02-07-2006, 10:35 PM
எல்லோருக்கும் வணக்கம்
பிருந்தன் பங்குபற்றாததால் நான் இதில் பங்க்கு பற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டி விட்டது. சரி வாதத்துக்கு வருவோம்.
இணைய்த்தால் இளையோர் நன்மையடைக்கிறார்கள்... என்று சொல்ல முற்படும் அதே வேளை. இளையவர் தூயவன், தல அவர்கள் கூறிய சில பிழையான கருத்துக்களை சுட்டிக்காட்ட வேண்டிய தேவையும் எனக்கு ஏற்படுகின்றது.
<b>
தல கூறியது:-
எதிரணித் தலைவர் இளைஞன் உழைப்பாளியாய் ஒரு கவிஞனாய் உயர்ந்த இந்த சஞ்சீவ் என்கின்ற இளையோன்... இணையத்தால் உயரவில்லை சொந்த உழைப்பால் போற்றப்படுகிறார்... என்பதுதானே உண்மை...</b>
இணையத்தால் மட்டுமே புலம்பெயர்ந்த இளைஞர்கள் உயர்கிறார்கள் என்றோ உயர்ந்தார்கள் என்றோ நாம் சொல்லவில்லை. இணையம் என்பது இளைஞர்களின் சிந்தனைக்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது என்றே சொல்கிறோம். அவர்களின் உழைப்புக்கு பக்கதுணையாக இருக்கிறது (பக்கதுணையாக இருக்கிற ஏனைய காரணிகளோடு) என்றே சொல்கிறோம். தல அவர்கள் எழுதிய மேற்கண்ட கருத்தின் மூலம் ஒரு உண்மையை தெளிவாக ஒத்துக்கொள்கிறார். சொந்த உழைப்பால் அதாவது சொந்தச் செயற்பாட்டால் தான் ஒருவர் போற்றப்படுகிறார். அப்படியாயின் அதிலிருந்து இன்னொன்றையும் நாம் விடையாகப் பெறலாம். அது யாதெனின், ஒருவர் தனது சொந்த செயற்பாட்டால் தான் தீமையடைகிறார் அல்லது சீரழிந்து போகிறார் என்பதே அது ஆகும். இது இப்படியிருக்க இணையத்தின்மீது உங்கள் பாவங்களை சுமத்துவது எந்தவகை நியாயம் என்று சொல்லுங்கள்.
எதிரணியினரின் வாதங்கள் எப்படியிருக்கிறதென்றால் எல்லாக் குற்றங்களையும் தாம் செய்துவிட்டு கடவுளின் மேல் பழியைப் போடுவதைப் போல் உள்ளது. தமது பிழைகளால் தாம் அனுபவிக்கிற துன்பத்துக்கெல்லாம் "எல்லாம் அவன் செயல்" என்று அடி முட்டாள்தனமாக சொல்லிவிட்டு தம்மை பொம்மைகளாகக் காட்டிக்கொள்ளும் எதிரணியனரை என்னவென்பது?
<b>தல கூறியது:-
தலைவர் அவர்களே...! இளையோருக்கு இந்த இணையங்கள் புதிதாக ஓண்றையும் செய்துவிடவில்லை... வானொலிகளும்,தொலைக்காட்ச்சிகளிலும், பத்திரிகையிலும், நூல்நிலையங்களிலும் நாங்கள் பெற்றுக் கொண்டதை இப்போ இணையத்தில் பெறுகின்றனர்... அதனால் இளைஞருக்கு எந்தப்பயனும் இல்லை வேண்டுமானால் சோம்பேறித்தனத்தை பெற்று சீரளிக்கப் படுகிறார்கள்.......</b>
தல அவர்கள் தனது வாதத்தின் மூலம் தெட்டத் தெளிவாக பல வாக்குமூலங்களை அளித்துள்ளார். இணையம் ஒன்றையும் புதிதாக செய்துவிடவில்லை என்று அவர் குறிப்பிடுவதன் மூலம் ஏற்கனவே சீரழிந்து போய் இருக்கிறவர்களை மேலும் சீரழிக்கவில்லையென்று அல்லது தீமைகளை செய்யவில்லை என்று சொல்கிறார்.
வானொலிகளும், தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும், நூல்நிலையங்களும் ஒன்றாய் உங்கள் கண்முன் திரையில் விரிவது நன்மையில்லையா? - உங்கள் மூளைக் கலன்களின் மீது சத்தியம் செய்யுங்கள்!!! பணம் செலவழித்து எத்தனை பத்திரிகைகளைத்தான் வாங்குவது? அதிலும் எமக்கு அவசியமற்ற தகவல்களையும் சேர்த்து வாங்குகிறோம். ஆனால் இணையத்தில் வேகமாக பத்திரிகைச் செய்திகளைப் பெற்றுக்கொள்கிறோம் - பல்வேறு தரப்பு நியாயங்களையும் அறிந்துகொள்கிறோம் - எமக்கு தேவையானதை மட்டும் தெரிவுசெய்து படிக்கிறோம் - பணச்செலவு மிச்சம் - உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்கிறோம்.
சோம்பேறித்தனத்தை இணையம் தான் இவர்களுக்கு அறிமுகப்படுத்தியது போல சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. தொலைக்காட்சிப்பெட்டிகளின் முன்னிருந்து பெறாத சோம்பேறித்தனமா? ஐயா சோம்பேறித்தனமென்பது உங்கள் உங்கள் மனம், உடல் சார்ந்தது. அதை வழிநடத்தவேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது - இணையத்திடமில்லை. எங்கள் அணியில் நாரதர் தெளிவாக ஒரு கருத்தை முன்வைத்தார். செய்வதெல்லாம் செய்திட்டு "அவனன்றி ஓரணுவும் அசையாது" என்று கல்லை நோக்கி கைகாட்டுவீர்கள் - ஏனென்றால் கல் திருப்பிக் கதைக்காது என்கிற நம்பிக்கையில்.
<b>தூயவன் கூறியது:-
இதை ஏன் சொல்லுகின்றேன் என்றால் உலகத்தில் உள்ள கட்டுப்பாடற்ற, நினைத்ததைப் பகிரக் கூடிய ஊடகம் என்றால் அது இணையம் தான். இணையத்தினூடாக என்னவென்றாலும் செய்து கொள்ளமுடியும். தொலைக்காட்சி, பத்திரிகைகளில் வெளிவரும் எவ்விதமான நடவடிக்கைகளையும், அந்தந்த நாட்டு அரசாங்கங்களால் கட்டுப்படுத்தவோ, அல்லது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ முடியும். சமீபத்தில் மைக்கல் ஜக்சனின் சகோதரி செய்த அசிங்கமான ஒளிபரப்பால் அவ் தொலைக்காட்சி நிலையத்துக்கு அமெரிக்க அரசாங்கம் விளக்கம் கேட்டது நல்ல சான்று.</b>
தூயவன் சொல்கிறார்.... இணையத்தை எந்த அரசாங்கமும் கட்டுப்படுத்துவது இல்லை... என்ன என்றாலும் வெளியிடலாம்... ஆனால் மற்றய ஊடகங்கள் அப்படி இல்லை. அந்தந்த நாட்டு அரசால் கட்டுப்படுத்த படுகிறது என்கிறார். இப்படி கூறுவதன் மூலம் மற்றய ஊடகங்களை விட இணையம் இளையோரை சீரழிக்கிறது என்று கூற வருகிறார். அது தவறானது.... மற்றய ஊடகங்கள் போலவே இணையமும் கட்டுப்படுத்தப்படுகின்றன... உதாரணமாக அரபு நாடுகளில் பாலியல் சம்பந்தமான தளங்களுக்கு தடை இருக்கிறது. ஏன் தமிழ் நாட்டிலும் பாலியல் தளங்களை தடை செய்ய நடவெடிக்கை எடுக்கவுள்ளார்கள் ( ஆதாரமில்லாத செய்தி என்று சொல்ல வேண்டாம். அண்மையில் ஜெயா கூறியது தான் )
மிக அண்மையில் GOOGLE க்கும் சீனா நாட்டுக்கும் ஒரு கருத்து வேறு பாடு பற்றி அனேகமானோர் கேள்விபட்டு இருக்கலாம். இதை விட அனேகமான நாடுகளில்.. ஒருவரின் இணைய நடவடிக்கைகள்.. அந்த நாட்டு பொலீசாரினால் சேகரிக்கப்பட்டு.. கோப்பாக பேணப்படுகின்றன. எப்போது அவர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறாரோ... அப்போது அவரை பிடிப்பதற்கு அவை வழிவகுக்கும். ஆகவே தூயவன் சொல்வது போல மற்றய ஊடகங்கள் கட்டுப்படுத்த படுகின்றன.. இணையம் கட்டுபடுத்த படுவதில்லை என்பது தவறானது.
