02-07-2006, 09:44 AM
<span style='color:darkred'><b>ஜெனீவாவை சதுரங்க மேடையாக நோக்கக் கூடாது</b>
போர் நிறுத்த உடன்படிக்கையை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்வதற்கான பேச்சுவார்த்தையை எந்த நாட்டில் நடத்துவதென்பது குறித்து முன்னர் முரண்பட்ட அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் அண்மைய இலங்கை விஜயத்தின்போது ஜெனீவாவில் சந்திப்பதற்கு இணங்கிக் கொண்ட போதிலும், இப்போது புதியதொரு சச்சரவு மூண்டிருக்கிறது. பேச்சுவார்த்தைக்கான திகதி தொடர்பானதே அது. பெப்ரவரி 15 இல் ஜெனீவாவில் பேசுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு விடுதலைப் புலிகள் தயாரில்லை என்று கூறப்படுகிறது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் கிழக்கில் கடத்தப்பட்ட சம்பவங்களின் பின்னரான நிலைவரங்கள் காரணமாக பெப்ரவரி நடுப்பகுதியில் ஜெனீவாவுக்கு செல்லக் கூடிய நிலையில் தாங்கள் இல்லை என்று கூறும் விடுதலைப் புலிகள், மாத இறுதியிலேயே பேச்சுவார்த்தை நடத்தப்படுவதை விரும்புவதாகவும் தெரிய வந்திருக்கிறது. இதன் விளைவாக திகதி தொடர்பில் இரு தரப்பினருக்குமிடையே தோன்றக்கூடிய முரண்பாடுகள் பேச்சுவார்த்தையை தாமதிக்கச் செய்து விடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.
இந்நிலையில், பேச்சுவார்த்தை தொடர்பில் கொழும்பு ஊடகங்களில் வெளியாகும் சில தகவல்கள் சுவாரஸ்யமானவையாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. ஜெனீவாவுக்கு அரசாங்கத்தினால் அனுப்பப்படவிருக்கும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு அனுபவம் குறைந்ததாக இருப்பதால் அதன் உறுப்பினர்களுக்கு பேச்சுவார்த்தைகளின் அடிப்படைகள் குறித்து விளக்கமளிப்பதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.
விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் தலைமையிலான குழுவுடன் ஒப்பிடும்போது, அரசாங்கத் தூதுக் குழு சிக்கலான விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான முதிர்ச்சியைக் கொண்டதாக இல்லை என்றும் அதன் உறுப்பினர்களில் எவருமே விடுதலைப் புலிகளுடன் முன்னர் நடத்தப்பட்ட எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையிலோ அல்லது தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டங்களிலோ பங்குபற்றியவர்கள் அல்ல என்றும் அத்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி செயலகத்தின் அனுசரணையுடன் உள்நாட்டு நிபுணர்களினால் நடத்தப்படவிருக்கும் பயிற்சி வகுப்புகளில் தென்னாபிரிக்கா, வட அயர்லாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச நிபுணர்களின் உதவிகளையும் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.
கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்று நேற்று திங்கட்கிழமை அதன் ஆசிரிய தலையங்கத்தில் கலாநிதி பாலசிங்கத்தின் பேச்சுவார்த்தை ஆற்றல்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறது. கொழும்பு அரசாங்கங்களின் பேச்சுவார்த்தைக் குழுக்களில் உறுப்பினர்கள் அடிக்கடி மாற்றப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறார்கள். ஆனால், விடுதலைப் புலிகள் நடத்திய அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் ஆரம்பம் முதலிருந்தே கலாநிதி பாலசிங்கம் பங்கேற்று வந்திருக்கிறார் என்று தெரிவித்திருக்கும் அந்த ஆங்கிலப்பத்திரிகை, அவர் எஸ்கிமோவர்களுக்கே பனியை விற்கக் கூடியவர் என்று வர்ணித்திருக்கிறது.
ஆற்றலும் அனுபவமும் கொண்டவர்களையே பேச்சுவார்த்தைக்கு அனுப்ப வேண்டுமென்பதால், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்க காலத்தில் விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அரசாங்கக் குழுவுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ஜி.எல். பீரிஸை தற்போதைய அரசாங்கத்தின் பக்கம் இழுத்தெடுத்து ஜெனீவாவுக்கு அனுப்பிவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஒரு கட்டத்தில் பேசப்பட்டது. ஆனால், அரசாங்கத்தில் இணையப் போவதில்லையென்றும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கொண்டே சமாதான முயற்சிகளை ஆதரிக்கப் போவதாகவும் பேராசிரியர் பீரிஸ் அறிவித்ததையடுத்து அந்த ஊகங்கள் முடிவுக்கு வந்தன.
