02-09-2006, 12:04 AM
து}யவனின் வாதங்களைப் படித்துமுடித்தபோது இடியோடு கூடிய மழை பெய்து ஓய்ந்ததுபோல் இருந்தது ஆனால் இரசிகையின் வாதங்களைப் படித்து முடித்தபோது இடியோடு கூடிய மழையுடன் புயலும் வீசி ஓய்ந்தது போலிருக்கின்றது. ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் அல்ல. வாதத்திறமை அப்படியிருந்தது. து}யவன், தல இருவரின் தலைகளிலும் இடி விழப்போகின்றதோ என்றும் எண்ணத்தோன்றியது.
உலகத்திலுள்ள அனைத்து ஊடகங்களுமே ஒன்றாக உங்கள் கண்முன் திரையில் விரிவது நன்மையில்லையா? பொன்னான நேரமும், பெருந்தொகையான பணமும் இதனால் மிச்சமாகின்றதே. ஒருவரின் சொந்த செயற்பாடுதான் அவரின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணம் இதனை விடுத்து இணையத்தின்மீது பாவங்களைச் சுமத்துவது எந்தவிதத்திலும் நியாமில்லை என்று அவரது அணியினர் முன்னர் எடுத்து முன்வைத்த கருத்தை இன்னும் ஆணித்தரமாக வைத்தார்.
மற்றைய ஊடகங்களைப்போல் இணையமும் கட்டுப்படுத்தப்படுகின்றது என்றும், இணையத்தின் கட்டுப்பாடுகளை மீறி சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவார்கள் என்று அதற்கு உதாரணங்களையும் தந்தார்.
எம்.எஸ்.என் பகிரங்க அரட்டை அறை வேறு, எம்.எஸ்.என் மெஸெஞ்சர் வேறு என்று து}யவன் எழுதிய கருத்திற்கு விளக்கம் கூறினார். முன்னர் இணையம் இல்லாமல் தேசியம் வளர்ந்தாலும் இணையம் இப்போது தேசிய வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கின்றது என்றார். இப்போது இணையத்தை வீடுகளில் தடைசெய்திருக்கும் விடுதலைப்புலிகள் எதிர்காலத்தில் தடைசெய்யமாட்டார்கள் என்றார்.
யாழ்ப்பாண வீதியில் காலில் தட்டிய கல்லிற்கும் நல்ல விளக்கம் கொடுத்தார். தாம் முன்னேறவேண்டும் என்று தமது அறிவுப்பசிக்குத் தீனியைத்தேடும் இளையோர் இணையத்தினால் பயனடைகிறார்கள், தமது எதிர்காலத்தை எள்ளளவும் எண்ணாது சீரழிக்கும் என்று தெரிந்தும் தாமாகவே இணையத்தில் அப்படியான தளங்களுக்குச் செல்வோர் சீரழிகிறார்கள் என்று உறுதியாகக் கூறுகிறார்.
புலத்தில் வாழும் சில பெற்றோர்கள் கணனி அறிவு இல்லாமல் இருக்கலாம் ஆனால் அதிகமானோர் அதன் நன்மை தீமைகளை அறிந்தவர்களாக இருக்கின்றார்கள் என்றார். மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கவில்லையே தவிர தன்னம்பிக்கையை இல்லாமல் செய்கிறது என்று எதிரணியினர் கூறாத வகையில் அவர்கள் சீரழியவில்லை என்பது தெரிகிறது என்றார். வேகமாகத் தகவல்களைப் பெற்று தமது வேலைகளைச் செய்யும் மாணவர்கள் மிகுதி நேரத்தை வீணாக்குவது அவர்களின் இயல்பான குணமேயன்றி வேறொன்றுமில்லை என்கிறார்.
மதகுகளில், தோழியர் வீடுகளில் பெற்ற பயன்களை இணையம் தருவதில்லை, அவனைக் கண்ணியமானவனாக இருக்கவும் அது விடுவதில்லை என்ற எதிரணியினரை நோக்கி மீண்டும் அவையெல்லாம் உங்கள் மனங்களைப் பொறுத்தது என்றும், உலெகெங்கும் சிதறி வாழும் எம் உறவுகளுடன் புரிந்துணர்வுகளை வளர்த்துக்கொள்ளவும், கல்வி வளர்ச்சிக்கும், தொழில் விருத்திக்கும், பொழுபோக்குகள் போன்றவற்றிற்குமே இணையத்தைப் பயன்படுத்துகிறார்களேயன்றி அவர்கள் அங்கே குடும்பம் நடத்தவில்லை என்று ஒரு குத்தல் போடுகிறார்.