<b>தூயவன் கூறியது :-
ஆனால் இணையம் என்பது கட்டாக்காலி போன்றது. கட்டுப்பாடுகள் இல்லாத எதுவுமே, ஒழுங்கான வரையறைக்குள் அடங்காது. உலகில் உள்ள பல லட்சம் தளங்களைக் கட்டுப்படுத்தவோ, அல்லது ஒவ்வொரு நபர்களின் தனிப்பட்ட மடல்களைப் பிரித்துப் பார்ப்பதோ முடியாத காரியம் </b>
அப்படி சொல்ல முடியாது. ஒரு தளத்தை ஒரு நாட்டில் தடை செய்தால். அது அந்த நாட்டில் வேலை செய்யாது. அப்படி செய்ய முடியும். ஒரு நாட்டில் உள்ள கருத்துக்கு எதிரான தகவல்களை தேடி பெற முடியாது செய்யவேண்டும் என்று அரசு விரும்பினால். Google போன்ற தேடல் தளங்களுடன் பேசி அதை செய்து கொள்ளலாம். அயிரக்கணக்கான மடல்களை பிரித்துபடிப்பது கடினம் தான். ஆனால் ஒரு வேலை தளத்தில் தனி மடல் பார்த்தால்.. அல்லது அனுப்பினால்.. அதை மேலதிகாரிகள் பார்வையிடலாம். உங்களது இணைய புரொவீடர்களால் உங்கள் தனிமடல்கள் பார்வையிடப்படலாம். எல்லா தனிமடல்களையும் பார்ப்பது நேரவிரயம் தான். தெரிவு செய்யபட்ட மடல்களை மட்டுமே. அவ்வாறு மடல்களை தெரிவு செய்வதற்கும் சில முறைகளை கையாளுகிறார்கள்.
விஸ்ணு கூறியது:-
சீரழிவால் தான் MSN சாட் தளம் பொது அரட்டையை நிறுத்தி இருப்பதாக எங்கே சொல்லப்பட்டது?? எம் எஸ் என் மஸெஞ்சர்கள் எப்போதுதடைசெய்ய போகிறார்கள்... அல்லது புதிதாக ஒரு வேர்ஸனை கொண்டுவரப்போகிறார்களாமா???
<b>அதுக்கு தூயவன் கூறியது:-
எம்எஸ்என் தனது பகிரங்க அரட்டை அறையை மூடியதற்கு அங்கு சில பாலியல் துஸ்பிரயோக விடயங்கள் பரிமாறப்படுவதால் தான் அது நிறுத்தப்படுவதாகவும் மைக்ரோ சொவ் விளக்கம் கொடுத்திருந்தது. எனவே விஸ்ணு அவர்களே நீங்கள் சொன்னது போல புது பதிப்பு(வேசன்) கொண்டு வருவதற்காக இருந்தால் 2 வருடமாக அது முடக்கப்பட்டிருக்கத் தேவையில்லையே! புது பதிப்பை முடக்கப்படாமல் தான் இணைப்பார்களே தவிர இப்படி நிரந்தரமாக நிறுத்தி விட்டல்ல. எனவே அதைப் புூசி மொழுகுவது ஏற்புடையதாகத் தெரியவில்லை. </b>
தயவு செய்து கருத்துக்களை வடிவாக வாசியுங்கள். எம் எஸ் என் சாட் தளம் வேறு, எம் எஸ் என் மஸெஞ்சர் வேறு. சாட் தளத்தை பாலியல் பரிமாற்றங்கள் காரணமாக மூடிய மைக்ரோ சொப்ற்... ஏன் மஸெஞ்சர்களை மூடாமல் புதிய புதிய வேர்சனை அறிமுகம் செய்கிறது. இதுதான் விஸ்ணு கூறியது. தூயவனுக்கு இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மசெஞ்சர்கள் மூலம் பாலியல் துஸ்பிரயோகம் நடைபெறவில்லையா?? உண்மையில் பார்த்தால் மெஸெஞ்சர்ளில் தான் இதற்கான வாய்ப்புகள் அதிகம் ( வீடியோ வசதியை இங்கே சொல்லாம் )
<b>தூயவன் கூறியது:-
தேசியத் தலைவர் போராட்டத்தில் குதித்தபோதோ, அல்லது இராணுவ தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளுவதற்கோ இணையத்தைப் பாவித்தனர் என்பது எவ்வளவு பெரிய ஏமாற்றுத்தனம். ஜயா!! ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். இணைய ஊடகம் என்று வந்தது எல்லாம் இந்த சமாதானகாலத்திற்கு பிற்பட்டகாலத்தில் தான். நீங்கள் வேணுமென்றால் மறந்திருக்கலாம். யுத்தம் நடந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இணையப் பாவனையைக் கொண்டிருக்கவில்லை.
புதினமாக இருக்கட்டும், சங்கிதியாக இருக்கட்டும் அவை கூட இந்த சமாதான கால ஒப்பந்த்தின் பின்னரான வெளியீடுகளே!!இணையத்திற்கு முன்பெல்லாம் தேசியம் வளரவில்லையா? </b>
நன்றாக சொன்னீர்கள்... எமதணியினர் ஏன் இணையத்தால் மட்டுமா இளையோர் கெட்டார்கள்.. தொலைகாட்சி, இன்னும் மற்றும் ஊடகங்களால் அவர்கள் கெடவில்லையா என்று சொன்ன போது நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை பாருங்கள்...
<b>தூயவன் கூறியது:-
நாம் விவாதிப்பது இளைய தமிழ்சமுதாயத்துக்கு இணையம் செய்ய பாதிப்பை மட்டும் தான்.அவற்றின் குற்றத்தை வேணுமென்றால் உங்களுக்காக பிரிதொரு விவாதத்தில் விவாதிப்போமே!!!</b>
அது போலத்தான்.... தூயவன் இணையம் இல்லாத காலங்களில் தேசியம் வளரவில்லை என்று யார் சொன்னது?? இப்போது இணையப்பயன்பாடு தேசியத்தின் வளர்ச்சியில் இன்னும் ஒரு தோள் குடுத்து இருக்கிறது... என்று தான் நாம் கூறுகிறோம்...
<b>தூயவன் கூறியது :-
யாழ்பாணவீதி ஒன்றில் போகின்றோம். வழியில் கல் ஒன்று காலில் தட்டி விட்டது. நாம் உடனே கால் விரலை வெட்டிவிடுவோம். ஏனென்றால் ஏய்தவன் இருக்க அம்பை நோகலாமா? கல் வழியில் பேசாமல் தானே இருந்தது. நாம் தானே போய் மோதினோம். </b>
யாழ் வீதியில் வெறு வேலையாக அவசரமாக போகும் போது எதிரே இருக்கும் கல்லில் நாம் கவனிக்காமல் தான் மோதுகிறோம் தூயவன். இதில் நான் சொல்ல வருவது 2 விடயம்... வேறு வெலையாக போகும் போது தான் நமக்கு குறுக்கே கல் இருக்கிறது. நாம் கவனிக்காமல் தான் கல்லில் மோதுகிறோம். யாரும் காலையில் எழுந்து யாழ் வீதில கல் இருக்காம் தூயவன் சொன்னவர்.. அதில மோதுவம் என்று போவதில்லை. வேறு வேலையாக செல்லும் போது குறுக்கே வருவது அது.
ஆனால்.... இணையத்தில் ஆபாசத்தளங்கள் கணணியை இயக்கி இணையத்துக்குள் பாடசாலை ஒப்படை செய்ய போகும் போது தானாக வருவதில்லை. இளையோர்கள் தாமாகவே அங்கே போகிறார்கள். அப்படி இல்லை தாமாகவே விளம்பரங்கள் தோன்றுகின்றன என்று யாரோ சொன்ன நினைவு. நீங்கள் முதலில் அப்படியான தளங்களுக்கு போய் இருந்தால் தான் அப்படியான விளம்பரங்கள் தோன்றும். அல்லது ஆபாச தளங்களின் உறவு தளங்களுக்கு போனால் தான் அப்படியான கற்கள் உங்களுக்கு தோன்றும். அதை விட ஆபாசங்களை தடை செய்ய கணணிகளில் முடியும் . அப்படியான விடயங்களை மேற்கொண்டு அப்படியான கற்களை நீங்கள் அப்புறப்படுத்தலாம். ஆகவே தூயவன் நாரதர் சொல்ல நினைத்தது..... இணையத்தில் கல் தானாக எமது முன் தோன்றுவதில்லை... யாழ் வீதி மாதிரி. நாமாக தான் தேடி போகிறோம். இணையத்தில் சடப்பொருட்கள் இல்லாத நாம் தான் ஆபாசங்களை.... சீர்கேடுகளை தேடிப்போகிறோம். இப்போது நாரதர் கூறியதை பாருங்கள் உங்களுக்கு சரியாக தோன்றும்.
நாரதர் கூறியது:-
அந்த ஊடகத்தை அதாவது ஒரு சடப் பொருளை எவ்வாறு நாம் இங்கே சீரழிப்பதற்கான காரணி ஆக்க முடியும்?எப்படி அது எம்மைச் சீரழிகிறது என்று கூற முடியும்?எய்தவன் இருக்க அம்பை நோகலாமோ?
இங்கே எய்தவன்.. தானாக சீர்கேடுகளை தேடும் இளையவன். ஆகவே இணையம் சீரழிக்கவில்லை. கெடுகிறேன் பந்தயம்பிடி என்று திரியும் இளையவர்கள் தான் தாமாகவே கெட்டு போகிறார்கள். இணையத்தில் அறிவு பசியை போக்குபவர்கள் பயன் பெற்று மேலே சென்று கொண்டு தான் இருக்கிறார்கள்.
