Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் அமைதிப் பேச்சுக்கள்
#50
[size=18]<b>தாய்லாந்தில் சட்டகிப் பேச்சும்
சுவிஸில் ஜெனிவாப் பேச்சும்</b>

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஜெனிவாப் பேச்சுகளுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கின்றன.
2002 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரணிலின் அரசோடு விடுதலைப் புலிகள் நடத்திய பேச்சுக்கும் இப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசோடு நடத்தவிருக்கும் பேச்சுக்குமான களச்சூழலை ஒப்பிட்டு - ஆராய்வது - நோக்குவது இந்தக் காலகட்டத்தில் மிகப் பொருத்தமானதாக இருக்கும்.

ரணிலின் அரசோடு 2002 செப்டம்பர் 16 - 18ஆம் திகதிகளில் தாய்லாந்தின் சட்டகிப் கடற்படைத் தளத்தில் நடைபெற்ற முதல் சுற்றுப் பேச்சும் ஜெனிவாவில் இப்போது 2006 பெப்ரவரி 22 - 23 இல் நடைபெறும் முதல் சுற்றுப் பேச்சும் களநிலவரங்களைப் பொறுத்தவரை பல விடயங்களில் ஒத்திருக்கினறன.
பிரதமர் ரணிலின் அரசுக்கும், புலிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2002 பெப்ரவரி 22ஆம் திகதி கைச்சாத்தானது. ஆனாலும், அதன் பின் ஏழு மாதங்கள் கழித்தே விடுதலைப் புலிகளை பேச்சு மேசைக்கு ரணிலின் அரசினால் கூட்டி வர முடிந்தது.
எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரை அவர் 2005 நவம்பர் 17ஆம் திகதிய தேர்தலில் வென்று, மூன்று நாள்களில் பதவியேற்று, மூன்று மாதங்களுக்குள் விடுதலைப் புலிகளை பேச்சு மேசைக்கு இழுத்து வருகின்றார்.
ஆனாலும், இரண்டு சந்தர்ப்பங்களிலும் முதல் சுற்றுப் பேச்சுகளின் போது பேச்சு மேசையில் ஆராயப்பட்ட - அல்லது ஆராயப்படப் போகின்ற - விடயம் ஒன்றுதான்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இணக்கம் காணப்பட்ட யுத்த நிறுத்த ஏற்பாடுகளை இலங்கை அரசுத் தரப்பு சரிவர நடைமுறைப்படுத்தவில்லை என்ற புலிகளின் கடும் குற்றச் சாட்டுக்கு மத்தியிலேயே அது குறித்துப் பேசவே முதல் சுற்றுப் பேச்சுக்கு அப்போதும் சரி. இப்போதும் சரி புலிகள் இணங்கினர்.
போர் நெருக்கடியைத் தணித்து, இயல்பு நிலையைத் தோற்றுவிப்பதற்கு முப்படைகளினது கடுமையான போக்கும், ஒளிவு மறைவாக முன்னெடுக்கப்படும் சதித் திட்ட நடவடிக்கையும் காரணம் என்ற புலிகளின் சீற்றத்துக்கு மத்தியிலேயே இரண்டு சந்தர்ப்பங்களிலும் முதல் சுற்றுப் பேச்சுகள் ஆரம்பமாகின்றன.
ஆனால், அப்போதைக்கும், இப்போதைக்கும் ஒரு வித்தியாசம் இருப்பதை மஹிந்த அரசும் அவரது பேச்சுக் குழுவினரும் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு, தாய்லாந்து சட்டகிப்பில் நடைபெற்ற அப்போதைய பேச்சுக்கான ஏற்பாடு குறித்து புலிகளின் மதியுரைஞர் பாலசிங்கம் தமது நூல் ஒன்றில் தெரிவிக்கும் தலைப்பை நோக்குவது பொருத்தமானது. போர் நிறுத்த ஒப்பந்தக் கடப்பாடுகளைக் கடைப்பிடிக்காது சிங்கள ஆயுதப் படைகள் காட்டும் கடும் போக்குக் குறித்த இவ்வாறு அச்சமயத்தில் அவர் குறிப்பிடுகின்றார்:
""ஆயுதப் படைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் ரணில் அரசிடம் இருக்கவில்லை என்பதை அவருக்கு (பிரபாகரனுக்கு) விளக்கினேன். அரசியல் தெளிவுடைய யதார்த்தவாதி என்பதால், ரணிலுக்கும், சந்திரிகாவுக்கும் மத்தியிலான அதிகாரப் போட்டியும் பிணக்குப் பற்றியும் பிரபாகரனால் புரிந்து கொள்ளமுடிந்தது. போர் நிறுத்த உடன்பாட்டு விதிகள் சீரிய முறையில் நடைமுறையாக வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க விரும்பிய போதும் அதற்கான அதிகாரம் அவரிடம் இருக்கவில்லை. சந்திரிகாவுடனான பகையுணர்வு கூர்மையடைந்து இருந்ததால் இராணுவ விவகாரத்தில் ஜனாதிபதியின் ஒத்துழைப்பையும் அவரால்பெறமுடியவில்லை. இந்தச் சிக்கலையும் ரணிலின் இயலாத்தன்மையையும் பிரபாகரன் நன்கு அறிவார்......
