02-09-2006, 08:39 AM
<b>யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை திருத்தம் செய்ய சிறிலங்கா அரசு வலியுறுத்தும்? </b>
சுவிஸ் ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையேயான பேச்சுக்களின் போது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் திருத்தங்களைச் செய்ய சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தக் கூடும் என்று இந்திய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சீ நியூஸ் (Zee News) தொலைக்காட்சி, சிறிலங்கா அரச அதிகாரிகளை மேற்கோள்காட்டி இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
அச்செய்தி விவரம்:
விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களின் போது தனது தேர்தல் அறிக்கையான மகிந்த சிந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் பேச்சுக்களை நடத்துமாறு தனது குழுவினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிகிறது.
மகிந்த சிந்தனையின் அடிப்படையிலேயே ஒவ்வொரு நகர்வுகளும் இருக்கும் என்று அரசாங்கப் பேச்சுக்குழுவினருக்கான பயிலரங்கில் மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாக சிறிலங்கா அரச தொலைக்காட்சி கூறியது.
அதேபோல் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கக் குழு வலியுறுத்தும் என்று அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்த ஒரு அரசியல் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில், வன்முறைகளைத் தடுக்க யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்த வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச விரும்புவதாகக் கூறினார்.
சிறிலங்கா அரச தலைவராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற போது அமைதி முயற்சிகளில் புதிய அணுகுமுறையைக் கையாளப் போவதாகத் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களை ஜெனீவாவில் எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் நாட்களில் நடத்த ஒப்புக்கொண்டனர்.
ஆனால் விடுதலைப் புலிகளின் தரப்பில் ஜெனீவாப் பேச்சுக்களில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துகளைச் செயற்படுத்துவதல் தொடர்பாகவே பேச்சுக்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ ஏடான விடுதலைப் புலிகள் சஞ்சிகையில் வெளியாகி இருந்த ஆசிரியர் தலையங்கத்தை புதினம் இணையத் தளம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசுரித்தது.
அந்த ஆசிரியர் தலையங்கத்தை இந்தியாவின் ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளேடுகள் பெரும்பாலானவை வெளியிட்டிருந்தன. இதனடிப்படையில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை சீ நியூஸ் (Zee News) தொலைக்காட்சியும் பதிவு செய்திருக்கிறது குறிப்பிடத்தக்கது
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
சுவிஸ் ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையேயான பேச்சுக்களின் போது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் திருத்தங்களைச் செய்ய சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தக் கூடும் என்று இந்திய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சீ நியூஸ் (Zee News) தொலைக்காட்சி, சிறிலங்கா அரச அதிகாரிகளை மேற்கோள்காட்டி இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
அச்செய்தி விவரம்:
விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களின் போது தனது தேர்தல் அறிக்கையான மகிந்த சிந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் பேச்சுக்களை நடத்துமாறு தனது குழுவினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிகிறது.
மகிந்த சிந்தனையின் அடிப்படையிலேயே ஒவ்வொரு நகர்வுகளும் இருக்கும் என்று அரசாங்கப் பேச்சுக்குழுவினருக்கான பயிலரங்கில் மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாக சிறிலங்கா அரச தொலைக்காட்சி கூறியது.
அதேபோல் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கக் குழு வலியுறுத்தும் என்று அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்த ஒரு அரசியல் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில், வன்முறைகளைத் தடுக்க யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்த வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச விரும்புவதாகக் கூறினார்.
சிறிலங்கா அரச தலைவராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற போது அமைதி முயற்சிகளில் புதிய அணுகுமுறையைக் கையாளப் போவதாகத் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களை ஜெனீவாவில் எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் நாட்களில் நடத்த ஒப்புக்கொண்டனர்.
ஆனால் விடுதலைப் புலிகளின் தரப்பில் ஜெனீவாப் பேச்சுக்களில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துகளைச் செயற்படுத்துவதல் தொடர்பாகவே பேச்சுக்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ ஏடான விடுதலைப் புலிகள் சஞ்சிகையில் வெளியாகி இருந்த ஆசிரியர் தலையங்கத்தை புதினம் இணையத் தளம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசுரித்தது.
அந்த ஆசிரியர் தலையங்கத்தை இந்தியாவின் ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளேடுகள் பெரும்பாலானவை வெளியிட்டிருந்தன. இதனடிப்படையில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை சீ நியூஸ் (Zee News) தொலைக்காட்சியும் பதிவு செய்திருக்கிறது குறிப்பிடத்தக்கது
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
"