<b>தூயவன் கூறியது:-
நெறிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் கருதுகின்றனர். அதனால் வீடுகளுக்கான இணைய இணைப்புக்கு அனுமதி அளிக்கவில்லை </b>
தூயவன் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். எதிர் வரும் காலங்களிலும் இப்படி இணையத்தை விடுதலைப்புலிகள் தடை செய்ய போவதில்லை. தேசியத்தை வளர்க்கும் தளங்கள் எத்தனை ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.. என்பது உங்களுக்கு தெரியாதா?? புலிகளின் குரல் முதல்.. எத்தனையோ தேசிய தகவல்களை பெறக்கூடிய இணையத்தை ஈழத்தில் பார்க்க முடியாமல் போகுமா என்ன?? ஒரு புல நாட்டில்.. அந்த நாட்டு கொள்கைக்கு எதிரான தளங்கள் இயங்குவதை தடை செய்யலாம். ( உதாரணமாக அரபு நாடுகளில் ஆபாசத்தளங்களுக்கு தடை ) அதே போல ஈழத்தில் அப்படியான வசதி கிடைக்கும் போதுநிட்சயமாக தேசி பண்பாட்டுக்கு மீறியவை தணிக்கை செய்யப்பட்டு.... இணைய பயன் பாடு கிடைக்கும்.
<b>தல கூறியது:-
ஆனாலும் எங்கும் அலைவதற்கு அவசியமில்லாமல் முதியவர்களிற்கு இணையம் உதவியும் செய்யலாம்.... உடல் தளர்ந்து நடமாட கடினமான முதியவர்களால் ஒரே இடத்தில் இருந்து பெறப்படும் தகவல்களானது அவர்களிற்கு உதவியும் ஆகும்... </b>
ஆக தல சொன்னதிலிருந்து மிகமுக்குியமான ஒரு விடயத்தை நாம் விடையாகப் பெறமுடியும். உடல் தளர்ந்து நடமாட கடினமான முதியவர்களுக்கு நன்மைபுரிகிறது இணையம் என்கிறார். ஆகவே, அதேபோல உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கு இணையம் மாபெரும் துணையாக இருக்கிறது என்பதை எதிரணியினர் ஏற்றுக்கொள்கிறார்கள்.
<b>
தல கூறியது:-
வேண்டுமானால் இணைய ஊடக தொழில் நுட்பங்கள் ஒரு வளர்ந்த முதிர்ந்த புலம்பெயர் வியாபாரிக்கு உதவலாம், தொழில் உதவியாளருக்கு, உத்தியோகத்தர்களுக்கு அல்லது பொறியியலாளருக்கு உதவுகிறது.... அதனால் வளர்ந்துவரும் இளைஞன் பயன் அடைகிறார்களா எண்றால் இல்லை என்பதே பதிலாக வருகிறது......</b>
இந்த ஆண்டுக்குரிய மிகப்பெரிய நகைச்சுவை (சிறந்த நகைச்சுவை 2006). அதென்ன முதிர்ந்த வியாபாரி? முதிர்ந்த வியாபாரி இளைஞராக இருக்க முடியாதா? - தொழில் உதவியாளர்களும், பணியாளர்களும், பொறியியலாளர்களும் இளைஞர்களாக இருக்க முடியாதா? -இவர்களின் தொழில்ரீதியான செயற்பாடுகளுக்கு இணையம் தன்னாலான பங்களிப்பை செய்யவில்லையா?
<b>தல கூறியது:-
புலம்பெயர் நாட்டில் புலம் பெயர்ந்ததால் கணனி அறிவற்ற பெற்றோர் அல்லது இணைய அறிவில் போதிய தகமை இல்லாத பெற்றோராய் இருப்பவர்களால் பிள்ளைகளின் நடவடிக்கைகள் அறியப்படாமலேயே இருக்கிறது.... இது புலம் பெயர் இளைஞர் இணைய உலாவில் என்ன செய்கிறாய் எண்று கேள்வி கேட்கப்படாதவர்களாய் உலாவர உதவுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை..... இது ஒரு கட்டாக்காலி மாட்டின் நிலைமைக்கு ஒப்பானது.... அவர்களால்(இளையோரால்) எங்கு வேண்டுமானாலும் மேயலாம்... அசைபோடலாம்.... எது வேண்டுமானாலும் செய்யலாம்....</b>
புலம்பெயர்ந்ததால் புலம்பெயர்ந்த நாடுகளில் வாசிக்கும் பெற்றோர்களுக்கு அறிவில்லையா? நல்ல கண்டுபிடிப்பு. ஐயா நடுவர் அவர்களே, சிற்றுந்து ஓட்டத் தெரியாத பெற்றோர்கள் நிறைய பேர் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கிறார்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள். அவர்களுக்கு புலம்பெயர் சிற்றுந்து ஓட்டுனருக்கான விதிமுறைகள் தெரியாது தான். ஆனாலும் சிற்றுந்தில் பயணிக்கும் போது "கவனமா ஓட்டு தம்பி", "பார்த்துப் போ ராசா", "சிவப்பு விழுந்திட்டு", "வேகத்த கொஞ்சம் குறை" போன்ற பல அறிவுரைகளைக் கேட்கலாம். ஆக ஆபத்துகள் இருக்குமிடத்து அறிவுரைகளையும் கண்காணிப்புகளையும் பெற்றோர்கள் செய்யட்டும், செய்யத் தவறின் அது இணையத்தின் தவறல்ல. கடவுள் சிலையில் தலையைக் கொண்டு போய் முட்டினாலும் ஆபத்துத்தான்.
<b>தல கூறியது:-
இளைஞருக்கு உதவாத அல்லது உதவுவதாய் சொல்லப்படும் இணையம்.... இளையோரை சோம்பேறிகள் ஆக்குகின்றது நடுவர் அவர்களே.....!.. ஊர் எல்லாம் திரிந்து ஆசிரியர்கள் நூல் நிலையங்கள் எல்லாம் அலைந்து பெறவேண்டிய இந்த தகவல்கள் விரல்நுணியில் பெறப்படுவதாலும்... வெட்டி ஒட்டுவதாலும்... படித்தபாடம் மனதில் நிற்பதும் இல்லை... இலகுவாய் பெற்ற தகவலின் பெறுமதி தெரிவதும் இல்லை... அதுவே அந்த இளைஞனைச் சீரளிக்கிறது... புதிதாய் அந்த இளைஞன் தன்னம்பிக்கையை வளர்க்கவில்லை இணையத்தை நம்பியே வாழ்க்கை நடாத்தி சீரளிகிறான்....!</b>
புத்தகத்தில வெட்டி ஒட்டினால் கண்டுபிடிப்பது கடினம். இணையத்தில் வெட்டி ஒட்டினால் கண்டுபிடிப்பது மிக இலகு. வேகமாகவும், நேரம் செலவளிக்காமலும் தகவல்களையும் பயனுள்ள விடயங்களையும் பெற்றுக்கொள்வது தவறு என்கிறீர்களா? படித்தபாடம் மனதில் நிற்பதற்கு அது எவ்வளவு வேகமாக கிடைக்கிறது என்பது முக்கியமில்லை. பாடம் பிடித்ததாக இருக்குவேண்டும். படிக்கவேண்டும் என்கிற எண்ணம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்குவேண்டும். அப்பதான் பாடம் மனதில் நிற்கும். இலகுவாகக் கிடைப்பது உங்களுக்கு பொறுக்கவில்லையா? அப்படியென்றால் எதையும் சிக்கலானதாகவும், சிரமப்பட்டதாகவும் செய்யத்தான் நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? தன்நம்பிக்கையை இணையம் வளர்க்கவில்லை என்று சும்மா மேலோட்டமாக சொன்னால் எப்படி? பக்கத்தில் இருந்து பரீட்சை எழுதும் நண்பனின் திறமையில் நம்பிக்கை வைத்து பரீட்சை எழுதுகிற இளைஞர்கள் போன்றவர்கள் எப்பொழுதும் அப்படித்தான் இருப்பார்கள். இணையம் தன்நம்பிக்கையை வளர்க்கவில்லை என்றுதானே சொன்னீர்கள். தன்நம்பிக்கையை இல்லாமல் செய்கிறது என்று சொல்லாதவரையில் சீரழிந்துபோகவில்லை என்பதாக உறுதிப்படுத்திக்கொள்ளமுடியும்.
<b>தல கூறியது:-
நேரங்களைச் செலவளிக்காமல் வினாடிகளில் கல்வித்தகவல்களைப் பெற்ற மாணவர், மிகுதி நேரங்களை வீணாகச் செலவளிக்கப் புறப்படுகிறார்கள்... குறிக்கோள் இல்லாத பயணங்களை ஆரம்பிக்கிறார்கள்...... இதோடு ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்......
