02-07-2006, 04:39 AM
ukraj Wrote:நான் இந்த களத்தை வெகுநாட்களாக பார்த்து வருகின்றேன். இங்கு பெரும்பாலானவர்கள் பொழுது போக்கவே வருகின்றனர். அவர்கள் பொழுது போக்ககவே தமிழ் தேசியம் தொடர்பாக கருத்தாடுகின்றனர்.
தமிழ்த்தேசியம் தொடர்பாக வேலைத்திட்டங்களை செய்வதில்லை. (சும்மா ரீல் விடவேண்டாமட நாங்கள் வெளியில சொல்வதில்லை என்று). அண்மையில் கள உறவுகளால் பலபக்கங்களில் எழுதப்பட்ட தைபொங்கல் ஒன்றுகூடலுக்கு என்ன நடந்தது?
http://www.yarl.com/forum/viewtopic.php?t=8138
NTT தொடர்பாக எழுதப்பட்ட வீர வசனங்கள் எத்தனை?
http://www.yarl.com/forum/viewtopic.php?t=8167
எமது தேசம் தொடர்பாக எழுதியவர்கள் எத்தனைபேர்?
http://www.yarl.com/forum/viewtopic.php?t=9354
பிரித்தானிய தகவலில் எழுதியவர்கள் எத்தனைபேர்?http://www.yarl.com/forum/viewtopic.php?t=3105&start=195
மன்னிக்க வேண்டும். யுகேராஜ்
யாழ்களத்தின் பொங்கல் ஒன்று கூடலுக்கு இளைஞன் எடுத்த முயற்சி வரவேற்கப்பட்டாலும், அது எவ்வித பலனையும் இப்போதைக்கு தராது என்பதால் தான் கள உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. மற்றும் சுனாமி முடிந்து ஒரு வருட காலத்தில் அவ்வகையான நிகழ்ச்சியை ஒழுங்கு செய்வதும் சரியாகப் படவில்லை.
மற்றது நீர் சொல்வது போல போராட்டத்துக்கு எம் களஉறவுகள் பங்களிப்பு வழங்காமல் இருக்கின்றனர் என்ற எடுத்தஎடுப்பிலான வாதம் ஏற்புடையதல்ல. பெரும்பாலானவர் இயலுமான உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறனர். ஆனால் இதைப் பகிரங்கப்படுத்தி, புகழ் தேடவேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. அப்படி புகழ் தேடவேண்டியவர்களாக தமிழீழத்தின் வரலாற்றில் தாங்களும் இடம்பெற வேண்டும் என்று தற்புகழ்ச்சி தேடும் நபர்களுக்குத் தான் அது தேவையானதாக இருக்கும்.
எனவே மேலெழுந்த வாரியாக குற்றச்சாட்டுக்களை வைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்
[size=14] ' '

