02-08-2006, 03:38 AM
<b>சிறிலங்கா அரசாங்கக் குழுவுக்கு அமெரிக்கா பயிற்சி </b>
ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்கள் நடத்த உள்ள சிறிலங்கா அரசாங்கக் குழுவுக்கு அமெரிக்கா நிறுவனம் பயிற்சி அளித்து வருகிறது.
விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ள அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இன்று பேச்சுவார்த்தைத் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான இத்தகைய பயிற்சிகளில் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஹவார்ட் பேச்சுவார்த்தை திட்டத்தைச் சேர்ந்த சிறப்பு வல்லுனர்களால் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளவுள்ள குழுவினருக்கும் அவர்களின் உபகுழுவிற்கும் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது
இந்தப் பயிற்சி நடவடிக்கைகள் 4 நாட்கள் நடைபெற உள்ளன என்று இந்த நிகழ்வில் பங்கேற்ற பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தியரி, கற்பித்தல், பயிற்சி மற்றும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள், இவற்றிற்கான திறனை அபிவிருத்தி செய்யும் வகையில் 1979 ஆம் ஆண்டு ஹவார்ட் பேச்சுவார்த்தைகள் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
சிறிலங்கா அரசாங்கத் தரப்பிற்குத் தலைமை தாங்கும் சுகாதாரத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவிற்கு பேச்சுவார்த்தைகளின் அடிப்படை விடயங்கள் குறித்து இந்த பயிற்சி நிகழ்ச்சியின் போது விளக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
சமஸ்டி, ஐக்கியம், ஒற்றுமை, ஒருவரைச் சார்ந்திருத்தல் ஆகியவற்றின் அடிப்படைகள் குறித்தும் உரைகள் நிகழ்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் துறையிலிருக்கும் உள்நாட்டு வல்லுனர்களின் உதவியும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் குழுவிற்கு வழங்கப்பட உள்ளது.
விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ள அரசாங்கத் தரப்பினர் பயிற்சிகளைப் பெறும் முதலாவது நிகழ்வு இதுவாகும்.
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்கள் நடத்த உள்ள சிறிலங்கா அரசாங்கக் குழுவுக்கு அமெரிக்கா நிறுவனம் பயிற்சி அளித்து வருகிறது.
விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ள அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இன்று பேச்சுவார்த்தைத் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான இத்தகைய பயிற்சிகளில் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஹவார்ட் பேச்சுவார்த்தை திட்டத்தைச் சேர்ந்த சிறப்பு வல்லுனர்களால் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளவுள்ள குழுவினருக்கும் அவர்களின் உபகுழுவிற்கும் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது
இந்தப் பயிற்சி நடவடிக்கைகள் 4 நாட்கள் நடைபெற உள்ளன என்று இந்த நிகழ்வில் பங்கேற்ற பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தியரி, கற்பித்தல், பயிற்சி மற்றும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள், இவற்றிற்கான திறனை அபிவிருத்தி செய்யும் வகையில் 1979 ஆம் ஆண்டு ஹவார்ட் பேச்சுவார்த்தைகள் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
சிறிலங்கா அரசாங்கத் தரப்பிற்குத் தலைமை தாங்கும் சுகாதாரத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவிற்கு பேச்சுவார்த்தைகளின் அடிப்படை விடயங்கள் குறித்து இந்த பயிற்சி நிகழ்ச்சியின் போது விளக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
சமஸ்டி, ஐக்கியம், ஒற்றுமை, ஒருவரைச் சார்ந்திருத்தல் ஆகியவற்றின் அடிப்படைகள் குறித்தும் உரைகள் நிகழ்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் துறையிலிருக்கும் உள்நாட்டு வல்லுனர்களின் உதவியும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் குழுவிற்கு வழங்கப்பட உள்ளது.
விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ள அரசாங்கத் தரப்பினர் பயிற்சிகளைப் பெறும் முதலாவது நிகழ்வு இதுவாகும்.
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
"