சும்மா இருக்கும் மனமே சாத்தானின் உறைவிடம்... எண்ற வகையில் அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்கு ஒவ்வாத நடவடிக்கைகளில் ஈடுபட வளிவகுத்தது இணையங்களே....! அவர்களைச் சீரளிக்கிறது... </b>
சித்தர் தல அவர்களே நேரங்களை செலவளிக்காமல் கல்வித்தகவல்களை வேகமாக மாணவர்களால் பெற்றுக்கொள்ள முடிகிறது என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி. மிகுதி இருக்கிற நேரங்களில் குறிக்கோளில்லாத பயணங்களைத் தொடர்கிறார்கள் என்றால் அது அவர்களின் இயல்பான குணாம்சமே. அப்படியென்றால் வேகமாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்வது தவறு என்கிறீர்களா?
<b>தல கூறியது:-
தனியார் கல்வி நிறுவனங்கள் மேலதிக வகுப்புக்களின் முடிவில்.... மதகுகளில் இருந்து அல்லது விளையாட்டுத் திடல்களில், தோழிவீடுகளில், உறவாடி விளையாடி தங்களின் பொழுது போக்கி அளவளாவிக் கூடிக்களித்த இளைஞர் புலம் பெயர் நாட்டில் தனியான இணைய சற் ரூம் களில். காலத்தைப் போக்குகிறார்கள். மதகுகளில், தோழிவீடுகளில் இருந்த இளைஞர் பெற்ற பயன் சற்றூம்கள் தருவதில்லை அங்கு அவர்கள் பெற்ற வாழ்வாதாரத்துடன் கூடிய புரிந்துணர்வை, தலைமைப்பண்பை, நட்புணர்வை மனிதநேயத்தை, இணையங்கள் தருவதில்லை அதவிட வக்கிரங்களையே தோற்றுவிக்கிறது என்பதுதான் உண்மை. நேரிடையாய் கண்ணியவானாய் இருக்கும் இளைஞர்கள் முகம் தெரியாமல் கண்ணியமாய் இருப்பதிலை என்பதை மறுக்க முடியுமா என்ன...???? </b>
கண்ணியவான தல அவர்களே, முகம் தெரியாத நீங்கள் கண்ணியமில்லாமலா இருக்கிறீர்கள்? எத்தனை தடவை தான் நாம் சொல்வது வக்கிரங்கள் இணையத்தால் தோன்றவில்லை, உங்கள் மனதிலிருந்து தோன்றுகின்றன என்று? கனடாவில், யேர்மனியில், இலண்டனில், பிரான்சில் என்று பல்வேறு நாடுகளில் இருக்கும் இளைஞர்களோடு புரிந்துணர்வை வளர்த்துக்கொள்ள இணையம் எப்படித் துணைபுரிகின்றது என்பதை யாழ்களமூடாக உங்களால் அறிந்துகொள்ளமுடியவில்லையா? நட்புணர்வை வளர்த்துக்கொள்வதில் எம்எஸ்என் துரிததூதர் போன்றவை எப்படியான பங்கை ஆற்றுகின்றன என்பதை நான் சொல்லித் தான் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய நிலையில் இல்லை என்று நினைக்கிறேன். வெளி உலகத்தில நடப்பவை எல்லாவற்றையும் இணையமும் செய்யவேண்டும் என்று எதற்கு எதிர்பார்க்கிறீர்கள்? தமது பள்ளி மற்றும் தொழில் சார் தேவைகளுக்கும் பொழுதுபோக்கு விடயங்களுக்கும் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். அதனால் நன்மையும் அடைகிறார்கள். அவர்கள் ஒன்றும் நாள்முழுக்க இணையத்துக்குள் குடும்பம் நடத்தவில்லை.
<b>தல கூறியது:-
எனது அணியின் உறுப்பினர் ப்ரியசகி சொன்னது போல இணையம் அந்த இளைஞருக்கு ஒரு போதைப் பொருள் ஆகிவிட்டது.... விடுபட முடியாமல் தவிக்கிறார்கள்... எப்போதும் அதன் சிந்தனையாய் அலையும் துன்பத்துக்கும் உள்ளாகிறான்... இந்த துன்பம் இனையத்தால் வந்ததே...
இது இளையசமுதாயத்தின் சீரளிவின் ஆரம்பம்தான்... இன்னும் முடியவில்லை தொடர்கிறது...... </b>
சமூகச் சிந்தனையாளர் தல அவர்களே உங்கள் அதிசயமான சமூக ஆய்வுக்கு நன்றி. எதை நாம் அதிகம் நேசிக்கிறோமோ அதற்கு நாம் அடிமைப்பட்டுப்போகிறோம். "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே". இணையம் இளைஞருக்கு போதைப் பொருள் ஆகிவிட்டது என்று சொல்கிறீர்கள். எதனால் இணையம் போதைப்பொருள் ஆகிறது? அதிகமாக அதில் அவனை ஈர்க்கிற ஒரு சக்தி இருக்கிறது. இதன் பொருள் என்ன? அவன் இயல்பாய் இருப்பதற்கு தேவையான ஒரு சக்தி வெளியுலகத்தில் அவனுக்கு குறைந்து போயுள்ளது என்பது தானே? வெளியுலகில் அவன் இயல்பாய் இருப்பதற்கான சூழல் இருந்திருக்குமானால் இணையத்துக்குள் மூழ்கிப் போவதற்கு அவனுக்கு என்ன தேவையிருக்கிறது? ஆக தவறுகள் புறச்சூழலால் நிகழ்கிறதே ஒழிய இணையத்தால் அல்ல.
<b>தல கூறியது:-
இராவணன் அண்ணா வெட்டிய வெட்டுக்கள் சொல்லும்..... இளையோர் கட்டுப்பாடானவர்களா எண்று... அவர்களோடு சேர்வதால் வெட்டு வாங்கிய முதியோரைக் கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள் இளையோரைப்பற்றி... ஆனி 29, 2005 11:50 am தொடங்கிவைக்கப்பட்டு இதுவரை 21 பக்கங்கள் தாண்டி விட்ட கருத்துக்களில் மாற்றம் பகுதி சொல்லும்... யாழில் நீங்கள் செய்யும் குழப்படிகள். ... இணையத்தில் அதுவும் யாழில் நீங்கள் யாரும் கெட்டுப்போகக் கூடாது எண்ற நல்ல நோக்கில் அமைக்கப்பட்ட மட்டுறுத்தினர்கள் சொல்வார்கள் இளையோரைக்காக்க எவ்வளவு கடினப்படுகிறோம் எண்று.....</b>
தல(வெறும்) அவர்களே இராவணன் வெட்டிய வெட்டுக்களில் தெரிவது இணையத்தின் சீரழிவுகள் அல்ல - ஒவ்வொரு களஉறுப்பினர்களின் தனப்பட்ட பண்பு. இணையமில்லாமல் ஒரு கருத்தாடலை ஒரு அறையில் வைத்து நடத்தினால் இதைவிட மோசமான விளைவுகளை (வன்முறைகள், ஆயுதங்களுடனான சண்டைகள்) சந்திக்க நேரிடும் என்பதை உணர்க. அப்படியான பாதிப்புகளிலிருந்து காத்து எதுவித இரத்தமும், காயமும் இன்றி ஒரு கருத்தாடலை நடத்த துணைபுரிகிறது என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
<b>தல கூறியது:-
இணைய உலாவுக்காய் வரும் இளையோர் தறிகெடாமல் இருக்க தடை போட்டு மட்டுறுத்தினர்களை நிறுத்தி சீரளியாமல் தடுத்த, தடுக்கும், யாழ்கள நிறுவுனர் மோகன் அண்ணாவிற்கு எமது அணிசார்பாக நண்றிகள்....!</b>
மீண்டும் மீண்டும் வாக்குமூலங்களை அளித்து எமது அணியின் நியாயத்தை வலுப்படுத்த உதவிபுரிந்த எதிரணி நண்பர் தல அவர்களுக்கு எமது மனப்பூர்வமான நன்றிகள். அவரே ஒத்துக்கொள்கிறார்: எந்த ஒரு விடயமாக இருந்தாலும் சீரழியாமல் கட்டுப்படுத்துவதற்கும் அதனூடாக நன்மையடைவதற்கும் சில சட்டதிட்டங்கள், வரையறைகள் தேவைப்படுகிறது. ஒரு நாட்டை எடுத்துக்கொள்வோம். அந்த நாட்டில் வன்முறை, களவு, பாலியல் தொல்லைகள் என்று பல குற்றச்செயல்கள் இருக்கின்றன. அதற்காக அந்த நாடே சரியில்லை, அந்த நாட்டால் நன்மையில்லை என்று சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம். குற்றங்களுக்கு பின்னாலிருப்பது நாடு (மக்களில்லாமல் நாடு இல்லை) அல்ல நாட்டுமக்கள். அதேபோலத்தான் இணையத்தில் நீங்கள் குறிப்பிடும் ஒருசில சீரழிவுகளுக்கு பின்னாலிருப்பது இணையமில்லை, மாறாக அந்த இணையத்தின் பயனர்கள் தான் என்பதை புரிந்துகொள்க. நாட்டில் சில விடயங்களை பயன்படுத்த சில சட்டவரைமுறைகள் இருப்பதுபோல, வீட்டிலும் இணையப்பாவனைக்கான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடியுங்கள்.
