போகவேண்டும் என்ற கேள்வி தமிழ் மக்களிடையே எழுகின்றது. சிங்கள இனவாதம் தமிழினத்தின் உரிமைகளை வழங்கப் போவதில்லை. கடந்த ஐம்பத்து எட்டு வருடங்களாக பேரினவாத அச்சில் தான் அவர்கள் சுழன்று கொண்டிருக்கிறார்கள்.
தமிழினம் நீண்டதொரு விடுதலைப் பயணம். அது களைத்து விடவில்லைஇ சரிந்து விடவில்லை. தமது இலட்சியம் தமிழீழத் தாயகம் என்ற அந்த உறுதி தளரவில்லை. சண்டைக் காலமா? சமாதான சூழலா? பலத்தில் தளர்வில்லை. விடுதலைப் போராட்டம் இன்னும் தேசிய எழுச்சி பெறுகிறதுஇ பலமும் வளர்கிறது. இதனை தென்னிலங்கைப் பேரினவாதம் உணரவில்லை. மகாவீரர்களாகத் தங்களைப் புகழ்ந்து தள்ளிக் கொண்டு வீறாப்பு வார்த்தைகளைக் கொட்டிக்கொண்டு ஒற்றையாட்சி என்ற கோட்பாட்டை இன்னும் கையிலே வைத்துக்கொண்டிருக்கின்றனர். இது சமாதான வழி முறைகளுக்கான பெரும் முட்டுக்கட்டை.
கடந்த நான்கு வருடங்களாக அமுல்படுத்தப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை சிறிலங்கா அரசு முழுமையாக அமுல்ப்படுத்தியிருக்குமானால் ஏதோ அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் சிந்திக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால்இ அவ்வாறு ஏற்படுத்தவில்லை. உடன்படிக்கைக்கு முரண்பாடான செயற்பாடுகளில் அக்கறை செலுத்தி அதனைச் சாகடிப்பதற்கான நடவடிக்கைகளையே மேற்கொண்டனர். ரணில் விக்கிரமசிங்கா சமாதானம் எனக் கூறிக் கொண்டு பிரதமரானதும் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சர்வதேச வலைப் பின்னலில் சிக்க வைத்து சுயலாப அரசியல் இலாபம் தேட முனைந்தார். முயற்சி பயனளிக்கவில்லை. டோக்கியோ மாநாட்டை விடுதலைப் புலிகள் நிராகரித்து ரணிலின் சர்வதேச வலைப் பின்னலை சிதைத்துவிட்டனர்.
சந்திரிகா அம்மையார் தமது ஆட்சியின்போது சமாதானம் எனக் கூறிக்கொண்டு போர்த் திட்டங்களை வகுத்தார். பேச்சுக்கான காய் நகர்த்தலை அவர் கடுகளவேனும் மேற்கொள்ளவில்லை. அவர் ஆட்சி மங்கிப் போக இனவாதிகளின் கூட்டோடு பௌத்த மேலாண்மைவாதியாக முன்னுரிமைப்படுத்திக் கொண்டு வந்த மகிந்தர் இப்போது திணறுகிறார். அவரது ஆட்சி சூட்சுமம் எல்லாம் வீரவன்சஇ சோமவன்ச மற்றும் ஹெலஉறுமய பிக்குகளின் கைகளில்தான் உள்ளது.
கடிவாளமிடப்பட்ட குதிரையாக இவர் இருக்கிறார். இவர்கள் சமாதானத்தை தரப்போறவர்களல்ல. தமிழினத்துக்கு எதிராக போர்ச் சூழலையே இன்னும் இன்னும் அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையே மேற்கொள்கின்றனர். பேச்சுவார்த்தையை எங்கே நடத்துவது என்பதில் ஏற்பட்ட இழுபறித்தனமான நடவடிக்கைக்கு விடுதலைப்புலிகள் பெரும் தன்மையுடன் இணங்கிக் கொண்ட பிற்பாடு. பேச்சுக்கு முன்னரான ஒரு புறச்சூழலை உருவாக்குவதற்குக்கூட சிறிலங்கா அரசு முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. ஒட்டுக்குழுக்களை வைத்துக் கொண்டு அவர்களை ஏவி தமிழ் மக்களைக் கொன்றொழிப்பதில் ஈடுபட்டு வந்த சிறிலங்கா அரசு தற்போது மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தப்பட்ட விடயத்தில் அசமந்தத்தனமான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
ஒட்டுப்படைகள் எங்களிடமில்லை என ஒரு காலத்தில் அரசு கூறியது போன்று இனியும் கூறமுடியாது. ஏனெனில்இ அவ்வாறான குழுக்களை அரசு வைத்திருப்பதும் அவர்களது செயற்பாடுகளும்தான் சமாதான முயற்சிகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பது இப்போது சர்வதேச சமூகமே உணர்ந்து கொண்டு விட்டது. இத்தகையதொரு சூழலில்தான் தற்போது பேச்சுக்கான அறிவிப்பினை நோர்வே வெளியிட்டுள்ளது.
போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு நான்காண்டுகள் நிறைவாகின்ற நாளில் மீண்டும் இருதரப்பும் சந்திக்கப் போகின்றன. வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறலை மேற்கொண்டு வரும் அரச படைப் புலனாய்வுப் பிரிவும் ஒட்டுக்குழுக்களும் உச்சக் கட்டட நடவடிக்கையாக தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களைக் கடத்திச் சென்றுள்ளனர். இன்னும் ஏழு பேரின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகவுள்ளது. இவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகளில் அரசு அசமந்தத்தனம் காட்டி வருகின்றது.
இந்த நிலையில் ஜெனீவாப் பேச்சுவார்த்தை திகதி நிர்ணயமாகி விட்டது. ஜெனீவாப் பேச்சுக்களை சர்வதேச சமூகம் ஆவலோடு உன்னிப்பாக அவதானிக்கப் போகிறது. எனவேஇ சிங்களப் பேரினவாதம் தமிழினத்துக்கு எதிராக மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களை ஜெனீவா நகரில் வைத்து அம்பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக இதை பயன்படுத்துவோம்.
<i><b>நன்றி- ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு- </b></i><b>ஆசிரியர் தலையங்கம்(10/02/06)</b>
"
"
"