எதற்கும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். எனவே இணையப் பாவனைக்கும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து நன்மையடையுங்கள் என்று அனைவருக்கும் மிகவும் அழுத்தமாகக் கூறி தனது வாதத்தை நிறைவுசெய்தார்.
இரசிகை எதிரணியினரை சித்தர் என்றும், சமூக சிந்தனையாளர் என்றும், கண்ணியமானவரே என்றும் அவ்வப்போது அழைத்து இறுதியில் (வெறும்) தல அவர்களே! என்று விளிக்கிறார், தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்கின்றார். இத்தனைபேரையும் அழைத்து ஓர் அறையுள் வைத்து ஒரு பட்டிமன்றம் நடத்தினால் எப்படி இருக்கும் என்று நானும் சில வேளைகளில் எண்ணியதுண்டு. அதே கருத்தை இரசிகையும் குறிப்பிட்டிருந்தார். ஆட்களை நேரில் கண்டவுடன் பட்டிமன்றம் வேண்டாம் ஒரு "பார்ட்டி" (Party) வைப்போம் என்றுதான் இளையோர் கேட்பார்கள் என்று நான் எண்ணினேன். ஆனால் இரசிகையோ கத்தியின்றி, இரத்தமின்றி அது நடந்திருக்காது என்றும், அதனைத் தடுத்தது இதனை நடாத்த துணைபோனதும் இந்த இணையமே என்று இணையத்தின் மேலுள்ள தனது காதலை வெளிப்படுத்துகின்றார்.
பட்டிமன்ற வாதம் உச்சக்கட்டத்திற்கு வந்துவிட்டதுபோல ஓர் உணர்வு என்னுள் எழுகின்றது. கத்தி, கோடரி இன்றி சொல்லம்புகளை மட்டும் வைத்துக்கொண்டு செய்யும் யுத்தம்தானே இது.
"தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு"
என்ற குறளும் நினைவிற்கு வருகின்றது. அப்படியொன்றும் யாரும் மனதில் வைத்திருக்கமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். இவையெல்லாம் ஆரோக்கியமான போட்டிகள்தானே. நல்லதொரு இளம் சந்ததியினரை உருவாக்கவேண்டும் என்கின்ற ஆசையினால் நாம் செய்கின்ற அன்புச் சண்டைகள்தானே. இல்லையா?
சரி, எதிரணியிலிருந்து யார் வரப்போகிறார்? ஓ! புூனைக்குட்டியா? வாங்க. வந்து உங்கள் வாதத்தை முன் வையுங்கள்.
நன்றி.
உலகத்திலுள்ள அனைத்து ஊடகங்களுமே ஒன்றாக உங்கள் கண்முன் திரையில் விரிவது நன்மையில்லையா? பொன்னான நேரமும், பெருந்தொகையான பணமும் இதனால் மிச்சமாகின்றதே. ஒருவரின் சொந்த செயற்பாடுதான் அவரின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணம் இதனை விடுத்து இணையத்தின்மீது பாவங்களைச் சுமத்துவது எந்தவிதத்திலும் நியாமில்லை என்று அவரது அணியினர் முன்னர் எடுத்து முன்வைத்த கருத்தை இன்னும் ஆணித்தரமாக வைத்தார்.
மற்றைய ஊடகங்களைப்போல் இணையமும் கட்டுப்படுத்தப்படுகின்றது என்றும், இணையத்தின் கட்டுப்பாடுகளை மீறி சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவார்கள் என்று அதற்கு உதாரணங்களையும் தந்தார்.
எம்.எஸ்.என் பகிரங்க அரட்டை அறை வேறு, எம்.எஸ்.என் மெஸெஞ்சர் வேறு என்று து}யவன் எழுதிய கருத்திற்கு விளக்கம் கூறினார். முன்னர் இணையம் இல்லாமல் தேசியம் வளர்ந்தாலும் இணையம் இப்போது தேசிய வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கின்றது என்றார். இப்போது இணையத்தை வீடுகளில் தடைசெய்திருக்கும் விடுதலைப்புலிகள் எதிர்காலத்தில் தடைசெய்யமாட்டார்கள் என்றார்.
யாழ்ப்பாண வீதியில் காலில் தட்டிய கல்லிற்கும் நல்ல விளக்கம் கொடுத்தார். தாம் முன்னேறவேண்டும் என்று தமது அறிவுப்பசிக்குத் தீனியைத்தேடும் இளையோர் இணையத்தினால் பயனடைகிறார்கள், தமது எதிர்காலத்தை எள்ளளவும் எண்ணாது சீரழிக்கும் என்று தெரிந்தும் தாமாகவே இணையத்தில் அப்படியான தளங்களுக்குச் செல்வோர் சீரழிகிறார்கள் என்று உறுதியாகக் கூறுகிறார்.