இறுதியாக இணையத்தால் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் இளைஞர்கள் சீரழிந்து போகவில்லை, சிறக்கிறார்கள் என்பதைக் கூறி விடைபெறுகிறேன்
பிருந்தன் பங்குபற்றாததால் நான் இதில் பங்க்கு பற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டி விட்டது. சரி வாதத்துக்கு வருவோம்.
இணைய்த்தால் இளையோர் நன்மையடைக்கிறார்கள்... என்று சொல்ல முற்படும் அதே வேளை. இளையவர் தூயவன், தல அவர்கள் கூறிய சில பிழையான கருத்துக்களை சுட்டிக்காட்ட வேண்டிய தேவையும் எனக்கு ஏற்படுகின்றது.
<b>
தல கூறியது:-
எதிரணித் தலைவர் இளைஞன் உழைப்பாளியாய் ஒரு கவிஞனாய் உயர்ந்த இந்த சஞ்சீவ் என்கின்ற இளையோன்... இணையத்தால் உயரவில்லை சொந்த உழைப்பால் போற்றப்படுகிறார்... என்பதுதானே உண்மை...</b>
இணையத்தால் மட்டுமே புலம்பெயர்ந்த இளைஞர்கள் உயர்கிறார்கள் என்றோ உயர்ந்தார்கள் என்றோ நாம் சொல்லவில்லை. இணையம் என்பது இளைஞர்களின் சிந்தனைக்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது என்றே சொல்கிறோம். அவர்களின் உழைப்புக்கு பக்கதுணையாக இருக்கிறது (பக்கதுணையாக இருக்கிற ஏனைய காரணிகளோடு) என்றே சொல்கிறோம். தல அவர்கள் எழுதிய மேற்கண்ட கருத்தின் மூலம் ஒரு உண்மையை தெளிவாக ஒத்துக்கொள்கிறார். சொந்த உழைப்பால் அதாவது சொந்தச் செயற்பாட்டால் தான் ஒருவர் போற்றப்படுகிறார். அப்படியாயின் அதிலிருந்து இன்னொன்றையும் நாம் விடையாகப் பெறலாம். அது யாதெனின், ஒருவர் தனது சொந்த செயற்பாட்டால் தான் தீமையடைகிறார் அல்லது சீரழிந்து போகிறார் என்பதே அது ஆகும். இது இப்படியிருக்க இணையத்தின்மீது உங்கள் பாவங்களை சுமத்துவது எந்தவகை நியாயம் என்று சொல்லுங்கள்.
எதிரணியினரின் வாதங்கள் எப்படியிருக்கிறதென்றால் எல்லாக் குற்றங்களையும் தாம் செய்துவிட்டு கடவுளின் மேல் பழியைப் போடுவதைப் போல் உள்ளது. தமது பிழைகளால் தாம் அனுபவிக்கிற துன்பத்துக்கெல்லாம் "எல்லாம் அவன் செயல்" என்று அடி முட்டாள்தனமாக சொல்லிவிட்டு தம்மை பொம்மைகளாகக் காட்டிக்கொள்ளும் எதிரணியனரை என்னவென்பது?
<b>தல கூறியது:-
தலைவர் அவர்களே...! இளையோருக்கு இந்த இணையங்கள் புதிதாக ஓண்றையும் செய்துவிடவில்லை... வானொலிகளும்,தொலைக்காட்ச்சிகளிலும், பத்திரிகையிலும், நூல்நிலையங்களிலும் நாங்கள் பெற்றுக் கொண்டதை இப்போ இணையத்தில் பெறுகின்றனர்... அதனால் இளைஞருக்கு எந்தப்பயனும் இல்லை வேண்டுமானால் சோம்பேறித்தனத்தை பெற்று சீரளிக்கப் படுகிறார்கள்.......</b>
தல அவர்கள் தனது வாதத்தின் மூலம் தெட்டத் தெளிவாக பல வாக்குமூலங்களை அளித்துள்ளார். இணையம் ஒன்றையும் புதிதாக செய்துவிடவில்லை என்று அவர் குறிப்பிடுவதன் மூலம் ஏற்கனவே சீரழிந்து போய் இருக்கிறவர்களை மேலும் சீரழிக்கவில்லையென்று அல்லது தீமைகளை செய்யவில்லை என்று சொல்கிறார்.
வானொலிகளும், தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும், நூல்நிலையங்களும் ஒன்றாய் உங்கள் கண்முன் திரையில் விரிவது நன்மையில்லையா? - உங்கள் மூளைக் கலன்களின் மீது சத்தியம் செய்யுங்கள்!!! பணம் செலவழித்து எத்தனை பத்திரிகைகளைத்தான் வாங்குவது? அதிலும் எமக்கு அவசியமற்ற தகவல்களையும் சேர்த்து வாங்குகிறோம். ஆனால் இணையத்தில் வேகமாக பத்திரிகைச் செய்திகளைப் பெற்றுக்கொள்கிறோம் - பல்வேறு தரப்பு நியாயங்களையும் அறிந்துகொள்கிறோம் - எமக்கு தேவையானதை மட்டும் தெரிவுசெய்து படிக்கிறோம் - பணச்செலவு மிச்சம் - உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்கிறோம்.
சோம்பேறித்தனத்தை இணையம் தான் இவர்களுக்கு அறிமுகப்படுத்தியது போல சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. தொலைக்காட்சிப்பெட்டிகளின் முன்னிருந்து பெறாத சோம்பேறித்தனமா? ஐயா சோம்பேறித்தனமென்பது உங்கள் உங்கள் மனம், உடல் சார்ந்தது. அதை வழிநடத்தவேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது - இணையத்திடமில்லை. எங்கள் அணியில் நாரதர் தெளிவாக ஒரு கருத்தை முன்வைத்தார். செய்வதெல்லாம் செய்திட்டு "அவனன்றி ஓரணுவும் அசையாது" என்று கல்லை நோக்கி கைகாட்டுவீர்கள் - ஏனென்றால் கல் திருப்பிக் கதைக்காது என்கிற நம்பிக்கையில்.
<b>தூயவன் கூறியது:-
இதை ஏன் சொல்லுகின்றேன் என்றால் உலகத்தில் உள்ள கட்டுப்பாடற்ற, நினைத்ததைப் பகிரக் கூடிய ஊடகம் என்றால் அது இணையம் தான். இணையத்தினூடாக என்னவென்றாலும் செய்து கொள்ளமுடியும். தொலைக்காட்சி, பத்திரிகைகளில் வெளிவரும் எவ்விதமான நடவடிக்கைகளையும், அந்தந்த நாட்டு அரசாங்கங்களால் கட்டுப்படுத்தவோ, அல்லது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ முடியும். சமீபத்தில் மைக்கல் ஜக்சனின் சகோதரி செய்த அசிங்கமான ஒளிபரப்பால் அவ் தொலைக்காட்சி நிலையத்துக்கு அமெரிக்க அரசாங்கம் விளக்கம் கேட்டது நல்ல சான்று.</b>
தூயவன் சொல்கிறார்.... இணையத்தை எந்த அரசாங்கமும் கட்டுப்படுத்துவது இல்லை... என்ன என்றாலும் வெளியிடலாம்... ஆனால் மற்றய ஊடகங்கள் அப்படி இல்லை. அந்தந்த நாட்டு அரசால் கட்டுப்படுத்த படுகிறது என்கிறார். இப்படி கூறுவதன் மூலம் மற்றய ஊடகங்களை விட இணையம் இளையோரை சீரழிக்கிறது என்று கூற வருகிறார். அது தவறானது.... மற்றய ஊடகங்கள் போலவே இணையமும் கட்டுப்படுத்தப்படுகின்றன... உதாரணமாக அரபு நாடுகளில் பாலியல் சம்பந்தமான தளங்களுக்கு தடை இருக்கிறது. ஏன் தமிழ் நாட்டிலும் பாலியல் தளங்களை தடை செய்ய நடவெடிக்கை எடுக்கவுள்ளார்கள் ( ஆதாரமில்லாத செய்தி என்று சொல்ல வேண்டாம். அண்மையில் ஜெயா கூறியது தான் )
மிக அண்மையில் GOOGLE க்கும் சீனா நாட்டுக்கும் ஒரு கருத்து வேறு பாடு பற்றி அனேகமானோர் கேள்விபட்டு இருக்கலாம். இதை விட அனேகமான நாடுகளில்.. ஒருவரின் இணைய நடவடிக்கைகள்.. அந்த நாட்டு பொலீசாரினால் சேகரிக்கப்பட்டு.. கோப்பாக பேணப்படுகின்றன. எப்போது அவர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறாரோ... அப்போது அவரை பிடிப்பதற்கு அவை வழிவகுக்கும். ஆகவே தூயவன் சொல்வது போல மற்றய ஊடகங்கள் கட்டுப்படுத்த படுகின்றன.. இணையம் கட்டுபடுத்த படுவதில்லை என்பது தவறானது.