""தாய்லாந்தில் சாமாதானப் பேச்சுகளை நடத்துவதற்கு இணக்கம் தெவித்த பிரபாகரன், போர் நிறுத்த உடன்பாட்டின் நடைமுறைப் பிரச்சினைகள் குறித்துப் பேச்சுவார்த்தை மேசையில் பேசலாம் எனவும் தெரிவித்தார்.''
இப்படி கூறுகிறார் மதியுரைஞர் பாலா.
ஆக, அப்போதும், இப்போதும் - இரண்டு சந்தர்ப்பங்களிலும் - போர் நிறுத்த உடன்பாட்டின் அமுலாக்கம் பற்றிய சிக்கல்தான் முதற்சுற்றுப் பேச்சுக்கான தொனிப் பொருளாக அமைகிறது. ஆனாலும், முக்கிய வித்தியாசம் ஒன்று இருக்கிறது.
அப்போது, நிறைவேற்று அதிகாரத்தையும் படைகளைக் கட்டுப்படுத்தும் பதவி நிலையையும் வைத்திருந்த ஜனாதிபதி சந்திரிகாவுடன் முரண்பட்டுக் கொண்டு, அதிகாரமற்ற வெறும் பிரதமர் பதவியிலிருந்து ரணிலோடு பேசுகிறோம் என்ற பிரக்ஞையுடன்தான் புலிகள் அந்தப் பேச்சுகளில் பங்குபற்றினர். போர்நிறுத்த கடப்பாடுகளை அமுலாக்கும் விடயத்தில் ரணிலின் அரசின் இயலாத்தன்மையையும், கையாலாகாத்தனத்தையும் அவர்கள் புரிந்து கொண்டிருந்ததால் அதிகளவு விட்டுக் கொடுப்புக்கு வாய்ப்பிருந்தது. அதனால், அப்போது பேச்சுகள் ஆறாவது சுற்றுவரை நகர்ந்தன.
ஆனால், இப்போது நிலைமை வேறு. அரசும், நிறைவேற்று அதிகாரமும், படைத்தலைமையும் அனைத்துமே ஒருவரிடம் - ஜனாதிபதி மஹிந்தவிடமே - குவிந்து கிடக்கின்றன. போதாக்குறைக்கு "வெற்றுக் காசோலையில் கையெழுத்திட்டுக் கொடுத்தமை போல' அரசின் சமாதான முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்புத் தரத் தயார் என்ற அறிவிப்போடு பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சி காத்திருக்கின்றது.
