02-08-2006, 03:31 AM
<b>ஜெனீவா பேச்சுக்கள்: இராணுவத்தினருடன் மகிந்த ராஜபக்ச ஆலோசனை</b>
ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் நடத்த உள்ள பேச்சுக்கள் தொடர்பாக சிறிலங்கா இராணுவத்தினருடன் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று ஆலோசனை நடத்தினார்.
முப்படைகளின் தளபதிகள், அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் ஆகியோருடனும் மகிந்த நேற்று செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இச்சந்திப்பின் போது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சில முக்கிய சரத்துகள் தொடர்பாக தங்கள் கருத்துகளை இராணுவத் தரப்பினர் விளக்கியுள்ளனர்.
ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி. மற்றும் அமைச்சர்களும் தங்களது நிலைப்பாட்டை மகிந்தவிடம் விரிவாக விவரித்துள்ளனர்.
சிறிலங்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில் சில பாரிய திருத்தங்களை யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இணைத்தல் அவசியம் என்று இந்த சந்திப்பில் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
இருப்பினும் விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களின் போது அதிதீவிர நிலைப்பாட்டை சிறிலங்கா அரசாங்கக் குழு கடைபிடிக்க வேண்டாம் என்றும் ஏனெனில் யுத்த நிறுத்தம் நீடிப்பதற்கு அது அவசியமானது என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.
<b><i>தகவல் மூலம் - புதினம்.கொம்</i></b>
ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் நடத்த உள்ள பேச்சுக்கள் தொடர்பாக சிறிலங்கா இராணுவத்தினருடன் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று ஆலோசனை நடத்தினார்.
முப்படைகளின் தளபதிகள், அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் ஆகியோருடனும் மகிந்த நேற்று செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இச்சந்திப்பின் போது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சில முக்கிய சரத்துகள் தொடர்பாக தங்கள் கருத்துகளை இராணுவத் தரப்பினர் விளக்கியுள்ளனர்.
ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி. மற்றும் அமைச்சர்களும் தங்களது நிலைப்பாட்டை மகிந்தவிடம் விரிவாக விவரித்துள்ளனர்.
சிறிலங்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில் சில பாரிய திருத்தங்களை யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இணைத்தல் அவசியம் என்று இந்த சந்திப்பில் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
இருப்பினும் விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களின் போது அதிதீவிர நிலைப்பாட்டை சிறிலங்கா அரசாங்கக் குழு கடைபிடிக்க வேண்டாம் என்றும் ஏனெனில் யுத்த நிறுத்தம் நீடிப்பதற்கு அது அவசியமானது என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.
<b><i>தகவல் மூலம் - புதினம்.கொம்</i></b>
"
"
"