<b>தூயவன் கூறியது :-
ஆனால் இணையம் என்பது கட்டாக்காலி போன்றது. கட்டுப்பாடுகள் இல்லாத எதுவுமே, ஒழுங்கான வரையறைக்குள் அடங்காது. உலகில் உள்ள பல லட்சம் தளங்களைக் கட்டுப்படுத்தவோ, அல்லது ஒவ்வொரு நபர்களின் தனிப்பட்ட மடல்களைப் பிரித்துப் பார்ப்பதோ முடியாத காரியம் </b>
அப்படி சொல்ல முடியாது. ஒரு தளத்தை ஒரு நாட்டில் தடை செய்தால். அது அந்த நாட்டில் வேலை செய்யாது. அப்படி செய்ய முடியும். ஒரு நாட்டில் உள்ள கருத்துக்கு எதிரான தகவல்களை தேடி பெற முடியாது செய்யவேண்டும் என்று அரசு விரும்பினால். Google போன்ற தேடல் தளங்களுடன் பேசி அதை செய்து கொள்ளலாம். அயிரக்கணக்கான மடல்களை பிரித்துபடிப்பது கடினம் தான். ஆனால் ஒரு வேலை தளத்தில் தனி மடல் பார்த்தால்.. அல்லது அனுப்பினால்.. அதை மேலதிகாரிகள் பார்வையிடலாம். உங்களது இணைய புரொவீடர்களால் உங்கள் தனிமடல்கள் பார்வையிடப்படலாம். எல்லா தனிமடல்களையும் பார்ப்பது நேரவிரயம் தான். தெரிவு செய்யபட்ட மடல்களை மட்டுமே. அவ்வாறு மடல்களை தெரிவு செய்வதற்கும் சில முறைகளை கையாளுகிறார்கள்.
விஸ்ணு கூறியது:-
சீரழிவால் தான் MSN சாட் தளம் பொது அரட்டையை நிறுத்தி இருப்பதாக எங்கே சொல்லப்பட்டது?? எம் எஸ் என் மஸெஞ்சர்கள் எப்போதுதடைசெய்ய போகிறார்கள்... அல்லது புதிதாக ஒரு வேர்ஸனை கொண்டுவரப்போகிறார்களாமா???
<b>அதுக்கு தூயவன் கூறியது:-
எம்எஸ்என் தனது பகிரங்க அரட்டை அறையை மூடியதற்கு அங்கு சில பாலியல் துஸ்பிரயோக விடயங்கள் பரிமாறப்படுவதால் தான் அது நிறுத்தப்படுவதாகவும் மைக்ரோ சொவ் விளக்கம் கொடுத்திருந்தது. எனவே விஸ்ணு அவர்களே நீங்கள் சொன்னது போல புது பதிப்பு(வேசன்) கொண்டு வருவதற்காக இருந்தால் 2 வருடமாக அது முடக்கப்பட்டிருக்கத் தேவையில்லையே! புது பதிப்பை முடக்கப்படாமல் தான் இணைப்பார்களே தவிர இப்படி நிரந்தரமாக நிறுத்தி விட்டல்ல. எனவே அதைப் புூசி மொழுகுவது ஏற்புடையதாகத் தெரியவில்லை. </b>
தயவு செய்து கருத்துக்களை வடிவாக வாசியுங்கள். எம் எஸ் என் சாட் தளம் வேறு, எம் எஸ் என் மஸெஞ்சர் வேறு. சாட் தளத்தை பாலியல் பரிமாற்றங்கள் காரணமாக மூடிய மைக்ரோ சொப்ற்... ஏன் மஸெஞ்சர்களை மூடாமல் புதிய புதிய வேர்சனை அறிமுகம் செய்கிறது. இதுதான் விஸ்ணு கூறியது. தூயவனுக்கு இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மசெஞ்சர்கள் மூலம் பாலியல் துஸ்பிரயோகம் நடைபெறவில்லையா?? உண்மையில் பார்த்தால் மெஸெஞ்சர்ளில் தான் இதற்கான வாய்ப்புகள் அதிகம் ( வீடியோ வசதியை இங்கே சொல்லாம் )
<b>தூயவன் கூறியது:-
தேசியத் தலைவர் போராட்டத்தில் குதித்தபோதோ, அல்லது இராணுவ தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளுவதற்கோ இணையத்தைப் பாவித்தனர் என்பது எவ்வளவு பெரிய ஏமாற்றுத்தனம். ஜயா!! ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். இணைய ஊடகம் என்று வந்தது எல்லாம் இந்த சமாதானகாலத்திற்கு பிற்பட்டகாலத்தில் தான். நீங்கள் வேணுமென்றால் மறந்திருக்கலாம். யுத்தம் நடந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இணையப் பாவனையைக் கொண்டிருக்கவில்லை.
புதினமாக இருக்கட்டும், சங்கிதியாக இருக்கட்டும் அவை கூட இந்த சமாதான கால ஒப்பந்த்தின் பின்னரான வெளியீடுகளே!!இணையத்திற்கு முன்பெல்லாம் தேசியம் வளரவில்லையா? </b>
நன்றாக சொன்னீர்கள்... எமதணியினர் ஏன் இணையத்தால் மட்டுமா இளையோர் கெட்டார்கள்.. தொலைகாட்சி, இன்னும் மற்றும் ஊடகங்களால் அவர்கள் கெடவில்லையா என்று சொன்ன போது நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை பாருங்கள்...
<b>தூயவன் கூறியது:-
நாம் விவாதிப்பது இளைய தமிழ்சமுதாயத்துக்கு இணையம் செய்ய பாதிப்பை மட்டும் தான்.அவற்றின் குற்றத்தை வேணுமென்றால் உங்களுக்காக பிரிதொரு விவாதத்தில் விவாதிப்போமே!!!</b>
அது போலத்தான்.... தூயவன் இணையம் இல்லாத காலங்களில் தேசியம் வளரவில்லை என்று யார் சொன்னது?? இப்போது இணையப்பயன்பாடு தேசியத்தின் வளர்ச்சியில் இன்னும் ஒரு தோள் குடுத்து இருக்கிறது... என்று தான் நாம் கூறுகிறோம்...
<b>தூயவன் கூறியது :-
யாழ்பாணவீதி ஒன்றில் போகின்றோம். வழியில் கல் ஒன்று காலில் தட்டி விட்டது. நாம் உடனே கால் விரலை வெட்டிவிடுவோம். ஏனென்றால் ஏய்தவன் இருக்க அம்பை நோகலாமா? கல் வழியில் பேசாமல் தானே இருந்தது. நாம் தானே போய் மோதினோம். </b>
யாழ் வீதியில் வெறு வேலையாக அவசரமாக போகும் போது எதிரே இருக்கும் கல்லில் நாம் கவனிக்காமல் தான் மோதுகிறோம் தூயவன். இதில் நான் சொல்ல வருவது 2 விடயம்... வேறு வெலையாக போகும் போது தான் நமக்கு குறுக்கே கல் இருக்கிறது. நாம் கவனிக்காமல் தான் கல்லில் மோதுகிறோம். யாரும் காலையில் எழுந்து யாழ் வீதில கல் இருக்காம் தூயவன் சொன்னவர்.. அதில மோதுவம் என்று போவதில்லை. வேறு வேலையாக செல்லும் போது குறுக்கே வருவது அது.
ஆனால்.... இணையத்தில் ஆபாசத்தளங்கள் கணணியை இயக்கி இணையத்துக்குள் பாடசாலை ஒப்படை செய்ய போகும் போது தானாக வருவதில்லை. இளையோர்கள் தாமாகவே அங்கே போகிறார்கள். அப்படி இல்லை தாமாகவே விளம்பரங்கள் தோன்றுகின்றன என்று யாரோ சொன்ன நினைவு. நீங்கள் முதலில் அப்படியான தளங்களுக்கு போய் இருந்தால் தான் அப்படியான விளம்பரங்கள் தோன்றும். அல்லது ஆபாச தளங்களின் உறவு தளங்களுக்கு போனால் தான் அப்படியான கற்கள் உங்களுக்கு தோன்றும். அதை விட ஆபாசங்களை தடை செய்ய கணணிகளில் முடியும் . அப்படியான விடயங்களை மேற்கொண்டு அப்படியான கற்களை நீங்கள் அப்புறப்படுத்தலாம். ஆகவே தூயவன் நாரதர் சொல்ல நினைத்தது..... இணையத்தில் கல் தானாக எமது முன் தோன்றுவதில்லை... யாழ் வீதி மாதிரி. நாமாக தான் தேடி போகிறோம். இணையத்தில் சடப்பொருட்கள் இல்லாத நாம் தான் ஆபாசங்களை.... சீர்கேடுகளை தேடிப்போகிறோம். இப்போது நாரதர் கூறியதை பாருங்கள் உங்களுக்கு சரியாக தோன்றும்.
நாரதர் கூறியது:-
அந்த ஊடகத்தை அதாவது ஒரு சடப் பொருளை எவ்வாறு நாம் இங்கே சீரழிப்பதற்கான காரணி ஆக்க முடியும்?எப்படி அது எம்மைச் சீரழிகிறது என்று கூற முடியும்?எய்தவன் இருக்க அம்பை நோகலாமோ?
இங்கே எய்தவன்.. தானாக சீர்கேடுகளை தேடும் இளையவன். ஆகவே இணையம் சீரழிக்கவில்லை. கெடுகிறேன் பந்தயம்பிடி என்று திரியும் இளையவர்கள் தான் தாமாகவே கெட்டு போகிறார்கள். இணையத்தில் அறிவு பசியை போக்குபவர்கள் பயன் பெற்று மேலே சென்று கொண்டு தான் இருக்கிறார்கள்.