புலத்தில் வாழும் சில பெற்றோர்கள் கணனி அறிவு இல்லாமல் இருக்கலாம் ஆனால் அதிகமானோர் அதன் நன்மை தீமைகளை அறிந்தவர்களாக இருக்கின்றார்கள் என்றார். மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கவில்லையே தவிர தன்னம்பிக்கையை இல்லாமல் செய்கிறது என்று எதிரணியினர் கூறாத வகையில் அவர்கள் சீரழியவில்லை என்பது தெரிகிறது என்றார். வேகமாகத் தகவல்களைப் பெற்று தமது வேலைகளைச் செய்யும் மாணவர்கள் மிகுதி நேரத்தை வீணாக்குவது அவர்களின் இயல்பான குணமேயன்றி வேறொன்றுமில்லை என்கிறார்.
மதகுகளில், தோழியர் வீடுகளில் பெற்ற பயன்களை இணையம் தருவதில்லை, அவனைக் கண்ணியமானவனாக இருக்கவும் அது விடுவதில்லை என்ற எதிரணியினரை நோக்கி மீண்டும் அவையெல்லாம் உங்கள் மனங்களைப் பொறுத்தது என்றும், உலெகெங்கும் சிதறி வாழும் எம் உறவுகளுடன் புரிந்துணர்வுகளை வளர்த்துக்கொள்ளவும், கல்வி வளர்ச்சிக்கும், தொழில் விருத்திக்கும், பொழுபோக்குகள் போன்றவற்றிற்குமே இணையத்தைப் பயன்படுத்துகிறார்களேயன்றி அவர்கள் அங்கே குடும்பம் நடத்தவில்லை என்று ஒரு குத்தல் போடுகிறார்.
எதற்கும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். எனவே இணையப் பாவனைக்கும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து நன்மையடையுங்கள் என்று அனைவருக்கும் மிகவும் அழுத்தமாகக் கூறி தனது வாதத்தை நிறைவுசெய்தார்.
இரசிகை எதிரணியினரை சித்தர் என்றும், சமூக சிந்தனையாளர் என்றும், கண்ணியமானவரே என்றும் அவ்வப்போது அழைத்து இறுதியில் (வெறும்) தல அவர்களே! என்று விளிக்கிறார், தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்கின்றார். இத்தனைபேரையும் அழைத்து ஓர் அறையுள் வைத்து ஒரு பட்டிமன்றம் நடத்தினால் எப்படி இருக்கும் என்று நானும் சில வேளைகளில் எண்ணியதுண்டு. அதே கருத்தை இரசிகையும் குறிப்பிட்டிருந்தார். ஆட்களை நேரில் கண்டவுடன் பட்டிமன்றம் வேண்டாம் ஒரு "பார்ட்டி" (Party) வைப்போம் என்றுதான் இளையோர் கேட்பார்கள் என்று நான் எண்ணினேன். ஆனால் இரசிகையோ கத்தியின்றி, இரத்தமின்றி அது நடந்திருக்காது என்றும், அதனைத் தடுத்தது இதனை நடாத்த துணைபோனதும் இந்த இணையமே என்று இணையத்தின் மேலுள்ள தனது காதலை வெளிப்படுத்துகின்றார்.
பட்டிமன்ற வாதம் உச்சக்கட்டத்திற்கு வந்துவிட்டதுபோல ஓர் உணர்வு என்னுள் எழுகின்றது. கத்தி, கோடரி இன்றி சொல்லம்புகளை மட்டும் வைத்துக்கொண்டு செய்யும் யுத்தம்தானே இது.
"தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு"
என்ற குறளும் நினைவிற்கு வருகின்றது. அப்படியொன்றும் யாரும் மனதில் வைத்திருக்கமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். இவையெல்லாம் ஆரோக்கியமான போட்டிகள்தானே. நல்லதொரு இளம் சந்ததியினரை உருவாக்கவேண்டும் என்கின்ற ஆசையினால் நாம் செய்கின்ற அன்புச் சண்டைகள்தானே. இல்லையா?
சரி, எதிரணியிலிருந்து யார் வரப்போகிறார்? ஓ! புூனைக்குட்டியா? வாங்க. வந்து உங்கள் வாதத்தை முன் வையுங்கள்.
நன்றி.

