02-08-2006, 08:23 AM
<b>அரச தரப்பு பேச்சுக்குழுவில் பிரேரிக்கபட்ட உறுப்பினர்கள் தகுதியற்றவர்கள் - ஜாதிக ஹெல உறுமய.</b>
விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைக்கு அரசாங்கத்தினால் பிரேரிக்கப்பட்ட உறுப்பினர்கள் தகுதியற்றவர்கள் என ஜாதிக ஹெலஉறுமய தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் பேச்சாளர் நிஸாந்தசிறீ வர்ணசிங்க,ஜெனிவாப் பேச்சுவார்த்தைக்கு ஜாதிக ஹெல உறுமய ஆரம்பத்தில் இருந்தே தனது எதிர்ப்பைக் காட்டி வந்துள்ளது.
அத்துடன் பேச்சுவார்த்தைக்கு செல்பவர்கள் குறித்து எமக்கு திருப்த்தி இல்லை. காரணம் ஆரம்பகால திம்பு பேச்சில் இருந்து இன்று வரை விடுதலைப் புலிகள் தரப்பில் பேச்சுக்களுக்கு கலாநிதி அன்றன் பாலசிங்கம் தலமை தாங்குகிறார். அவர் பேச்சுவார்த்தை குறித்து சிறந்த அனுபவம் கொண்டவர்.
ஆனால் அரச தரப்பில் அப்படி அனுபவம் உள்ளவர்கள் இல்லை. அது நிஸாந்தசிறீ வர்ணசிங்க தெரிவித்தது. இதேவேளை இது குறித்து இனத்துவ முரண்பாட்டு கற்கை நெறி தொடர்பான ஆலோசகர் செரான் லக்திலக கருத்து தெரிவிக்கையில் இனப்பிரச்சனைத் தீர்வுக்கு அடிப்படையான யுத்த நிறுத்த உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைக்கு மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் நியமிக்கப்படுவது அவசியம்.
இது ஒரு சமூக விஞ்ஞானம் நுட்பமான அணுகுமுறைகள் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். ஆனால் அரசதரப்பு பிரதிநிதிகள் அந்த அறிவை அனுபவத்தை பெற்றிருக்கின்றார்களா என்பது கேள்வியே என அவர் தெரிவித்தார்.
<i><b>தகவல் மூலம் - பதிவு.கொம்</b></i>
விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைக்கு அரசாங்கத்தினால் பிரேரிக்கப்பட்ட உறுப்பினர்கள் தகுதியற்றவர்கள் என ஜாதிக ஹெலஉறுமய தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் பேச்சாளர் நிஸாந்தசிறீ வர்ணசிங்க,ஜெனிவாப் பேச்சுவார்த்தைக்கு ஜாதிக ஹெல உறுமய ஆரம்பத்தில் இருந்தே தனது எதிர்ப்பைக் காட்டி வந்துள்ளது.
அத்துடன் பேச்சுவார்த்தைக்கு செல்பவர்கள் குறித்து எமக்கு திருப்த்தி இல்லை. காரணம் ஆரம்பகால திம்பு பேச்சில் இருந்து இன்று வரை விடுதலைப் புலிகள் தரப்பில் பேச்சுக்களுக்கு கலாநிதி அன்றன் பாலசிங்கம் தலமை தாங்குகிறார். அவர் பேச்சுவார்த்தை குறித்து சிறந்த அனுபவம் கொண்டவர்.
ஆனால் அரச தரப்பில் அப்படி அனுபவம் உள்ளவர்கள் இல்லை. அது நிஸாந்தசிறீ வர்ணசிங்க தெரிவித்தது. இதேவேளை இது குறித்து இனத்துவ முரண்பாட்டு கற்கை நெறி தொடர்பான ஆலோசகர் செரான் லக்திலக கருத்து தெரிவிக்கையில் இனப்பிரச்சனைத் தீர்வுக்கு அடிப்படையான யுத்த நிறுத்த உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைக்கு மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் நியமிக்கப்படுவது அவசியம்.
இது ஒரு சமூக விஞ்ஞானம் நுட்பமான அணுகுமுறைகள் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். ஆனால் அரசதரப்பு பிரதிநிதிகள் அந்த அறிவை அனுபவத்தை பெற்றிருக்கின்றார்களா என்பது கேள்வியே என அவர் தெரிவித்தார்.
<i><b>தகவல் மூலம் - பதிவு.கொம்</b></i>
"
"
"

