02-09-2006, 05:46 AM
<b>பயிற்சி பெறும் அரச குழுவினர் </b>
ஜெனீவாவில் பேச்சுவார்த்தைக்கு செல்கின்ற அரச குழுவினருக்கு இப்போது சிறிலங்காவின் ஜனாதிபதி அவர்கள் பயிற்சி அளிப்பதற்கான தடல்புடல் ஏற்பாடுகளை ஆரம்பித்திருக்கின்றார்.
முழுக்க முழுக்க பேரினவாத சிந்தனையில் மூழ்கி ஒற்றையாட்சி என்ற குறுகிய அரசியல் சித்தாந்தத்துக்குள் மூழ்கியிருக்கும் சிங்கள் தேசம் சர்வதேச அரங்கில் நடைபெறப் போகும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினருடன் பேசுவதற்கான தகுதியற்ற நிலையில் உள்ளதையே இந்த பயிற்சிகள் வெளிப்படுத்துகின்றது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹவார்ட் பேச்சுவார்த்தை திட்டத்தைசேர்ந்த சிறப்பு வல்லுனர்களால் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளும் குழுவினருக்கும், அவர்களது உப குழுவினர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகின்றது. சமஸ்டி, ஐக்கியம், ஒற்றுமை ஒருவரைச் சார்ந்திருத்தல் போன்ற அடிப்படைகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்படவிருக்கின்றன. இதேவேளை சிறிலங்காவின் பேச்சுவார்த்தைக் குழுவினருக்கு ஆலோசனை வழங்குவதற்கு இரு குழுக்கள் மகிந்தரால் நியமிக்கப்பட்டுள்ளது. முக்கிய அமைச்சர்களைக் கொண்ட இக்குழுவில் மகிந்தரின் சகோதரரும் படைத்துறை அமைச்சின் ஆலோசகருமான கோத்தபாய ராஜபக்ச அவர்கள் இடம்பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை போர் நிறுத்த உடன்படிக்கையை மீளாய்வு அல்லது, திருத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கு சட்டத்தரணிகளைக் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் மகிந்தரின் சட்டத்தரணிகளும் அடங்குகின்றனர்.
போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு நான்காண்டுகள் நிறைவடையும் இந்த தருணத்தில் இந்தப் பேச்சுக்கான சந்திப்பு ஜெனீவாவில் நடைபெறப் போகின்றன.
எங்கே பேசுவது எப்போது பேசுவது? என்பதற்குத் தீர்வு காணப்பட்டு விட்டது. அடுத்த கட்டமாக எதனைப் பேசுவது என்பதுதான் முக்கிய விடயம். போர் நிறுத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். அதுதான் இப்போது தமிழர் தரப்பால் எதிர்பார்க்கப்படுகின்ற பிரச்சினை.
போர் நிறுத்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் முழுமையாக அரசு அமுல்படுத்துமிடத்து பேச்சுக்கான சூழலில் நம்பிக்கை ஏற்படுவதுடன் போர் சிறிது காலத்துக்கு தள்ளிப் போடப்படலாம். இப்போதைக்கு போர் மூளல் அபாயமில்லை என்றதொரு சூழலை உருவாக்க முடியும். மாறாக ஜெனீவாப் பேச்சுக்களில் நம்பிக்கையீனம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்படுமிடத்து மீண்டும் மீண்டும் பேசுவதால் பயன் ஏற்படமாட்டாது.
முதலாவதாக போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முரணாகவும், போர் இந்தளவு ஆபத்தான கட்டத்திற்கு தள்ளிவிட்டுள்ள நிழல் யுத்தத்திற்கு மூல காரண கர்த்தாக்களாக இருக்கின்ற ஒட்டுப்படை விவகாரத்துக்கு தீர்வு காணும் விடயத்தில் சிறிலங்கா அரசு புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு அவர்கள் நிராயுதபாணிகளாக்கப்பட வேண்டும். அத்துடன் அவர்கள் வடக்குக் கிழக்கிற்கு வெளியே அகற்றப்பட வேண்டும். இந்த விடயத்தில் அரசு பாராமுகமாக இருக்குமாயின் ஜெனீவாப் பேச்சுக்கள் என்பது தொடர்ந்து முன்கொண்டு செல்வது சாத்தியமில்லை.
