02-07-2006, 09:33 AM
<b>ஜெனிவாப் பேச்சுகள் கடுமையாக இருக்கும்
சொல்ஹெய்மின் கருத்து இது</b>
ஜெனிவாப்பேச்சுகள் கடுமையாக இருக்கும் என்கிறார் நோர்வே அனுசரணைக் குழுவின் பொறுப்பாளரும் அந்நாட்டு அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம்.
உத்தேச ஜெனிவாப் பேச்சுகள் தொடர்பாக நோர்வே வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையிலேயே இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் நேற்று எரிக் சொல்ஹெய்ம் அன்டன் பாலசிங்கம் சந்திப்பையடுத்து இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
இந்த அறிக்கையின் முழுவிவரம் வருமாறு:
பெப்ரவரி 22 23ஆம் திகதிகளில் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெறும் பேச்சுகளுக்கு நோர்வே அனுசரணை வழங்கும்.
இலங்கையில் பிணக்கோடு தொடர்புபட்ட தரப்புகளான இலங்கை அரசும் புலிகளும் பெப்ரவரி 22 23இல் ஜெனிவாவில் நடைபெறும் பேச்சுகளுக்கு அனுசரணை வழங்கும்படி நோர்வேயை கேட்டுள்ளன.
2002 பெப்ரவரி 22 ஆம் திகதி கையெழுத்தான யுத்த நிறுத்த உடன்பாட்டின் அமுலாக்கத்தை எப்படி மேம்படச்செய்யலாம் என்பது பற்றி இருதரப்பினரும் கலந்துரையாடுவர்.
மூன்றாண்டு காலத்தில் இத்தகைய உயர்மட்டத்தில் இரு தரப்பினரும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல்தடவையாகும்.
""மோசமடைந்திருக்கும் பாதுகாப்பு நிலைமையை எவ்வாறு சீர்செய்வது என்பது குறித்து உயர்மட்டத்தில் கலந்துரையாட தரப்புகள் இணங்கியிருப்பது மிகச் சாதகமான அம்சமாகும்'' என்கிறார் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம்.
""நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் யுத்த நிறுத்தத்தை அதிலிருந்து விடுவிப்பதற்கான யதார்த்த பூர்வமான தீர்வை தரப்புகள் எட்டுவதற்கு அனுசரணையாளர் என்ற முறையில் நோர்வே தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும்''.
""அமைதி முயற்சிகளை மீண்டும் சாதகமான தடத்துக்கு கொண்டுவரும் திசையில் ஒரு சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க அடியை தரப்புகள் முன்னெடுத்து வைக்கின்றன. அத்தோடு பேச்சுகள் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்''. என்றார் சொல்ஹெய்ம்.
நோர்வே பிரதிநிதிகள் குழுவுக்கு சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் தலைமை வகிப்பார். அக்குழுவில் தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கரும், விடார் ஹெல்கிசனும் இடம்பெறுவர். இலங்கை கண்காணிப்புக்குழுவின் தலைவர் ஹக்ரூப் ஹொக்லண்டும் பிரசன்னமாகியிருப்பார்.
""அமைதி முயற்சிகளுக்கு எப்போதும் சுவிட்ஸர்லாந்து அளித்துவரும் மிகுந்த ஆதரவுப் போக்குக் காரணமாகவே சந்திப்புக்கு ஜெனிவாவை தரப்புகள் தெரிவுசெய்தன'' என்று மேலும் தெரிவித்தார் அமைச்சர் சொல்ஹெய்ம்.
இப்படி அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது
<i><b>தகவல் மூலம்-உதயன்</b></i>
சொல்ஹெய்மின் கருத்து இது</b>
ஜெனிவாப்பேச்சுகள் கடுமையாக இருக்கும் என்கிறார் நோர்வே அனுசரணைக் குழுவின் பொறுப்பாளரும் அந்நாட்டு அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம்.
உத்தேச ஜெனிவாப் பேச்சுகள் தொடர்பாக நோர்வே வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையிலேயே இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் நேற்று எரிக் சொல்ஹெய்ம் அன்டன் பாலசிங்கம் சந்திப்பையடுத்து இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
இந்த அறிக்கையின் முழுவிவரம் வருமாறு:
பெப்ரவரி 22 23ஆம் திகதிகளில் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெறும் பேச்சுகளுக்கு நோர்வே அனுசரணை வழங்கும்.
இலங்கையில் பிணக்கோடு தொடர்புபட்ட தரப்புகளான இலங்கை அரசும் புலிகளும் பெப்ரவரி 22 23இல் ஜெனிவாவில் நடைபெறும் பேச்சுகளுக்கு அனுசரணை வழங்கும்படி நோர்வேயை கேட்டுள்ளன.
2002 பெப்ரவரி 22 ஆம் திகதி கையெழுத்தான யுத்த நிறுத்த உடன்பாட்டின் அமுலாக்கத்தை எப்படி மேம்படச்செய்யலாம் என்பது பற்றி இருதரப்பினரும் கலந்துரையாடுவர்.
மூன்றாண்டு காலத்தில் இத்தகைய உயர்மட்டத்தில் இரு தரப்பினரும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல்தடவையாகும்.
""மோசமடைந்திருக்கும் பாதுகாப்பு நிலைமையை எவ்வாறு சீர்செய்வது என்பது குறித்து உயர்மட்டத்தில் கலந்துரையாட தரப்புகள் இணங்கியிருப்பது மிகச் சாதகமான அம்சமாகும்'' என்கிறார் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம்.
""நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் யுத்த நிறுத்தத்தை அதிலிருந்து விடுவிப்பதற்கான யதார்த்த பூர்வமான தீர்வை தரப்புகள் எட்டுவதற்கு அனுசரணையாளர் என்ற முறையில் நோர்வே தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும்''.
""அமைதி முயற்சிகளை மீண்டும் சாதகமான தடத்துக்கு கொண்டுவரும் திசையில் ஒரு சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க அடியை தரப்புகள் முன்னெடுத்து வைக்கின்றன. அத்தோடு பேச்சுகள் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்''. என்றார் சொல்ஹெய்ம்.
நோர்வே பிரதிநிதிகள் குழுவுக்கு சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் தலைமை வகிப்பார். அக்குழுவில் தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கரும், விடார் ஹெல்கிசனும் இடம்பெறுவர். இலங்கை கண்காணிப்புக்குழுவின் தலைவர் ஹக்ரூப் ஹொக்லண்டும் பிரசன்னமாகியிருப்பார்.
""அமைதி முயற்சிகளுக்கு எப்போதும் சுவிட்ஸர்லாந்து அளித்துவரும் மிகுந்த ஆதரவுப் போக்குக் காரணமாகவே சந்திப்புக்கு ஜெனிவாவை தரப்புகள் தெரிவுசெய்தன'' என்று மேலும் தெரிவித்தார் அமைச்சர் சொல்ஹெய்ம்.
இப்படி அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது
<i><b>தகவல் மூலம்-உதயன்</b></i>
"
"
"

