02-08-2006, 03:35 AM
<b>ஜெனீவாவில் பெப். 22 இல் பேச்சுக்கள்: சுவிஸ் வரவேற்பு </b>
ஜெனீவாவில் பெப்ரவரி 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையேயான பேச்சுக்கள் நடைபெற உள்ளதை சுவிஸ் அரசாங்கம் வரவேற்றுள்ளது.
சுவிஸ் அரசாங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சுவிசில் எதிர்வரும் பெப்ரவரி 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களை நடத்த சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த முடிவை சுவிஸ் அரசாங்கம் வரவேற்கிறது.
நோர்வே அனுசரணையின் முயற்சியால் கடந்த சனவரி 25 ஆம் நாளன்று யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களை சுவிசில் நடத்த இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இந்தப் பேச்சுக்கள் ஜெனீவாவில் நடைபெற உள்ளது.
இருதரப்பினரும் ஏற்கக் கூடிய தீர்வை உருவாக்குவதற்கான ஏதுவான சூழ்நிலைக்கான இடத்தை சுவிஸ் அரசாங்கம் வழங்கும்.
கடந்த சனவரி 25 ஆம் நாளுக்குப் பின்னர் யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதையும் சுவிஸ் அரசாங்கம் வரவேற்கிறது. கடந்த சில நாட்களாக நடைபெற்றும் நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு பேச்சுக்களைத் தொடங்குவதற்கான சூழ்நிலையை இருதரப்பினரும் ஏற்படுத்த வேண்டும் என்று சுவிஸ் அரசாங்கம் அழைப்பு விடுக்கிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
ஜெனீவாவில் பெப்ரவரி 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையேயான பேச்சுக்கள் நடைபெற உள்ளதை சுவிஸ் அரசாங்கம் வரவேற்றுள்ளது.
சுவிஸ் அரசாங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சுவிசில் எதிர்வரும் பெப்ரவரி 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களை நடத்த சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த முடிவை சுவிஸ் அரசாங்கம் வரவேற்கிறது.
நோர்வே அனுசரணையின் முயற்சியால் கடந்த சனவரி 25 ஆம் நாளன்று யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களை சுவிசில் நடத்த இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இந்தப் பேச்சுக்கள் ஜெனீவாவில் நடைபெற உள்ளது.
இருதரப்பினரும் ஏற்கக் கூடிய தீர்வை உருவாக்குவதற்கான ஏதுவான சூழ்நிலைக்கான இடத்தை சுவிஸ் அரசாங்கம் வழங்கும்.
கடந்த சனவரி 25 ஆம் நாளுக்குப் பின்னர் யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதையும் சுவிஸ் அரசாங்கம் வரவேற்கிறது. கடந்த சில நாட்களாக நடைபெற்றும் நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு பேச்சுக்களைத் தொடங்குவதற்கான சூழ்நிலையை இருதரப்பினரும் ஏற்படுத்த வேண்டும் என்று சுவிஸ் அரசாங்கம் அழைப்பு விடுக்கிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
"