<b>தூயவன் கூறியது:-
நெறிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் கருதுகின்றனர். அதனால் வீடுகளுக்கான இணைய இணைப்புக்கு அனுமதி அளிக்கவில்லை </b>
தூயவன் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். எதிர் வரும் காலங்களிலும் இப்படி இணையத்தை விடுதலைப்புலிகள் தடை செய்ய போவதில்லை. தேசியத்தை வளர்க்கும் தளங்கள் எத்தனை ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.. என்பது உங்களுக்கு தெரியாதா?? புலிகளின் குரல் முதல்.. எத்தனையோ தேசிய தகவல்களை பெறக்கூடிய இணையத்தை ஈழத்தில் பார்க்க முடியாமல் போகுமா என்ன?? ஒரு புல நாட்டில்.. அந்த நாட்டு கொள்கைக்கு எதிரான தளங்கள் இயங்குவதை தடை செய்யலாம். ( உதாரணமாக அரபு நாடுகளில் ஆபாசத்தளங்களுக்கு தடை ) அதே போல ஈழத்தில் அப்படியான வசதி கிடைக்கும் போதுநிட்சயமாக தேசி பண்பாட்டுக்கு மீறியவை தணிக்கை செய்யப்பட்டு.... இணைய பயன் பாடு கிடைக்கும்.
<b>தல கூறியது:-
ஆனாலும் எங்கும் அலைவதற்கு அவசியமில்லாமல் முதியவர்களிற்கு இணையம் உதவியும் செய்யலாம்.... உடல் தளர்ந்து நடமாட கடினமான முதியவர்களால் ஒரே இடத்தில் இருந்து பெறப்படும் தகவல்களானது அவர்களிற்கு உதவியும் ஆகும்... </b>
ஆக தல சொன்னதிலிருந்து மிகமுக்குியமான ஒரு விடயத்தை நாம் விடையாகப் பெறமுடியும். உடல் தளர்ந்து நடமாட கடினமான முதியவர்களுக்கு நன்மைபுரிகிறது இணையம் என்கிறார். ஆகவே, அதேபோல உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கு இணையம் மாபெரும் துணையாக இருக்கிறது என்பதை எதிரணியினர் ஏற்றுக்கொள்கிறார்கள்.
<b>
தல கூறியது:-
வேண்டுமானால் இணைய ஊடக தொழில் நுட்பங்கள் ஒரு வளர்ந்த முதிர்ந்த புலம்பெயர் வியாபாரிக்கு உதவலாம், தொழில் உதவியாளருக்கு, உத்தியோகத்தர்களுக்கு அல்லது பொறியியலாளருக்கு உதவுகிறது.... அதனால் வளர்ந்துவரும் இளைஞன் பயன் அடைகிறார்களா எண்றால் இல்லை என்பதே பதிலாக வருகிறது......</b>
இந்த ஆண்டுக்குரிய மிகப்பெரிய நகைச்சுவை (சிறந்த நகைச்சுவை 2006). அதென்ன முதிர்ந்த வியாபாரி? முதிர்ந்த வியாபாரி இளைஞராக இருக்க முடியாதா? - தொழில் உதவியாளர்களும், பணியாளர்களும், பொறியியலாளர்களும் இளைஞர்களாக இருக்க முடியாதா? -இவர்களின் தொழில்ரீதியான செயற்பாடுகளுக்கு இணையம் தன்னாலான பங்களிப்பை செய்யவில்லையா?
<b>தல கூறியது:-
புலம்பெயர் நாட்டில் புலம் பெயர்ந்ததால் கணனி அறிவற்ற பெற்றோர் அல்லது இணைய அறிவில் போதிய தகமை இல்லாத பெற்றோராய் இருப்பவர்களால் பிள்ளைகளின் நடவடிக்கைகள் அறியப்படாமலேயே இருக்கிறது.... இது புலம் பெயர் இளைஞர் இணைய உலாவில் என்ன செய்கிறாய் எண்று கேள்வி கேட்கப்படாதவர்களாய் உலாவர உதவுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை..... இது ஒரு கட்டாக்காலி மாட்டின் நிலைமைக்கு ஒப்பானது.... அவர்களால்(இளையோரால்) எங்கு வேண்டுமானாலும் மேயலாம்... அசைபோடலாம்.... எது வேண்டுமானாலும் செய்யலாம்....</b>
புலம்பெயர்ந்ததால் புலம்பெயர்ந்த நாடுகளில் வாசிக்கும் பெற்றோர்களுக்கு அறிவில்லையா? நல்ல கண்டுபிடிப்பு. ஐயா நடுவர் அவர்களே, சிற்றுந்து ஓட்டத் தெரியாத பெற்றோர்கள் நிறைய பேர் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கிறார்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள். அவர்களுக்கு புலம்பெயர் சிற்றுந்து ஓட்டுனருக்கான விதிமுறைகள் தெரியாது தான். ஆனாலும் சிற்றுந்தில் பயணிக்கும் போது "கவனமா ஓட்டு தம்பி", "பார்த்துப் போ ராசா", "சிவப்பு விழுந்திட்டு", "வேகத்த கொஞ்சம் குறை" போன்ற பல அறிவுரைகளைக் கேட்கலாம். ஆக ஆபத்துகள் இருக்குமிடத்து அறிவுரைகளையும் கண்காணிப்புகளையும் பெற்றோர்கள் செய்யட்டும், செய்யத் தவறின் அது இணையத்தின் தவறல்ல. கடவுள் சிலையில் தலையைக் கொண்டு போய் முட்டினாலும் ஆபத்துத்தான்.
<b>தல கூறியது:-
இளைஞருக்கு உதவாத அல்லது உதவுவதாய் சொல்லப்படும் இணையம்.... இளையோரை சோம்பேறிகள் ஆக்குகின்றது நடுவர் அவர்களே.....!.. ஊர் எல்லாம் திரிந்து ஆசிரியர்கள் நூல் நிலையங்கள் எல்லாம் அலைந்து பெறவேண்டிய இந்த தகவல்கள் விரல்நுணியில் பெறப்படுவதாலும்... வெட்டி ஒட்டுவதாலும்... படித்தபாடம் மனதில் நிற்பதும் இல்லை... இலகுவாய் பெற்ற தகவலின் பெறுமதி தெரிவதும் இல்லை... அதுவே அந்த இளைஞனைச் சீரளிக்கிறது... புதிதாய் அந்த இளைஞன் தன்னம்பிக்கையை வளர்க்கவில்லை இணையத்தை நம்பியே வாழ்க்கை நடாத்தி சீரளிகிறான்....!</b>
புத்தகத்தில வெட்டி ஒட்டினால் கண்டுபிடிப்பது கடினம். இணையத்தில் வெட்டி ஒட்டினால் கண்டுபிடிப்பது மிக இலகு. வேகமாகவும், நேரம் செலவளிக்காமலும் தகவல்களையும் பயனுள்ள விடயங்களையும் பெற்றுக்கொள்வது தவறு என்கிறீர்களா? படித்தபாடம் மனதில் நிற்பதற்கு அது எவ்வளவு வேகமாக கிடைக்கிறது என்பது முக்கியமில்லை. பாடம் பிடித்ததாக இருக்குவேண்டும். படிக்கவேண்டும் என்கிற எண்ணம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்குவேண்டும். அப்பதான் பாடம் மனதில் நிற்கும். இலகுவாகக் கிடைப்பது உங்களுக்கு பொறுக்கவில்லையா? அப்படியென்றால் எதையும் சிக்கலானதாகவும், சிரமப்பட்டதாகவும் செய்யத்தான் நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? தன்நம்பிக்கையை இணையம் வளர்க்கவில்லை என்று சும்மா மேலோட்டமாக சொன்னால் எப்படி? பக்கத்தில் இருந்து பரீட்சை எழுதும் நண்பனின் திறமையில் நம்பிக்கை வைத்து பரீட்சை எழுதுகிற இளைஞர்கள் போன்றவர்கள் எப்பொழுதும் அப்படித்தான் இருப்பார்கள். இணையம் தன்நம்பிக்கையை வளர்க்கவில்லை என்றுதானே சொன்னீர்கள். தன்நம்பிக்கையை இல்லாமல் செய்கிறது என்று சொல்லாதவரையில் சீரழிந்துபோகவில்லை என்பதாக உறுதிப்படுத்திக்கொள்ளமுடியும்.
<b>தல கூறியது:-
நேரங்களைச் செலவளிக்காமல் வினாடிகளில் கல்வித்தகவல்களைப் பெற்ற மாணவர், மிகுதி நேரங்களை வீணாகச் செலவளிக்கப் புறப்படுகிறார்கள்... குறிக்கோள் இல்லாத பயணங்களை ஆரம்பிக்கிறார்கள்...... இதோடு ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்......
