02-07-2006, 09:25 AM
<b>அரசாங்க பேச்சுக்குழுவிற்கு பயிற்சியளிக்க இந்திய அரசியல் ஆய்வாளர் நாராயணசாமி இன்று கொழும்பு வருகை </b>
ஜெனீவாப் பேச்சுக்களில் பங்கு பற்றும் சிறிலங்கா அரச தரப்புக் குழுவிகருக்கான பயிற்சிகள் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறவுள்ளது. இப்பயிற்சியை வழங்கவுள்ள இந்தியாவின் அரசியல் ஆய்வாளர் நாராயனசாமி இன்று கொழும்பு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேச்சுக்களில் பங்கு கொள்ளும் அரசதரப்பு குழுவினருக்கு உளவியல் பயிற்சிகளை வழங்குவதற்கான பயிற்சியாளர்களின் பட்டியலில் இந்திய அரசியல் ஆய்வாளர் நாராயணசாமி, எஸ்.எஸ்.குணசேகர மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்களும் உள்ளடங்கியுள்ளனார்.
விடுதலைப் புலிகளின் இராஜதந்திர நகர்விற்கு ஈடுகொடுக்க முடியாது வெளிநாட்டு ஆலோசகர்களையும் உள்வாங்கி பேச்சுக்களுக்கு முகம் கொடுக்கும் நிலையில் சிறிலங்கா அரசு இருக்கும்போது இந்தப் பேச்சுப்களில் விடுதலைப்புலிகள் முன்வைக்கும் யோசனைகளுக்கு அரச தரப்பு எந்தளவிற்கு இணங்கும் என்பதில் பலத்த கேள்விகள் எழுவதாக நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனார். அரச தரப்புப் பேச்சுக்குழுவிற்கு ஜே.வி.பி. யினால் பயிற்சிகள் வழங்கப்படுவதானது இவ்வாறான கேள்விகளை மேலும் பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.
பேச்சுக்களின்போது எடுக்கப்படும் தீர்மானங்களை தன்னுடன் தொலைபேசியில் கலந்தாலோசித்தே எடுக்க வேண்டும் என சிறிலங்கா அரசுத் தலைவர் பேச்சுக்குழுவிற்கு ஏற்கனவே அறிவித்திருப்பதானது தமிழ் மக்களின் இயல்பு வாழ்வில் எந்தளவு இதய சுத்தியுடன் சிறிலங்கா அரசு செயற்படுகிறது என்பதை தெளிவாக காட்டுவதாகவும் நோக்கர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
ஜெனீவாப் பேச்சுக்களில் பங்கு பற்றும் சிறிலங்கா அரச தரப்புக் குழுவிகருக்கான பயிற்சிகள் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறவுள்ளது. இப்பயிற்சியை வழங்கவுள்ள இந்தியாவின் அரசியல் ஆய்வாளர் நாராயனசாமி இன்று கொழும்பு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேச்சுக்களில் பங்கு கொள்ளும் அரசதரப்பு குழுவினருக்கு உளவியல் பயிற்சிகளை வழங்குவதற்கான பயிற்சியாளர்களின் பட்டியலில் இந்திய அரசியல் ஆய்வாளர் நாராயணசாமி, எஸ்.எஸ்.குணசேகர மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்களும் உள்ளடங்கியுள்ளனார்.
விடுதலைப் புலிகளின் இராஜதந்திர நகர்விற்கு ஈடுகொடுக்க முடியாது வெளிநாட்டு ஆலோசகர்களையும் உள்வாங்கி பேச்சுக்களுக்கு முகம் கொடுக்கும் நிலையில் சிறிலங்கா அரசு இருக்கும்போது இந்தப் பேச்சுப்களில் விடுதலைப்புலிகள் முன்வைக்கும் யோசனைகளுக்கு அரச தரப்பு எந்தளவிற்கு இணங்கும் என்பதில் பலத்த கேள்விகள் எழுவதாக நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனார். அரச தரப்புப் பேச்சுக்குழுவிற்கு ஜே.வி.பி. யினால் பயிற்சிகள் வழங்கப்படுவதானது இவ்வாறான கேள்விகளை மேலும் பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.
பேச்சுக்களின்போது எடுக்கப்படும் தீர்மானங்களை தன்னுடன் தொலைபேசியில் கலந்தாலோசித்தே எடுக்க வேண்டும் என சிறிலங்கா அரசுத் தலைவர் பேச்சுக்குழுவிற்கு ஏற்கனவே அறிவித்திருப்பதானது தமிழ் மக்களின் இயல்பு வாழ்வில் எந்தளவு இதய சுத்தியுடன் சிறிலங்கா அரசு செயற்படுகிறது என்பதை தெளிவாக காட்டுவதாகவும் நோக்கர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
"