எது எவ்வாறிருப்பினும், ஜெனீவாவுக்கு அனுப்பப்படவிருக்கும் அரசாங்கத் தூதுக் குழுவுக்கு பேச்சுவார்த்தைகளை எவ்வாறு நடத்துவதென்பது குறித்து விளக்கம் அளிப்பதற்கான பயிற்சி ஏற்பாடுகள் முக்கியமான ஒரு கேள்வியைக் கிளப்புகின்றன. பேச்சுவார்த்தைகளை மதிநுட்பத்துடனும் அனுபவ முதிர்ச்சியுடனும் நடத்தக் கூடிய ஒரு குழுவினால் இலங்கையை அது இன்று எதிர்நோக்கும் பாரிய நெருக்கடியில் இருந்து மீட்டுவிட முடியுமா? சதுரங்க விளையாட்டுப் போட்டிக்கு அனுப்பப்படுவோருக்கு பயிற்சியளிக்கும் பாணியில் அல்லவா இந்த விவகாரத்தை அரசாங்கம் கையாளப்பார்க்கிறது.
அண்மைக்காலத்தில் தீவிரமடைந்த வன்முறைகளினால் சீர்குலைந்து போயிருக்கும் போர் நிறுத்தத்தைக் காப்பாற்றுவதற்கான ஜெனீவா பேச்சுவார்த்தையே நாடு மீண்டும் முற்றுமுழுதான போருக்குள் தள்ளப்படுவதைத் தடுப்பதற்கான இறுதிச் சந்தர்ப்பமாகும். இச் சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்துவதற்கு சூதும் வாதும் தேவையில்லை. சமாதானம் மீது இதயசுத்தியான அக்கறையே போதுமானதாகும்.
மீண்டும் போர் மூளுவதைத் தடுப் பதற்கு செய்யவேண்டியவை எவை என்பதைத் தெரிந் திருந்தும் அவற்றைச் செய்வதற்கு முயற்சிக்காமல் இருப்பதனாலேயே நிலைவரங்களில் மேம்பாட்டைக் கொண்டு வர முடியாமல் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டால், அதுவொன்றே ஜெனீவா பேச்சு வார்த்தைகளில் உருப் படியான விளைபயன்களை ஏற்படுத்தும்.ஜெனீவா பேச்சுவார்த்தை அரங்கை சதுரங்க ேமடையாக நோக்குவது மேலும் ஆபத்தையே கொண்டுவரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.</span>
<i><b>ஆசிரியர் தலையங்கம்-தினக்குரல் (07/02/06)</b></i>
போர் நிறுத்த உடன்படிக்கையை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்வதற்கான பேச்சுவார்த்தையை எந்த நாட்டில் நடத்துவதென்பது குறித்து முன்னர் முரண்பட்ட அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் அண்மைய இலங்கை விஜயத்தின்போது ஜெனீவாவில் சந்திப்பதற்கு இணங்கிக் கொண்ட போதிலும், இப்போது புதியதொரு சச்சரவு மூண்டிருக்கிறது. பேச்சுவார்த்தைக்கான திகதி தொடர்பானதே அது. பெப்ரவரி 15 இல் ஜெனீவாவில் பேசுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு விடுதலைப் புலிகள் தயாரில்லை என்று கூறப்படுகிறது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் கிழக்கில் கடத்தப்பட்ட சம்பவங்களின் பின்னரான நிலைவரங்கள் காரணமாக பெப்ரவரி நடுப்பகுதியில் ஜெனீவாவுக்கு செல்லக் கூடிய நிலையில் தாங்கள் இல்லை என்று கூறும் விடுதலைப் புலிகள், மாத இறுதியிலேயே பேச்சுவார்த்தை நடத்தப்படுவதை விரும்புவதாகவும் தெரிய வந்திருக்கிறது. இதன் விளைவாக திகதி தொடர்பில் இரு தரப்பினருக்குமிடையே தோன்றக்கூடிய முரண்பாடுகள் பேச்சுவார்த்தையை தாமதிக்கச் செய்து விடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.
இந்நிலையில், பேச்சுவார்த்தை தொடர்பில் கொழும்பு ஊடகங்களில் வெளியாகும் சில தகவல்கள் சுவாரஸ்யமானவையாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. ஜெனீவாவுக்கு அரசாங்கத்தினால் அனுப்பப்படவிருக்கும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு அனுபவம் குறைந்ததாக இருப்பதால் அதன் உறுப்பினர்களுக்கு பேச்சுவார்த்தைகளின் அடிப்படைகள் குறித்து விளக்கமளிப்பதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.
விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் தலைமையிலான குழுவுடன் ஒப்பிடும்போது, அரசாங்கத் தூதுக் குழு சிக்கலான விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான முதிர்ச்சியைக் கொண்டதாக இல்லை என்றும் அதன் உறுப்பினர்களில் எவருமே விடுதலைப் புலிகளுடன் முன்னர் நடத்தப்பட்ட எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையிலோ அல்லது தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டங்களிலோ பங்குபற்றியவர்கள் அல்ல என்றும் அத்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி செயலகத்தின் அனுசரணையுடன் உள்நாட்டு நிபுணர்களினால் நடத்தப்படவிருக்கும் பயிற்சி வகுப்புகளில் தென்னாபிரிக்கா, வட அயர்லாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச நிபுணர்களின் உதவிகளையும் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.
கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்று நேற்று திங்கட்கிழமை அதன் ஆசிரிய தலையங்கத்தில் கலாநிதி பாலசிங்கத்தின் பேச்சுவார்த்தை ஆற்றல்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறது. கொழும்பு அரசாங்கங்களின் பேச்சுவார்த்தைக் குழுக்களில் உறுப்பினர்கள் அடிக்கடி மாற்றப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறார்கள். ஆனால், விடுதலைப் புலிகள் நடத்திய அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் ஆரம்பம் முதலிருந்தே கலாநிதி பாலசிங்கம் பங்கேற்று வந்திருக்கிறார் என்று தெரிவித்திருக்கும் அந்த ஆங்கிலப்பத்திரிகை, அவர் எஸ்கிமோவர்களுக்கே பனியை விற்கக் கூடியவர் என்று வர்ணித்திருக்கிறது.
ஆற்றலும் அனுபவமும் கொண்டவர்களையே பேச்சுவார்த்தைக்கு அனுப்ப வேண்டுமென்பதால், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்க காலத்தில் விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அரசாங்கக் குழுவுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ஜி.எல். பீரிஸை தற்போதைய அரசாங்கத்தின் பக்கம் இழுத்தெடுத்து ஜெனீவாவுக்கு அனுப்பிவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஒரு கட்டத்தில் பேசப்பட்டது. ஆனால், அரசாங்கத்தில் இணையப் போவதில்லையென்றும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கொண்டே சமாதான முயற்சிகளை ஆதரிக்கப் போவதாகவும் பேராசிரியர் பீரிஸ் அறிவித்ததையடுத்து அந்த ஊகங்கள் முடிவுக்கு வந்தன.
எது எவ்வாறிருப்பினும், ஜெனீவாவுக்கு அனுப்பப்படவிருக்கும் அரசாங்கத் தூதுக் குழுவுக்கு பேச்சுவார்த்தைகளை எவ்வாறு நடத்துவதென்பது குறித்து விளக்கம் அளிப்பதற்கான பயிற்சி ஏற்பாடுகள் முக்கியமான ஒரு கேள்வியைக் கிளப்புகின்றன. பேச்சுவார்த்தைகளை மதிநுட்பத்துடனும் அனுபவ முதிர்ச்சியுடனும் நடத்தக் கூடிய ஒரு குழுவினால் இலங்கையை அது இன்று எதிர்நோக்கும் பாரிய நெருக்கடியில் இருந்து மீட்டுவிட முடியுமா? சதுரங்க விளையாட்டுப் போட்டிக்கு அனுப்பப்படுவோருக்கு பயிற்சியளிக்கும் பாணியில் அல்லவா இந்த விவகாரத்தை அரசாங்கம் கையாளப்பார்க்கிறது.
அண்மைக்காலத்தில் தீவிரமடைந்த வன்முறைகளினால் சீர்குலைந்து போயிருக்கும் போர் நிறுத்தத்தைக் காப்பாற்றுவதற்கான ஜெனீவா பேச்சுவார்த்தையே நாடு மீண்டும் முற்றுமுழுதான போருக்குள் தள்ளப்படுவதைத் தடுப்பதற்கான இறுதிச் சந்தர்ப்பமாகும். இச் சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்துவதற்கு சூதும் வாதும் தேவையில்லை. சமாதானம் மீது இதயசுத்தியான அக்கறையே போதுமானதாகும்.
மீண்டும் போர் மூளுவதைத் தடுப் பதற்கு செய்யவேண்டியவை எவை என்பதைத் தெரிந் திருந்தும் அவற்றைச் செய்வதற்கு முயற்சிக்காமல் இருப்பதனாலேயே நிலைவரங்களில் மேம்பாட்டைக் கொண்டு வர முடியாமல் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டால், அதுவொன்றே ஜெனீவா பேச்சு வார்த்தைகளில் உருப் படியான விளைபயன்களை ஏற்படுத்தும்.ஜெனீவா பேச்சுவார்த்தை அரங்கை சதுரங்க ேமடையாக நோக்குவது மேலும் ஆபத்தையே கொண்டுவரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.</span>
<i><b>ஆசிரியர் தலையங்கம்-தினக்குரல் (07/02/06)</b></i>
"
"
"