சும்மா இருக்கும் மனமே சாத்தானின் உறைவிடம்... எண்ற வகையில் அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்கு ஒவ்வாத நடவடிக்கைகளில் ஈடுபட வளிவகுத்தது இணையங்களே....! அவர்களைச் சீரளிக்கிறது... </b>
சித்தர் தல அவர்களே நேரங்களை செலவளிக்காமல் கல்வித்தகவல்களை வேகமாக மாணவர்களால் பெற்றுக்கொள்ள முடிகிறது என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி. மிகுதி இருக்கிற நேரங்களில் குறிக்கோளில்லாத பயணங்களைத் தொடர்கிறார்கள் என்றால் அது அவர்களின் இயல்பான குணாம்சமே. அப்படியென்றால் வேகமாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்வது தவறு என்கிறீர்களா?
<b>தல கூறியது:-
தனியார் கல்வி நிறுவனங்கள் மேலதிக வகுப்புக்களின் முடிவில்.... மதகுகளில் இருந்து அல்லது விளையாட்டுத் திடல்களில், தோழிவீடுகளில், உறவாடி விளையாடி தங்களின் பொழுது போக்கி அளவளாவிக் கூடிக்களித்த இளைஞர் புலம் பெயர் நாட்டில் தனியான இணைய சற் ரூம் களில். காலத்தைப் போக்குகிறார்கள். மதகுகளில், தோழிவீடுகளில் இருந்த இளைஞர் பெற்ற பயன் சற்றூம்கள் தருவதில்லை அங்கு அவர்கள் பெற்ற வாழ்வாதாரத்துடன் கூடிய புரிந்துணர்வை, தலைமைப்பண்பை, நட்புணர்வை மனிதநேயத்தை, இணையங்கள் தருவதில்லை அதவிட வக்கிரங்களையே தோற்றுவிக்கிறது என்பதுதான் உண்மை. நேரிடையாய் கண்ணியவானாய் இருக்கும் இளைஞர்கள் முகம் தெரியாமல் கண்ணியமாய் இருப்பதிலை என்பதை மறுக்க முடியுமா என்ன...???? </b>
கண்ணியவான தல அவர்களே, முகம் தெரியாத நீங்கள் கண்ணியமில்லாமலா இருக்கிறீர்கள்? எத்தனை தடவை தான் நாம் சொல்வது வக்கிரங்கள் இணையத்தால் தோன்றவில்லை, உங்கள் மனதிலிருந்து தோன்றுகின்றன என்று? கனடாவில், யேர்மனியில், இலண்டனில், பிரான்சில் என்று பல்வேறு நாடுகளில் இருக்கும் இளைஞர்களோடு புரிந்துணர்வை வளர்த்துக்கொள்ள இணையம் எப்படித் துணைபுரிகின்றது என்பதை யாழ்களமூடாக உங்களால் அறிந்துகொள்ளமுடியவில்லையா? நட்புணர்வை வளர்த்துக்கொள்வதில் எம்எஸ்என் துரிததூதர் போன்றவை எப்படியான பங்கை ஆற்றுகின்றன என்பதை நான் சொல்லித் தான் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய நிலையில் இல்லை என்று நினைக்கிறேன். வெளி உலகத்தில நடப்பவை எல்லாவற்றையும் இணையமும் செய்யவேண்டும் என்று எதற்கு எதிர்பார்க்கிறீர்கள்? தமது பள்ளி மற்றும் தொழில் சார் தேவைகளுக்கும் பொழுதுபோக்கு விடயங்களுக்கும் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். அதனால் நன்மையும் அடைகிறார்கள். அவர்கள் ஒன்றும் நாள்முழுக்க இணையத்துக்குள் குடும்பம் நடத்தவில்லை.
<b>தல கூறியது:-
எனது அணியின் உறுப்பினர் ப்ரியசகி சொன்னது போல இணையம் அந்த இளைஞருக்கு ஒரு போதைப் பொருள் ஆகிவிட்டது.... விடுபட முடியாமல் தவிக்கிறார்கள்... எப்போதும் அதன் சிந்தனையாய் அலையும் துன்பத்துக்கும் உள்ளாகிறான்... இந்த துன்பம் இனையத்தால் வந்ததே...
இது இளையசமுதாயத்தின் சீரளிவின் ஆரம்பம்தான்... இன்னும் முடியவில்லை தொடர்கிறது...... </b>
சமூகச் சிந்தனையாளர் தல அவர்களே உங்கள் அதிசயமான சமூக ஆய்வுக்கு நன்றி. எதை நாம் அதிகம் நேசிக்கிறோமோ அதற்கு நாம் அடிமைப்பட்டுப்போகிறோம். "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே". இணையம் இளைஞருக்கு போதைப் பொருள் ஆகிவிட்டது என்று சொல்கிறீர்கள். எதனால் இணையம் போதைப்பொருள் ஆகிறது? அதிகமாக அதில் அவனை ஈர்க்கிற ஒரு சக்தி இருக்கிறது. இதன் பொருள் என்ன? அவன் இயல்பாய் இருப்பதற்கு தேவையான ஒரு சக்தி வெளியுலகத்தில் அவனுக்கு குறைந்து போயுள்ளது என்பது தானே? வெளியுலகில் அவன் இயல்பாய் இருப்பதற்கான சூழல் இருந்திருக்குமானால் இணையத்துக்குள் மூழ்கிப் போவதற்கு அவனுக்கு என்ன தேவையிருக்கிறது? ஆக தவறுகள் புறச்சூழலால் நிகழ்கிறதே ஒழிய இணையத்தால் அல்ல.
<b>தல கூறியது:-
இராவணன் அண்ணா வெட்டிய வெட்டுக்கள் சொல்லும்..... இளையோர் கட்டுப்பாடானவர்களா எண்று... அவர்களோடு சேர்வதால் வெட்டு வாங்கிய முதியோரைக் கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள் இளையோரைப்பற்றி... ஆனி 29, 2005 11:50 am தொடங்கிவைக்கப்பட்டு இதுவரை 21 பக்கங்கள் தாண்டி விட்ட கருத்துக்களில் மாற்றம் பகுதி சொல்லும்... யாழில் நீங்கள் செய்யும் குழப்படிகள். ... இணையத்தில் அதுவும் யாழில் நீங்கள் யாரும் கெட்டுப்போகக் கூடாது எண்ற நல்ல நோக்கில் அமைக்கப்பட்ட மட்டுறுத்தினர்கள் சொல்வார்கள் இளையோரைக்காக்க எவ்வளவு கடினப்படுகிறோம் எண்று.....</b>
தல(வெறும்) அவர்களே இராவணன் வெட்டிய வெட்டுக்களில் தெரிவது இணையத்தின் சீரழிவுகள் அல்ல - ஒவ்வொரு களஉறுப்பினர்களின் தனப்பட்ட பண்பு. இணையமில்லாமல் ஒரு கருத்தாடலை ஒரு அறையில் வைத்து நடத்தினால் இதைவிட மோசமான விளைவுகளை (வன்முறைகள், ஆயுதங்களுடனான சண்டைகள்) சந்திக்க நேரிடும் என்பதை உணர்க. அப்படியான பாதிப்புகளிலிருந்து காத்து எதுவித இரத்தமும், காயமும் இன்றி ஒரு கருத்தாடலை நடத்த துணைபுரிகிறது என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
<b>தல கூறியது:-
இணைய உலாவுக்காய் வரும் இளையோர் தறிகெடாமல் இருக்க தடை போட்டு மட்டுறுத்தினர்களை நிறுத்தி சீரளியாமல் தடுத்த, தடுக்கும், யாழ்கள நிறுவுனர் மோகன் அண்ணாவிற்கு எமது அணிசார்பாக நண்றிகள்....!</b>
மீண்டும் மீண்டும் வாக்குமூலங்களை அளித்து எமது அணியின் நியாயத்தை வலுப்படுத்த உதவிபுரிந்த எதிரணி நண்பர் தல அவர்களுக்கு எமது மனப்பூர்வமான நன்றிகள். அவரே ஒத்துக்கொள்கிறார்: எந்த ஒரு விடயமாக இருந்தாலும் சீரழியாமல் கட்டுப்படுத்துவதற்கும் அதனூடாக நன்மையடைவதற்கும் சில சட்டதிட்டங்கள், வரையறைகள் தேவைப்படுகிறது. ஒரு நாட்டை எடுத்துக்கொள்வோம். அந்த நாட்டில் வன்முறை, களவு, பாலியல் தொல்லைகள் என்று பல குற்றச்செயல்கள் இருக்கின்றன. அதற்காக அந்த நாடே சரியில்லை, அந்த நாட்டால் நன்மையில்லை என்று சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம். குற்றங்களுக்கு பின்னாலிருப்பது நாடு (மக்களில்லாமல் நாடு இல்லை) அல்ல நாட்டுமக்கள். அதேபோலத்தான் இணையத்தில் நீங்கள் குறிப்பிடும் ஒருசில சீரழிவுகளுக்கு பின்னாலிருப்பது இணையமில்லை, மாறாக அந்த இணையத்தின் பயனர்கள் தான் என்பதை புரிந்துகொள்க. நாட்டில் சில விடயங்களை பயன்படுத்த சில சட்டவரைமுறைகள் இருப்பதுபோல, வீட்டிலும் இணையப்பாவனைக்கான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடியுங்கள்.
இறுதியாக இணையத்தால் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் இளைஞர்கள் சீரழிந்து போகவில்லை, சிறக்கிறார்கள் என்பதைக் கூறி விடைபெறுகிறேன்
<b> .. .. !!</b>