எனவே போர் நிறுத்த உடன்படிக்கையின் அடிப்படை விடயங்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் இதற்கு அமெரிக்காப் பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற வேண்டிய அவசியம் இருக்காது என்பது பொதுவான கருத்து.
இவை ஒரு புறமிருக்க தென்னிலங்கை இனவாத சக்திகள் இன்னும் சமாதான வழிமுறை தொடர்பாக எவ்வித அடிப்படை விட்டுக் கொடுப்புக்களையும் கொண்டிருக்கவில்லை.
ஹெல உறுமய ஜே.வி.பி போன்ற கட்சிகள் தெரிவித்திருக்கும் கருத்து சிந்திக்க வேண்டியது. ஜெனீவாவில் பேச்சுவார்த்தைக்கு செல்வோர் எதுவித தீர்மானத்தையும் எடுக்கக் கூடாது என இவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனவே இந்த நிலையில் அவதானிக்குமிடத்து ஜெனீவாவாப் பேச்சுக்கான அரச தரப்பு குழுவினர் தீர்மானங்களை அல்லது முடிவுகளை எடுக்கக் கூடியதாக அமையுமா என்பது கேள்விக்குறி.
எனவே பேச்சு வார்த்தை, போர் நிறுத்த உடன்படிக்கையை முழு அளவில் அமுல்படுத்து வதன் மூலமே முன்கொண்டு செல்லலாம் அதற்கான ஒரு சூழல் ஏற்பட வேண்டியது அவசியம் என்பதே இன்றைய எதிர்பார்ப்பாகவுள்ளது.
<i><b>நன்றி- ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு- </b></i>
<b>ஆசிரியர் தலையங்கம்(09/02/06)</b>
ஜெனீவாவில் பேச்சுவார்த்தைக்கு செல்கின்ற அரச குழுவினருக்கு இப்போது சிறிலங்காவின் ஜனாதிபதி அவர்கள் பயிற்சி அளிப்பதற்கான தடல்புடல் ஏற்பாடுகளை ஆரம்பித்திருக்கின்றார்.
முழுக்க முழுக்க பேரினவாத சிந்தனையில் மூழ்கி ஒற்றையாட்சி என்ற குறுகிய அரசியல் சித்தாந்தத்துக்குள் மூழ்கியிருக்கும் சிங்கள் தேசம் சர்வதேச அரங்கில் நடைபெறப் போகும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினருடன் பேசுவதற்கான தகுதியற்ற நிலையில் உள்ளதையே இந்த பயிற்சிகள் வெளிப்படுத்துகின்றது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹவார்ட் பேச்சுவார்த்தை திட்டத்தைசேர்ந்த சிறப்பு வல்லுனர்களால் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளும் குழுவினருக்கும், அவர்களது உப குழுவினர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகின்றது. சமஸ்டி, ஐக்கியம், ஒற்றுமை ஒருவரைச் சார்ந்திருத்தல் போன்ற அடிப்படைகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்படவிருக்கின்றன. இதேவேளை சிறிலங்காவின் பேச்சுவார்த்தைக் குழுவினருக்கு ஆலோசனை வழங்குவதற்கு இரு குழுக்கள் மகிந்தரால் நியமிக்கப்பட்டுள்ளது. முக்கிய அமைச்சர்களைக் கொண்ட இக்குழுவில் மகிந்தரின் சகோதரரும் படைத்துறை அமைச்சின் ஆலோசகருமான கோத்தபாய ராஜபக்ச அவர்கள் இடம்பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை போர் நிறுத்த உடன்படிக்கையை மீளாய்வு அல்லது, திருத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கு சட்டத்தரணிகளைக் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் மகிந்தரின் சட்டத்தரணிகளும் அடங்குகின்றனர்.
போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு நான்காண்டுகள் நிறைவடையும் இந்த தருணத்தில் இந்தப் பேச்சுக்கான சந்திப்பு ஜெனீவாவில் நடைபெறப் போகின்றன.
எங்கே பேசுவது எப்போது பேசுவது? என்பதற்குத் தீர்வு காணப்பட்டு விட்டது. அடுத்த கட்டமாக எதனைப் பேசுவது என்பதுதான் முக்கிய விடயம். போர் நிறுத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். அதுதான் இப்போது தமிழர் தரப்பால் எதிர்பார்க்கப்படுகின்ற பிரச்சினை.
போர் நிறுத்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் முழுமையாக அரசு அமுல்படுத்துமிடத்து பேச்சுக்கான சூழலில் நம்பிக்கை ஏற்படுவதுடன் போர் சிறிது காலத்துக்கு தள்ளிப் போடப்படலாம். இப்போதைக்கு போர் மூளல் அபாயமில்லை என்றதொரு சூழலை உருவாக்க முடியும். மாறாக ஜெனீவாப் பேச்சுக்களில் நம்பிக்கையீனம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்படுமிடத்து மீண்டும் மீண்டும் பேசுவதால் பயன் ஏற்படமாட்டாது.
முதலாவதாக போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முரணாகவும், போர் இந்தளவு ஆபத்தான கட்டத்திற்கு தள்ளிவிட்டுள்ள நிழல் யுத்தத்திற்கு மூல காரண கர்த்தாக்களாக இருக்கின்ற ஒட்டுப்படை விவகாரத்துக்கு தீர்வு காணும் விடயத்தில் சிறிலங்கா அரசு புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு அவர்கள் நிராயுதபாணிகளாக்கப்பட வேண்டும். அத்துடன் அவர்கள் வடக்குக் கிழக்கிற்கு வெளியே அகற்றப்பட வேண்டும். இந்த விடயத்தில் அரசு பாராமுகமாக இருக்குமாயின் ஜெனீவாப் பேச்சுக்கள் என்பது தொடர்ந்து முன்கொண்டு செல்வது சாத்தியமில்லை.
எனவே போர் நிறுத்த உடன்படிக்கையின் அடிப்படை விடயங்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் இதற்கு அமெரிக்காப் பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற வேண்டிய அவசியம் இருக்காது என்பது பொதுவான கருத்து.
இவை ஒரு புறமிருக்க தென்னிலங்கை இனவாத சக்திகள் இன்னும் சமாதான வழிமுறை தொடர்பாக எவ்வித அடிப்படை விட்டுக் கொடுப்புக்களையும் கொண்டிருக்கவில்லை.
ஹெல உறுமய ஜே.வி.பி போன்ற கட்சிகள் தெரிவித்திருக்கும் கருத்து சிந்திக்க வேண்டியது. ஜெனீவாவில் பேச்சுவார்த்தைக்கு செல்வோர் எதுவித தீர்மானத்தையும் எடுக்கக் கூடாது என இவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனவே இந்த நிலையில் அவதானிக்குமிடத்து ஜெனீவாவாப் பேச்சுக்கான அரச தரப்பு குழுவினர் தீர்மானங்களை அல்லது முடிவுகளை எடுக்கக் கூடியதாக அமையுமா என்பது கேள்விக்குறி.
எனவே பேச்சு வார்த்தை, போர் நிறுத்த உடன்படிக்கையை முழு அளவில் அமுல்படுத்து வதன் மூலமே முன்கொண்டு செல்லலாம் அதற்கான ஒரு சூழல் ஏற்பட வேண்டியது அவசியம் என்பதே இன்றைய எதிர்பார்ப்பாகவுள்ளது.
<i><b>நன்றி- ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு- </b></i>
<b>ஆசிரியர் தலையங்கம்(09/02/06)</b>
"
"
"