ஆகவே, முன்னைய ரணிலின் அரசு போல சாக்குப் போக்குச் சொல்லாமல் யுத்த நிறுத்தம் தொடர்பான தனது கடப்பாட்டை முழுமையாக நிறைவு செய்வதற்கு இணங்கும் தயார் நிலையில் பேச்சுக்கு அரசுத் தரப்பு வருவதோடு, அதைச் செயலிலும் காட்ட வேண்டும். தவறுமானால் அடுத்த சுற்றுப் பேச்சு சாத்தியமற்றதாகி விடலாம்; நடைபெறாமலேயே போய்விடலாம்

<i><b>ஆசிரியர் தலையங்கம்-உதயன் (09/02/06)</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 02:40 AM
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 02:57 AM
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 08:22 PM
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 08:23 PM
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 08:27 PM
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 08:28 PM
[No subject] - by Mathuran - 01-26-2006, 09:09 PM
[No subject] - by DV THAMILAN - 01-26-2006, 09:39 PM
[No subject] - by DV THAMILAN - 01-26-2006, 09:42 PM
[No subject] - by மேகநாதன் - 01-27-2006, 07:40 AM
[No subject] - by மேகநாதன் - 01-27-2006, 07:42 AM
[No subject] - by மேகநாதன் - 01-27-2006, 08:03 AM
[No subject] - by மேகநாதன் - 01-28-2006, 04:53 AM
[No subject] - by மேகநாதன் - 01-28-2006, 04:55 AM
[No subject] - by மேகநாதன் - 01-28-2006, 05:19 AM
[No subject] - by மேகநாதன் - 01-28-2006, 05:21 AM
[No subject] - by மேகநாதன் - 01-28-2006, 06:07 AM
[No subject] - by மேகநாதன் - 01-28-2006, 06:13 AM
[No subject] - by மேகநாதன் - 01-29-2006, 01:29 AM
[No subject] - by மேகநாதன் - 01-29-2006, 08:49 AM
[No subject] - by மேகநாதன் - 01-29-2006, 08:50 AM
[No subject] - by MUGATHTHAR - 01-29-2006, 10:54 AM
[No subject] - by மேகநாதன் - 01-30-2006, 07:23 AM
[No subject] - by MUGATHTHAR - 01-30-2006, 07:31 AM
[No subject] - by மேகநாதன் - 01-30-2006, 08:46 AM
[No subject] - by மேகநாதன் - 01-30-2006, 08:52 AM
[No subject] - by மேகநாதன் - 01-31-2006, 08:02 AM
[No subject] - by மேகநாதன் - 02-01-2006, 08:05 AM
[No subject] - by மேகநாதன் - 02-02-2006, 02:26 AM
[No subject] - by மேகநாதன் - 02-02-2006, 11:50 PM
[No subject] - by மேகநாதன் - 02-03-2006, 07:45 AM
[No subject] - by மேகநாதன் - 02-04-2006, 01:36 PM
[No subject] - by MUGATHTHAR - 02-05-2006, 10:43 AM
[No subject] - by மேகநாதன் - 02-06-2006, 08:18 AM
[No subject] - by மேகநாதன் - 02-06-2006, 09:41 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 04:07 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 04:18 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 09:25 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 09:33 AM
[No subject] - by Shankarlaal - 02-07-2006, 09:33 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 09:44 AM
[No subject] - by மேகநாதன் - 02-08-2006, 03:31 AM
[No subject] - by மேகநாதன் - 02-08-2006, 03:33 AM
[No subject] - by மேகநாதன் - 02-08-2006, 03:35 AM
[No subject] - by மேகநாதன் - 02-08-2006, 03:38 AM
[No subject] - by மேகநாதன் - 02-08-2006, 03:40 AM
[No subject] - by மேகநாதன் - 02-08-2006, 08:23 AM
[No subject] - by மேகநாதன் - 02-09-2006, 05:46 AM
[No subject] - by மேகநாதன் - 02-09-2006, 05:58 AM
[No subject] - by மேகநாதன் - 02-09-2006, 08:37 AM
[No subject] - by மேகநாதன் - 02-09-2006, 08:39 AM
[No subject] - by மேகநாதன் - 02-10-2006, 04:49 AM
[No subject] - by மேகநாதன் - 02-10-2006, 04:55 AM
[No subject] - by மேகநாதன் - 02-10-2006, 04:59 AM
[No subject] - by மேகநாதன் - 02-10-2006, 05:30 AM
[No subject] - by malu - 02-10-2006, 06:14 AM
[No subject] - by மேகநாதன் - 02-12-2006, 06:07 AM
[No subject] - by மேகநாதன் - 02-12-2006, 06:10 AM
[No subject] - by MUGATHTHAR - 02-12-2006, 11:50 AM
[No subject] - by Niththila - 02-12-2006, 12:03 PM
[No subject] - by I.V.Sasi - 02-12-2006, 01:21 PM
[No subject] - by MUGATHTHAR - 02-14-2006, 10:43 AM
[No subject] - by sinnakuddy - 02-15-2006, 12:50 PM
[No subject] - by paandiyan - 02-16-2006, 03:46 AM
[No subject] - by I.V.Sasi - 02-17-2006, 12:50 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)