02-10-2006, 01:22 AM
<b>அ) தொடக்கம்</b>
அனைவருக்கும் வணக்கம்
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா அல்லது தீமையடைகிறார்களா (சீரழிந்துபோகிறார்களா) என்பதே இந்தப் பட்டிமன்ற விவாதத்துக்குரிய கேள்வி. இணைய ஊடகமானது பொதுவான பார்வையில் அல்லது வெளித்தோற்றப் பார்வையில் நன்மையளிக்கும் (!) ஊடகமாகத் திகழ்கின்ற போதிலும், அதன் பயன்பாட்டுத் (அல்லது பயனர்) தளத்தில் இளையோரை சீரழிந்துபோகச் செய்வதற்கு சாதகமான ஊடகமாகவே தன்னை அடையாளப்படுத்தியுள்ளது. "நெருப்பில்லாமல் புகையாது" என்பார்கள். காரணம் இல்லாமல் கேள்வி எழாது. இணைய ஊடகத்தால் இளையோர் சீரழிந்துபோகிறார்களா என்கிற கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது என்றால், அதன் பொருள் என்ன? இணைய ஊடகத்தாலான சீரழிவுகளின் தாக்கம் எம்மவர் மத்தியில் வலுப்பெற்று வருகிறது என்பதுவே அது.
"கடவுள் இருக்கிறாரா? இல்லையா?" என்ற கேள்வி(சந்தேகம்) இரண்டு வகைகளில் எழுந்தது.
ஒன்று: அறிவியல் தளத்தில் சிந்தனைகளின் மோதல்களில் வெளிப்பட்டது.
இரண்டு: சமூகவியல் தளத்தில் சீரழிவுகளின் எதிர்வினைகளில் வெளிப்பட்டது.
ஆக மொத்தத்தில், இணையம் நோக்கி எழுப்பப்பட்டிருக்கிற யாழ்கள பட்டிமன்றக் கேள்வியும் இவ்விரு தளங்களிலிருந்துமே எழுப்பப்பட்டிருக்கிறது. எனவே அதற்கான விடையையும் அந்த இரு தளங்களில் இருந்தும் அணுகவேண்டிய கடப்பாடு எமக்குள்ளது.
அனைவருக்கும் வணக்கம்
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா அல்லது தீமையடைகிறார்களா (சீரழிந்துபோகிறார்களா) என்பதே இந்தப் பட்டிமன்ற விவாதத்துக்குரிய கேள்வி. இணைய ஊடகமானது பொதுவான பார்வையில் அல்லது வெளித்தோற்றப் பார்வையில் நன்மையளிக்கும் (!) ஊடகமாகத் திகழ்கின்ற போதிலும், அதன் பயன்பாட்டுத் (அல்லது பயனர்) தளத்தில் இளையோரை சீரழிந்துபோகச் செய்வதற்கு சாதகமான ஊடகமாகவே தன்னை அடையாளப்படுத்தியுள்ளது. "நெருப்பில்லாமல் புகையாது" என்பார்கள். காரணம் இல்லாமல் கேள்வி எழாது. இணைய ஊடகத்தால் இளையோர் சீரழிந்துபோகிறார்களா என்கிற கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது என்றால், அதன் பொருள் என்ன? இணைய ஊடகத்தாலான சீரழிவுகளின் தாக்கம் எம்மவர் மத்தியில் வலுப்பெற்று வருகிறது என்பதுவே அது.
"கடவுள் இருக்கிறாரா? இல்லையா?" என்ற கேள்வி(சந்தேகம்) இரண்டு வகைகளில் எழுந்தது.
ஒன்று: அறிவியல் தளத்தில் சிந்தனைகளின் மோதல்களில் வெளிப்பட்டது.
இரண்டு: சமூகவியல் தளத்தில் சீரழிவுகளின் எதிர்வினைகளில் வெளிப்பட்டது.
ஆக மொத்தத்தில், இணையம் நோக்கி எழுப்பப்பட்டிருக்கிற யாழ்கள பட்டிமன்றக் கேள்வியும் இவ்விரு தளங்களிலிருந்துமே எழுப்பப்பட்டிருக்கிறது. எனவே அதற்கான விடையையும் அந்த இரு தளங்களில் இருந்தும் அணுகவேண்டிய கடப்பாடு எமக்குள்ளது.

