02-07-2006, 04:24 AM
[size=18]<b>கிளிநொச்சி பயணம் இரத்து அல்ல- ஒத்திவைப்புதான்: உலக வங்கி வதிவிடப் பிரதிநிதி </b>
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளுடன் தாங்கள் நடத்த இருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதே தவிர இரத்துச் செய்யப்படவில்லை என்று உலக வங்கி வதிவிடப் பிரதிநிதி பீற்றர் ஹெரால்ட் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டின்போது பீற்றர் ஹெரால்ட் இதைத் தெரிவித்தார்.
ஜே.வி.பி. மட்டுமல்லாது மேலும் சிலர் தங்களின் கிளிநொச்சி பயணம் குறித்து அதிருப்தி எழுப்பியதால் இந்தப் பயணத்தை ஒத்திவைத்ததாக அவர் கூறினார்.
திட்டமிட்டபடி கிளிநொச்சிக்கான பயணம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் சாதகமான நிலை ஏற்பட்டிருக்குமல்லவா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உலக வங்கி வதிவிடப் பிரதிநிதி,
நாங்கள் அங்கு சென்று பேச்சுவார்த்தைகளை நடத்தியவுடன் இவர்கள் பேச்சுவார்த்தைக்கு இணங்கி வருவார்கள் எனக் கூறமுடியாது என்றும் அப்படி அங்கு பயணம் செய்து உடனடியாக அவர்களை பேச்சுவார்த்தைக்குக் கொண்டு வரும் வகையில் நாங்கள் மந்திரவாதிகள் அல்ல என்றும் கூறினார்.
கிளிநொச்சிக்குப் பயணம் செய்யாததால் சாதகமான நிலையோ பாதகமான நிலையோ ஏற்பட்டதாகக் கூற முடியாது என்றும் கொழும்பில் வெளியாகியுள்ள ஆங்கில பத்திரிகையொன்றில் தாங்கள் ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளவுள்ளதாக விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்டர் தெரிவித்திருப்பதாகவும் அது மகிழ்ச்சியளிக்கும் விடயம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளுடனான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதேயன்றி இரத்துச் செய்யப்படவில்லை என்று தெரிவித்த உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி,
ஜெனீவா பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றார்.
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளுடன் தாங்கள் நடத்த இருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதே தவிர இரத்துச் செய்யப்படவில்லை என்று உலக வங்கி வதிவிடப் பிரதிநிதி பீற்றர் ஹெரால்ட் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டின்போது பீற்றர் ஹெரால்ட் இதைத் தெரிவித்தார்.
ஜே.வி.பி. மட்டுமல்லாது மேலும் சிலர் தங்களின் கிளிநொச்சி பயணம் குறித்து அதிருப்தி எழுப்பியதால் இந்தப் பயணத்தை ஒத்திவைத்ததாக அவர் கூறினார்.
திட்டமிட்டபடி கிளிநொச்சிக்கான பயணம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் சாதகமான நிலை ஏற்பட்டிருக்குமல்லவா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உலக வங்கி வதிவிடப் பிரதிநிதி,
நாங்கள் அங்கு சென்று பேச்சுவார்த்தைகளை நடத்தியவுடன் இவர்கள் பேச்சுவார்த்தைக்கு இணங்கி வருவார்கள் எனக் கூறமுடியாது என்றும் அப்படி அங்கு பயணம் செய்து உடனடியாக அவர்களை பேச்சுவார்த்தைக்குக் கொண்டு வரும் வகையில் நாங்கள் மந்திரவாதிகள் அல்ல என்றும் கூறினார்.
கிளிநொச்சிக்குப் பயணம் செய்யாததால் சாதகமான நிலையோ பாதகமான நிலையோ ஏற்பட்டதாகக் கூற முடியாது என்றும் கொழும்பில் வெளியாகியுள்ள ஆங்கில பத்திரிகையொன்றில் தாங்கள் ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளவுள்ளதாக விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்டர் தெரிவித்திருப்பதாகவும் அது மகிழ்ச்சியளிக்கும் விடயம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளுடனான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதேயன்றி இரத்துச் செய்யப்படவில்லை என்று தெரிவித்த உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி,
ஜெனீவா பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றார்.
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
"

