02-08-2006, 03:40 AM
<b>ஜெனீவா பேச்சில் பங்கேற்போருக்கு ஆலோசனை வழங்க இரு குழுக்கள்: மகிந்த நியமனம் </b>
ஜெனீவாவில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காக செல்லும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைச்சர்கள், சில அமைச்சு செயலாளர்கள், சட்டத்தரணிகள் அடங்கிய இரு குழுக்களை நியமிப்பதற்கு மகிந்த தீர்மானித்துள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் அமைச்சு செயலாளர்கள் அடங்கிய குழுவானது சமாதான நடவடிக்கைகளை முன்கொண்டு செல்லும் வகையில் திட்டங்களை வகுத்து தேவையான ஆலோசனைகளை வழங்கி செயற்படும் பிரதான குழுவாகும்.
அதன் கீழ் செயற்படும் சட்டத்தரணிகளைக் கொண்ட உப குழுவானது இந்த நடவடிக்கைகளுக்குத் தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்கும்.
பிரதான குழுவிற்கென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, வர்த்தக நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் ரோகித போகொல்லாகம, ஊடக அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, அரச வங்கிகளை அபிவிருத்தி செய்யும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, மகிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க, நிதியமைச்சின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, திட்ட அமுலாக்கல் அமைச்சின் செயலாளர் அஜித் நவாட் கப்ரால், நீதியமைச்சின் செயலாளர் சுஹந்த கம்லத், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ்.பலியக்கார, பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர யுத்தநிறுத்த ஒப்பந்தத்தைத் திருத்துவது தொடர்பான சட்ட ஆலோசனைகளை வழங்கும் சட்டத்தரணிகளைக் கொண்ட குழுவில் மகிந்தவின் சட்டத்தரணி ஆர்.கே.டபிள்யு.குணசேகர, டி.எஸ்.ஜயசிங்க, எஸ்.எஸ்.விஜேவர்த்தன, பி.பீ.மெண்டிஸ், எஸ்.எல்.குணசேகர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சமாதான நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கான திட்டங்களை வகுத்தல் மற்றும் தேவையான ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவானது கடந்த வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மகிந்தவின் செயலகத்தில் கூடி இது தொடர்பாக ஆராய்ந்துள்ளது.
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
ஜெனீவாவில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காக செல்லும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைச்சர்கள், சில அமைச்சு செயலாளர்கள், சட்டத்தரணிகள் அடங்கிய இரு குழுக்களை நியமிப்பதற்கு மகிந்த தீர்மானித்துள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் அமைச்சு செயலாளர்கள் அடங்கிய குழுவானது சமாதான நடவடிக்கைகளை முன்கொண்டு செல்லும் வகையில் திட்டங்களை வகுத்து தேவையான ஆலோசனைகளை வழங்கி செயற்படும் பிரதான குழுவாகும்.
அதன் கீழ் செயற்படும் சட்டத்தரணிகளைக் கொண்ட உப குழுவானது இந்த நடவடிக்கைகளுக்குத் தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்கும்.
பிரதான குழுவிற்கென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, வர்த்தக நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் ரோகித போகொல்லாகம, ஊடக அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, அரச வங்கிகளை அபிவிருத்தி செய்யும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, மகிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க, நிதியமைச்சின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, திட்ட அமுலாக்கல் அமைச்சின் செயலாளர் அஜித் நவாட் கப்ரால், நீதியமைச்சின் செயலாளர் சுஹந்த கம்லத், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ்.பலியக்கார, பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர யுத்தநிறுத்த ஒப்பந்தத்தைத் திருத்துவது தொடர்பான சட்ட ஆலோசனைகளை வழங்கும் சட்டத்தரணிகளைக் கொண்ட குழுவில் மகிந்தவின் சட்டத்தரணி ஆர்.கே.டபிள்யு.குணசேகர, டி.எஸ்.ஜயசிங்க, எஸ்.எஸ்.விஜேவர்த்தன, பி.பீ.மெண்டிஸ், எஸ்.எல்.குணசேகர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சமாதான நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கான திட்டங்களை வகுத்தல் மற்றும் தேவையான ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவானது கடந்த வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மகிந்தவின் செயலகத்தில் கூடி இது தொடர்பாக ஆராய்ந்துள்ளது.
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
"

