02-07-2006, 04:18 AM
<b>ஜெனீவா பேச்சுக்களுக்கு விடுதலைப் புலிகள் சார்பில் 6 பேர் குழு பங்கேற்பு </b>
ஜெனீவாவில் பெப்ரவரி 22 ஆம் நாள் சிறிலங்கா அரசாங்கத்துடன் நடைபெறும் யுத்த நிறுத்த அமுலாக்கப் பேச்சுக்களில் விடுதலைப் புலிகளின் சார்பில் 6 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஊடகத்துக்கு விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் தொலைபேசியூடாக அளித்த நேர்காணல்:
விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், விடுதலைப் புலிகளின் இராணுவத் தளபதிகளில் ஒருவரான ஜெயம், சமாதான செயலகத்தைச் சேர்ந்த இளந்திரையன் ஆகியோரும் இக்குழுவிற்கு செயலாளராக அடேல் பாலசிங்கமும் பங்கேற்பார்கள்.
பேச்சுக்களுக்கான நாள் குறித்த விவரம் எமது தலைமைப்பீடத்துக்குத் தெரிவிக்கப்பட்ட பின்னர் ஜெனீவாவுக்கு எமது குழுவினர் புறப்படுவதற்கான அறிவுறுத்தல்கள் விரைவில் வழங்கப்படும்.
சிறிலங்கா அரசாங்கத்துடனான பேச்சுக்களில் முடிவுகளை எதிர்பார்க்கிறோம். விடுதலைப் புலிகள் தரப்பினர் என்ன நிலைப்பாட்டை பேச்சுவர்த்தையில் முன்வைப்பர் என்பதை முன்கூட்டியே தெரிவிக்க இயலாது.
விடுதலைப் புலிகளின் விளக்கமறியலில் உள்ள இரு சிறிலங்கா காவல்துறையினரை விடுதலை செய்வது தொடர்பாக விடுதலைப் புலிகள் நீதிமன்றம்தான் முடிவு செய்யும் என்றார் தயா மாஸ்டர்.
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
ஜெனீவாவில் பெப்ரவரி 22 ஆம் நாள் சிறிலங்கா அரசாங்கத்துடன் நடைபெறும் யுத்த நிறுத்த அமுலாக்கப் பேச்சுக்களில் விடுதலைப் புலிகளின் சார்பில் 6 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஊடகத்துக்கு விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் தொலைபேசியூடாக அளித்த நேர்காணல்:
விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், விடுதலைப் புலிகளின் இராணுவத் தளபதிகளில் ஒருவரான ஜெயம், சமாதான செயலகத்தைச் சேர்ந்த இளந்திரையன் ஆகியோரும் இக்குழுவிற்கு செயலாளராக அடேல் பாலசிங்கமும் பங்கேற்பார்கள்.
பேச்சுக்களுக்கான நாள் குறித்த விவரம் எமது தலைமைப்பீடத்துக்குத் தெரிவிக்கப்பட்ட பின்னர் ஜெனீவாவுக்கு எமது குழுவினர் புறப்படுவதற்கான அறிவுறுத்தல்கள் விரைவில் வழங்கப்படும்.
சிறிலங்கா அரசாங்கத்துடனான பேச்சுக்களில் முடிவுகளை எதிர்பார்க்கிறோம். விடுதலைப் புலிகள் தரப்பினர் என்ன நிலைப்பாட்டை பேச்சுவர்த்தையில் முன்வைப்பர் என்பதை முன்கூட்டியே தெரிவிக்க இயலாது.
விடுதலைப் புலிகளின் விளக்கமறியலில் உள்ள இரு சிறிலங்கா காவல்துறையினரை விடுதலை செய்வது தொடர்பாக விடுதலைப் புலிகள் நீதிமன்றம்தான் முடிவு செய்யும் என்றார் தயா மாஸ்டர்.
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
"

